புயல்
முக்கியமான
இயற்கை பேரிடர்களில் இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்துவது
புயலாகும். இந்தியாவின் கடலோர எல்லையானது 7,516
கி.மீ
ஆகும். உலகின் வெப்பமண்டலப் புயலில் 10 சதவீதம்
இந்தியாவில் உருவாகிறது.
ஏறக்குறைய 71%
புயல்
பாதிப்புப் பகுதியானது இந்தியாவின் 10 மாநிலங்களில்
காணப் படுகின்றது (குஜராத், மகாராஷ்டிரா,
கோவா,
கர்நாடகா,
கேரளா,
தமிழ்நாடு,
புதுச்சேரி,
ஆந்திரப்பிரதேசம்,
ஒடிசா
மற்றும் மேற்கு வங்காளம்). அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவு
பகுதிகளிலும் புயல் உருவாகலாம்.
தமிழ்நாட்டில்
பெரும்பாலும் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்கள்
தமிழ்நாட்டில்
உள்ள 13 கடலோர மாவட்டங்கள்
மே - ஜுன் மற்றும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் புயலால் பாதிக்கப்படுகின்றது.
அம்மாவட்டங்கள் பின்வருமாறு: திருவள்ளூர்,
சென்னை, காஞ்சிபுரம்,
விழுப்புரம்,
கடலூர்,
நாகப்பட்டினம், திருவாரூர்,
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை,
ராமநாதபுரம்,
தூத்துக்குடி,
திருநெல்வேலி மற்றும்
கன்னியாகுமரி.
ஒவ்வொரு
வருடமும் சராசரியாக 5 அல்லது 6
வெப்பமண்டல
புயல்கள் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலில் உருவாகி கடலோரப் பகுதிகளைத்
தாக்குகின்றன. இவற்றில் இரண்டு அல்லது மூன்று
புயல்கள் மிகவும் தீவிரமானதாக இருக்கும்.
புயல் கரையை நெருங்கும் போது
பலத்த காற்று, பலத்த மழை,
புயல்
அலைகள் மற்றும் ஆற்று வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் கடுமையான இழப்பு அல்லது சேதம்
ஏற்படும். வங்காள விரிகுடாவின் வடக்கு பகுதியில் உள்ள அகலமான மற்றும் ஆழமில்லாத
பகுதிகளில் கடல் சீற்றத்தின் விளைவுகள் அதிகமாக உள்ளது. பெரும்பாலான புயல்கள்
வங்காள விரிகுடாவில் உருவாகி அதனை தொடர்ந்து அரபிக் கடலிலும் உருவாகும். அதன்
விகிதமானது ஏறக்குறைய 4:1 ஆகும். புயலின் போது மணிக்கு
65 கி.மீ முதல் 117
கி.மீ
வேகத்தில் காற்று வீசும்.
புயல் வருவதற்கு முன் செய்ய வேண்டியவை
1. தாழ்வான பகுதியிலிருந்து உயரமான பகுதிகளுக்குச்
செல்ல வேண்டும்.
2. பழைய கட்டடங்களில் வசிப்பவர்கள் தற்காலிகமாக
பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். உடைமைகள்,
ஆவணங்கள்
மற்றும் அணிகலன்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
3. பேட்டரியால் இயங்கும் வானொலிப்பெட்டி,
பிளாஸ்டிக்
டார்ச் விளக்கு, மண்ணெண்ணெய்,
தீப்பெட்டி
முதலியவற்றைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருக்க வேண்டும்.
4. முதலுதவி சாதனங்களைத் தயார் நிலையில்
வைத்திருக்க வேண்டும்.
5. குறைந்தது ஏழு நாட்களுக்குத் தேவையான உணவுப்
பொருள், எரிபொருள்,
குடிநீர்,
உயிர்காக்கும்
மருந்து முதலியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
6. கால்நடைகள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை
பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
7.
வேகமாக
நெருங்கி வருகின்ற புயல் மேகங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் பலத்த
காற்று வருவதை பல நிமிடங்களுக்கு முன்பாகவே கணிக்க இயலும்.
புயலின் போது
1. புயலின் போது கட்டிடத்திற்கு உள்ளே இருந்தால்
கண்டிப்பாக ஜன்னல் மற்றும் கதவுகளை மூட வேண்டும். வீட்டிற்குள் இருப்பது நன்று.
2. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட வேண்டும்.
3. கண், மூக்கு,
வாய்
ஆகியவற்றை தூசிகளிலிருந்து பாதுகாக்க கைகளால் அல்லது துணியால் மூடிக்கொள்ள
வேண்டும்.
4. நீங்கள் காட்டுப் பகுதியில் இருந்தால்
காற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நீங்கள் பாதுகாப்பான இடத்தினை தேடவும்,
அவ்வாறான
இடம் கிடைக்கவில்லை என்றால் தரையில் படுத்துக்கொள்ளவும்.
5. நீங்கள் வாகனத்தில் இருந்தால்,
ஜன்னல்
கதவுகளை மூடிவிட்டு வாகனத்தின் உள்ளே இருப்பது நன்று. நிலையற்ற பொருட்களின் கீழ்
வாகனத்தை நிறுத்த வேண்டாம், ஏனென்றால் அவை உடைந்து வாகனத்தின் மேல்
விழுந்து விடும்.
புயலுக்குப் பின்
1. மின்சாதனங்கள் மற்றும் எரிவாயுவை அணைத்து
விடவும். மேலும் அனைத்து மின்சாதனங்களையும் மின் இணைப்பில் இருந்து துண்டித்து
விடவும்.
2. புயலுக்குப் பின் பாம்பு மற்றும் பிற
விலங்குகளிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
3. வெளி இடங்களை சுற்றி பார்க்க செல்ல வேண்டாம்.
4. பழுதடைந்த மின் கம்பிகள்,
முறிந்த
மரங்கள் மற்றும் வெள்ளநீர் இவற்றிலிருந்து நாம் தொலைவில் இருத்தல் வேண்டும்.
5. கொதித்த மற்றும் வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கப்
பயன்படுத்த வேண்டும்.