Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal

   Posted On :  30.08.2023 12:22 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

 

ஒப்பிட்டுச் சுவைப்போம் :

பாப்பா பாட்டு

ஓடி விளையாடு பாப்பா, - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா , - ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு - என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

 

Child's Song

Run about and play my sweet little Child

And idle not sweet little child;

In game and sport have many mates

And revile not any one child.

Rise at dawn to learn your lesson,

Then sing such airs that are soothing,

To games devote the whole evening,

Get habituated thus, oh child!

 

மொழிபெயர்க்க.

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was placed very much by Birbal's wit.

விடை :

பீர்பாலின் நகைச்சுவையுணர்வு

இந்த நகரத்தில் எத்தனை காகங்கள் இருக்கின்றன? என்று அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு கணம் கூட யோசிக்காமல் ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் இருக்கின்றன அரசே என்று பதிலளித்தார்.

எப்படி உன்னால் உறுதியாகச் சொல்ல முடிகிறது என்றார் அக்பர்.

உங்களது ஆட்களை வைத்து எண்ணுங்கள் அரசே என்றார். இதை விட அதிகமான காகங்கள் இருந்தால் சில இங்குள்ள தங்களுடைய உறவினர்களைப் பார்க்க வந்திருக்கும். நான் கூறியதைவிடக் குறைவாக இருந்தால், வேறு இடங்களில் உள்ள தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும் என்று அர்த்தம் என்றார் பீர்பால்.

பீர்பாலுடைய நகைச்சுவையையும், நகைச்சுவை உணர்வையும் எண்ணி அக்பர், திருப்தியும், மன மகிழ்வும் அடைந்தார்.

 

பிழை நீக்கி எழுதுக :

1. மதீனா சிறந்த இசைவல்லுநர் வேண்டும்

விடை :

மதீனா சிறந்த இசைவல்லுநராக வேண்டும்

 2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்

விடை :

 நல்ல தமிழில் எழுதுவோம்

3. பவள விழிதான் பரிசு உரியவள்.

விடை :

 பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

4. துன்பத்தால் பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்

விடை :

துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவன் தான் வெற்றியைப் பெறுவான்.

5. குழலியும் பாடத் தெரியும்

விடை :

குழலிக்கும் பாடத் தெரியும்

 

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

(.கா) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

 

1. அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

விடை :

அலுவலர் வந்தவுடன் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

(அல்ல து)

அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்

 

2. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

விடை :

சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

 

3, பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.

விடை :

பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

 

4. கவலையற்ற எதிர்காலம் ; கல்வியே நிகழ்காலம்.

விடை :

கவலையற்ற எதிர்காலம் அமைய வேண்டுமெனில் கல்வியே நிகழ்காலமாக வேண்டும்.

 

விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றியமைக்க :

புத்தகம் படிப்போம்!    புதியன அறிவோம்!

     புத்தகத் திருவிழா

நாள் : செப்டம்பர் 19 முதல் 28 வரை

இடம் : சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை (முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்)

(நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்)

   அனைவரும் வாரீர்! அறிவுத்திறம் பெறுவீர்!

 விடை :

செய்தி

புத்தகத் திருவிழா

செப் - 18. தஞ்சாவூர்.

 புத்தகத் திருவிழா

 

 தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது.

நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத் திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

6. நிகழ்வினைப் படித்து வினாக்களுக்கு விடையளி.

அண்ணாவின் வாழ்க்கையில் ...

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்ற அறியாமலே திறந்துகாட்டச் செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகு தான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, "தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்'' என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், “இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக் கொள்ளுங்கள்என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா , "நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்ற அலுவலரின் கையில் தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன் " என்றார்.

 

 1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?

விடை :

  மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள் வாழ்த்து மடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் வந்திருப்பது அண்ணா என வருவாய் அலுவலர் அறிந்து கொண்டார்.

 

2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக் கொள்ளச் சொன்னார்?

விடை :

  முதலமைச்சர் என்று தெரியாமல் சோதனைச்சாவடியில் மகிழுந்தை திறந்து காட்டச் சொன்னதால், என்ன நடக்குமோ என்று அச்சப்பட்டு, தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

 

3. அண்ணா வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாராட்டினார்?

விடை :

  சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப் போன்றவர்கள் கையில் தான் இருக்கிறது. உங்களைப் போன்றவர்களே உயர்பதவிக்கு வரவேண்டும் என்று பாராட்டினார்.

