வளரிளம் பருவமடைதல் | அலகு 20 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துத் தேவைகள் | 8th Science : Chapter 20 : Reaching the age of Adolescence
வளரிளம் பருவத்தினரின் ஊட்டச்சத்துத் தேவைகள்
வளரிளம் பருவம் என்பது விரைவான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான
ஒரு நிலையாகும். எனவே, முறையான வளர்ச்சி மற்றும் உடல் செயல்பாடுகளுக்கு சரியான ஆற்றல்
மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உணவு தேவைப்படுகிறது. வளரிளம் பருவத்தில் சரிவிகித உணவு
மிகவும் முக்கியமானதாகும். சரிவிகித உணவில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகள்
மற்றும் வைட்டமின்கள் தேவையான விகிதத்தில் அடங்கியுள்ளன. இந்தியாவில் சரிவிகித உணவு
என்பது ரொட்டி, சோறு, பருப்பு வகைகள், பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை
உள்ளடக்கி உள்ளது.
இப்பருவத்தில் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உடல் வளர்ச்சியைத்
தருப்பது மட்டுமல்லாமல், அறிவு வளர்ச்சியையும் பாதிக்கின்றன. மேலும், இது பாலியல்முதிர்ச்சியையும்
தாமதப்படுத்துகிறது. இந்த வளர்ச்சிக் காலத்தில் புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை
எடுத்துக் கொள்வது அவசியமானதாகும். இவை தவிர, வளரிளம் பருவத்தினருக்கு பின்வரும் சத்துக்கள்
உணவில் தேவைப்படுகின்றன.
செயல்பாடு
4
சரிவிகித
உணவு பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரித்து விளக்கப்படம் தயாரிக்கவும். அதனை உங்கள்
வகுப்பில் காட்சிப்படுத்தி முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கவும்.
கனிமங்கள்
வளரிளம் பருவத்தில் எலும்பின் எடை மற்றும் இரத்தத்தின் கனஅளவு
அதிகரிப்பதால், உடலுக்கு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற கனிமங்கள் தேவைப்படுகின்றன.
கால்சியம்
நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் உண்டாகும். ஆஸ்டியோபோரோசிஸைத்
(எலும்பு உடையும் தன்மை) தடுக்க கால்சியத்தை அதிக அளவில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
இது பால் மற்றும் பால் பொருள்களில் காணப்படுகிறது. பால் ஒரு சரிவிகித உணவாகும்.
அயோடின்
தைராய்டு சுரப்பி தொடர்பான நோய்களைத் தடுக்க இது உதவுகிறது.
இரும்பு
இரத்தத்தை உருவாக்குவதில் இரும்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள், வெல்லம், இறைச்சி,
சிட்ரஸ் பழங்கள், நெல்லிக்காய் மற்றும் முழு பருப்பு வகைகள் வளரிளம் பருவத்தினருக்கு
உகந்தவையாகும். உணவில் உள்ள இரும்புச் சத்துக் குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது.
எனவே, வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு அவசியமாகும்.
மாதவிடாய்
நேரத்தில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு பெண்கள், செய்ய அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்த
உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.