Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி

பெருஞ்சித்திரனார் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி | 6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean

   Posted On :  23.06.2023 07:29 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்

கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி - பெருஞ்சித்திரனார் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் - ஒன்று

கவிதைப்பேழை

தமிழ்க்கும்மி

 


நுழையும்முன்

கூட்டமாகக்கூடிக் கும்மியடித்துப் பாடி ஆடுவது மகிழ்ச்சியாள அனுபவம்கும்மியில் தமிழைப் போற்றிப்பாடி அடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாகும்வாருங்கள்தமிழின் பெருமையை வாயாரப் பேசலாம்காதாரக் கேட்கலாம்இசையோடு பாடலாம்கும்மி கொட்டி ஆடலாம்.



கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி இளங்

கோதையரே கும்மி கொட்டுங்கடி - நிலம்

எட்டுத் திசையிலும் செத்தமிழின் புகழ்

எட்டிடவே கும்மி கொட்டுங்கடி!

 

ஊழி பலநாறு கண்டதுவாம் அறிவு

ஊற்றெனும் நூல்பல கொண்டதுவாம் பெரும்

அழிப் பெருக்கிற்கும் காலத்திற்கும் முற்றும்

அழியாமலே நிலை நின்றதுவாம்!

 

பொய் அகற்றும் உள்ளப் பூட்டறுக்கும் - அன்பு

பூண்டவரின் இன்பப் பாட்டிருக்கும் – உயிர்

மெய்புகட்டும் அறமேன்மை கிட்டும் இந்த

மேதினி வாழ்வழி காட்டிருக்கும் !

பெருஞ்சித்திரனார்

 

சொல்லும் பொருளும்

ஆழிப் பெருக்கு - கடல் கோள்

மேதினி - உலகம்

ஊழி - நீண்டதொருகாலப்பகுதி

உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை

 

பாடலின் பொருள்

இளம்பெண்களேதமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவிடும் வகையில் கைகளைச் கொட்டிக் கும்மியடிப்போம்.

பல நூறு ஆண்டுகளைக் கண்டது தமிழ்மொழிஅறிவு ஊற்றாகிய நூல்கள் பலவற்றைக் கொண்ட மொழி.பெரும் கடல் சீற்றங்கள்கால மாற்றங்கள் ஆகிய எவற்றாலும் அழியாமல் நிலைத்திருக்கும் மொழி.

தமிழ்பொய்யை அகற்றும் மொழிஅது மனத்தின் அறியாமையை நீக்கும் மொழிஅன்புடைய பலரின் இன்பம் தரும் பாடல்கள் நிறைந்த மொழிஉயிர் போன்ற உண்மையை ஊட்டும் மொழி உயர்ந்த அறத்தைத் தரும் மொழிஇந்த உலகம் சிறந்து வாழ்வதற்கான வழிகளையும் காட்டும் மொழி தமிழ்மொழி.

 

நூல் வெளி


பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் மாணிக்கம்இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்கனிச்சாறுகொய்யாக்கனிபாவியக்கொத்துநூறாசிரியம் முதலான நூல்களை இயற்றியுள்ளார்தென்மொழி, தமிழ்ச்சிட்டுதமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தினார்தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் இவர்.

இப்பாடல் கனிச்சாறு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளதுஇந்நூல் எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளதுஇது தமிழுணர்வு நிறைந்த பாடல்களைக் கொண்டது.

Tags : by Peruchithiranar | Term 1 Chapter 1 | 6th Tamil பெருஞ்சித்திரனார் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 1 Chapter 1 : Tamilthean : Poem: Tamil kummi by Peruchithiranar | Term 1 Chapter 1 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன் : கவிதைப்பேழை : தமிழ்க்கும்மி - பெருஞ்சித்திரனார் | பருவம் 1 இயல் 1 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ்த்தேன்