 

4. பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற்றொடர்களை உருவாக்குக?

விடை :

தான் : பதவி உயர்வு வழங்கத்தான் உம் பெயரைக் கேட்டேன்.

இன் : சட்டத்தைக் காக்கும் பொறுப்பு அலுவலரின் கையில்தான் உள்ளது

கள் : பொறுப்புணர்வுடன் செயல்படும் அலுவலர்கள் நாட்டிற்குத் தேவை.

 

5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பிடுக:

விடை :

பொறுப்புணர்வு” (அல்லது) “கடமையுணர்வு

 

மொழியோடு விளையாடு


சொற்களைப் பயன்படுத்தி தொடர்களை உருவாக்குக.

மாணவர்கள் - ஆசிரியர்  -  பாடவேளைகரும்பலகை

புத்தகம்  -   எழுதுகோல்அழிப்பான் -  வழிபாட்டுக் கூட்டம்

அறை   -    கல்லூரி   -    உயர்நிலை -  சீருடை

மடிக்கணினி

.கா. வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.

விடை :

1. மாணவர்கள் உயர்நிலை அடைய வேண்டும் என்றார் ஆசிரியர்

2. மாணவர்களே! எழுதுகோலும் அழிப்பானும் கொண்டு வாருங்கள் என்றார் ஆசிரியர்.

3. பாடவேளையின் பொழுது ஆசிரியர் கரும்பலகையில் எழுதினார்.

4. மாணவர்கள் பாடவேளைக்குரிய புத்தகங்களைக் கொண்டுவரவில்லை.

5. வழிபாட்டுக் கூட்டத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டது.

6. ஆசிரியர் அறையிலிருந்து புத்தகம் எடுத்து வா.

7. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி தேவை.

8. சீருடை அணிந்தே வழிபாட்டுக்கூட்டத்திற்கு வரவேண்டும்.

9. கரும்பலகையை அழிப்பானால் சுத்தம் செய்தான்.

10. சீருடையும், மடிக்கணினியும் அரசு விலையின்றிக் கொடுக்கிறது.

 

அகராதியில் காண்க.

(அரங்கு, ஒட்பம், கான், நசை, பொருநர்)

விடை :

அரங்கு - அரங்கம், உள்வீடு

ஒட்பம் - அறிவு, அழகு , நன்மை, மேன்மை

கான் - காடு, மணம், வாய்க்கால் , இசை

நசை - ஆசை, குற்றம், எள்ளல், ஈரம்

பொருநர் - படைவீரன், தலைவன், போர்க்களத்து சென்று பாடும் கூத்தன்.

 

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள், சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர் தண்ணீர்)

1. நா. காமராசனின் கவிதை நூல்:


கருப்பு மலர்கள்

2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல்:


தண்ணீர் தண்ணீர்

3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட ஹெமிங்வேவின் குறு நாவல்:


கிழவனும் கடலும்

4. சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற சிற்பியின் கவிதை நூல்


ஒரு கிராமத்து நதி

5. எஸ் இராமகிருஷ்ணனின் சிறார் நாவல்


சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

 

10. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


'வாழ்க்கையின் கீழ்படியில் நின்றேன்

அண்ணாந்து பார்த்தேன்

உயரச் செல்ல ஏங்கினேன்

பள்ளியின் படியில் கால் வைத்தேன்

கசடற கற்றேன் உயர்ந்தேன்

பட்டங்களும் பதவிகளும் தேடி வந்தன

கல்வியே நம்மை உயர்த்தும்

படிக்கட்டு என உணர்ந்தேன் ......

 

11. கடிதம் எழுதுக:

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

விடை :

அனுப்புநர் 

மா.இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிைைலப்பள்ளி,

நாவலூர்.

பெறுநர்

மேலாளர் அவர்கள்,

நெய்தல் பதிப்பகம்,

மதுரை - 16.

ஐயா,

பொருள் : நூலகத்திற்கு அகராதி அனுப்புதல் தொடர்பாக

  வணக்கம். எங்கள் பள்ளி நாவலூரில் அமைந்துள்ளது. சுமார் 500 மாணவர்கள் பயில்கின்றோம். எங்கள் பள்ளி நூலகத்திற்கு, தங்கள் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள, தமிழ் - தமிழ் - ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதிகள் பத்துப்படிகளைப் பின்வரும் முகவரிக்குப் பதிவு அஞ்சலில் அனுப்பும்படி வேண்டிக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

மா. இனியன்.

