நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | பருவம் 1 | அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - விரவுதல் | 6th Science : Term 1 Unit 3 : Matter Around Us
விரவுதல்
மேசையின் மீது ஒரு புத்தகத்தை வைக்கவும். அதை நகர்த்தாமல் ஐந்து
நிமிடம் கவனி. ஒரு குவளை நீரை எடுத்துக்கொண்டு அதில் எழுதுகோலைப் பயன்படுத்தி ஒரு துளி
மையைச் சேர்க்கவும். அதனை அசைக்காமல் அல்லது கலக்காமல் வைத்திருக்கவும். இப்பொழுது
அறையின் ஒரு ஊதுவத்தியை ஏற்றி வைக்கவும்.
கீழ்க்காணும்
கேள்விகளுக்கு விடையளி.
❖ புத்தகம் நகர்கிறதா?
❖ நீல மையின் துகள்கள் நகர்ந்து
தன்னிச்சையாக நீரில் பரவுகின்றனவா? அது கலப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்கிறது?
❖ அறையின் எந்தப் பகுதியில்
நீ நின்றாலும் ஊதுவத்தியின் மணத்தை நுகரமுடிகிறதா?
❖ எவ்வளவு விரைவாக மணம் பரவுகிறது?
அது எப்படிப் பரவுகிறது?
வாயுக்கள் மற்றும் திரவங்களின்துகள்கள் எளிதாகவும் வேகமாகவும்
நகர்கின்றன என்று நாம் கூறலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைத்துக்கொள்ளும் வகையில்
துகள்கள் பரவும் பண்பையே விரவுதல் என்கிறோம். திண்மங்களில் உள்ள துகள்கள் நெருக்கமாக
அமைந்துள்ளதால் அவை திரவம் மற்றும் வாயுக்களின் துகள்களைப்போல பரவாது. எனவே மை துகள்கள்
மற்றும் புகைத் துகள்கள் அங்குமிங்கும் விரவுகின்றன. ஆனால், புத்தகம் மேசைமீது அப்படியே
இருக்கிறது.
செயல்பாடு 4
பழச்சாறு
போன்ற திரவத்தை இரண்டு பாக்கெட்டுகள் எடுத்துக்கொள். இரண்டு பாக்கெட்டுகளிலும் 100
மிலி என் எழுதப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் உள்ள பழச்சாறு போன்ற திரவத்தை வெவ்வேறு
வடிவமுள்ள (A மற்றும் B) குவளைகளில் ஊற்றவும்.
•
பழச்சாறின் வடிவம் மாறுகிறதா? ஆம்/இல்லை
ஒரு
திரவத்தை நிரப்ப கொள்கலன் தேவைப்படுகிறது. மேலும், திரவம் கொள்கலனின் வடிவத்தைப் பெறுகிறது.
ஏனெனில், திரவத் துகள்கள் ஒன்றன்மீது ஒன்று நழுவி நகர்கின்றன.
•
ஒரு பெரிய கலன் அல்லது சிறிய கலனில் ஊற்றப்படும்போது அவற்றின் பருமன் மாறுகிறதா? ஆம்/இல்லை
இரண்டு
கலன்களிலும் பழச்சாறின் அளவு சமமாக உள்ளது.
•
பருமன் மாறியுள்ளாதா இல்லையா என்பதை நீ எவ்வாறு அறிவாய்?
பெரிய
கலனில் இருந்தாலும் அல்லது சிறிய கலனில் இருந்தாலும் திரவத்தின் பருமன் ஒன்றாக இருக்கும்.
ஆனால், அதன் வடிவம் மாறுகிறது.
செயல்பாடு 5
காற்று
நிரப்பப்படாத சைக்கிள் டியூபினை எடுத்துக்கொள். அதில் காற்றை நிரப்பி பின்பு அதைத்
தூக்கிப்பார். அதன் நிறையில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா? காற்றுக்கு நிறை உண்டு என
அறிகிறாயா?
காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்; அதற்கு நிறையும் உண்டு ஆகவே,
நம்மால் காணமுடியாத காற்றும் ஒரு பருப்பொருளே.பருப்பொருள்களைப் பற்றி தெரிந்துகொள்ள
முயற்சி செய்வோம். மேலும் சோதித்துப் பாருங்கள்.
1. நொறுங்கும் மற்றும் ஒளி ஊடுறுவும் தன்மையுள்ள பொருள்களைக்
கூறுக -----------------------------
2. நீளும் தன்மையுள்ள பொருள் ஒன்றைக் கூறுக---------------------
3. வளையும்
தன்மையுள்ள இரண்டு பொருள்களைக் கூறுக ----------------------