 

இடம் : நாவலூர்

நாள் : 06.08.18                                                                  

              

அகராதிகள் அனுப்ப வேண்டிய முகவரி

மா. இனியன்,

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,

நாவலூர்,

வேலூர் மாவட்டம்.

 

செயல்திட்டம்

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள் பற்றிய செய்திப் படத்தொகுப்பினை உருவாக்குக.

மாணவர்களே!

பெண்கல்வி வளர்ச்சிக்கு உழைத்தவர்கள்

மகாத்மா காந்தி, .வெ.ரா. பெரியார், பாரதியார், பாரதிதாசன், கைலாஷ் சத்யார்த்தி

   இவர்களின் புகைப்படங்களைச் சேகரித்து ஒரு படத் தொகுப்பினை உருவாக்குங்கள். இவர்கள் மட்டுமல்ல. இன்னும் கல்விக்காக தொண்டு புரிந்த , உனக்குத் தெரிந்த தலைவர்களின் படங்களையும் சேகரித்துக் கொள்ளுங்கள்.

 

நிற்க அதற்குத் தக


எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.

எவரையும் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும், குறை கூறாமல் பேசுவதும் என் பொறுப்பு.

2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.

பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல் இருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு

விடை :

எனக்குப் பிடித்தவை

1. என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்

2. எனக்குப் படம் வரைவது பிடிக்கும்

3. நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்

 

என் பொறுப்புகள்

1. பிறரைக் காயப்படுத்தாமல் நடந்து கொள்வதும்,

குறை கூறாமல் இருப்பதும் என் பொறுப்பு

 

2. பள்ளி, வீடு, பொதுச்சுவர்களில் வரையாமல்,

எழுதாமல் இருப்பதும், பிறரையும் எழுத, வரைய

விடாமல் தடுப்பதும் என் பொறுப்பு

 

3. நகைச்சுவைக்காகப் பிறரை புண்படுத்தாது,

இகழாது இருப்பது என் பொறுப்பு

 

இவ்வாறு, நமக்குப் பிடித்தமான செயல்களைச் செய்கின்ற பொழுது, எந்நிலையிலும் பிறரைப் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாது இருப்பது நம் பொறுப்பாகும்.

 

கலைச்சொல் அறிவோம்

சமூக சீர்திருத்தவாதி : (Social reformer)

தன் கொள்கைகளாலும், செயல்களாலும் சமூக நிலையை மாற்ற முயற்சிப்பவர்.

தன்னார்வலர் (volunteer)

தானாகவே முன் வந்து சக மனிதர்க்கும், சமூகத்துக்கும் நற்செயல் செய்பவர்.

களர் நிலம் (Saline soil)

நற்பயிர்கள் வளர இயலாத பண்படாத உவர் நிலம்

சொற்றொடர் (Sentence)

ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் அமைந்து பொருள் தரும் வகையில் அமைவது


அறிவை விரிவு செய் 

ஓய்ந்திருக்கலாகாது - கல்விச் சிறுகதைகள் (தொகுப்பு: அரசி -ஆதிவள்ளியப்பன்) 

முதல் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ் 

கல்வியில் நாடகம் - பிரளயன் 

மலாலா - கரும்பலகை யுத்தம்


இணையச் செயல்பாடுகள்

சிதறியதைச் சேகரிப்போமா!


படிகள்

கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி pongutamil என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.

செயலியைத் திறந்தவுடன் மேகங்களுக்கு மத்தியில் பூட்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் முதலாவதைத் தெரிவு செய்துகொள்ளவும்.

திரையின் பின் மெலிதாய்த் தோன்றும் படத்தின் மேல் சிதறிக் கிடக்கும் படங்களை ஒன்று சேர்த்து உண்மையான வடிவத்தை உருவாக்குக.

எடுத்துக்காட்டாகத் தமிழரின் நீர் மேலாண்மையை உணர்த்தும் கல்லணைப் படத்தை ஒன்று சேர்க்க.


செயல்பாட்டிற்கான உரலி

https://play.google.com/store/apps/details?

id=com.EL4.PonguTamil

 

Tags : Chapter 5 | 9th Tamil இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 5 : Kasadera mozidhal : Tamil Language Exercise - Questions and Answers Chapter 5 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல் : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 5 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 5 : கசடற மொழிதல்