Home | 9 ஆம் வகுப்பு | 9வது தமிழ் | கவிதைப்பேழை: யசோதர காவியம்

இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: யசோதர காவியம் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane

   Posted On :  19.08.2023 09:17 am

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே

கவிதைப்பேழை: யசோதர காவியம்

9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கவிதைப்பேழை: யசோதர காவியம் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

அறம் -

கவிதைப் பேழை

யசோதர காவியம்



நுழையும்முன்

படித்து இன்புற மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளை அறிவுறுத்த உதவுவனவும் இலக்கியங்களே! உலகப் பொதுமறையாம் திருக்குறள் தொடங்கி அறம் சார்ந்த தனித்துவ இலக்கியங்கள் தமிழில் உள்ளன. அவ்விலக்கியங்கள் காட்டும் வாழ்க்கைப்பாதை உயர்வானது; அப்பாதையில் பயணித்தால் வாழ்க்கையை வளமாக்கலாம். வாருங்கள் அறத்தேரின் வடம் பிடிப்போம்!


ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக 

போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக 

நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக 

காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.* 1405

சொல்லும் பொருளும்

அறம் - நற்செயல்; 

வெகுளி- சினம்; 

ஞானம் - அறிவு; 

விரதம் – மேற்கொண்ட நன்னெறி.

பாடலின்பொருள்

நாம் ஒரு செயலைச் செய்வதென்றால் அச்செயல் பயன்தரத்தக்க நற்செயலாக இருத்தல் வேண்டும்; நம்மிடம் உள்ள தீய பண்புகளை நீக்கிட வேண்டுமாயின் முதலில் சினத்தை நீக்கவேண்டும்; ஆராய  வேண்டுமானால் மெய்யறிவு நூல்களை ஆராய வேண்டும்; இடைவிடாது போற்றிக் காக்க வேண்டுமானால் தாம் கொண்ட நன்னெறியினைக் காக்க வேண்டும்.

இலக்கணக் குறிப்பு

ஆக்குக, போக்குக, நோக்குக, - வியங்கோள் வினைமுற்றுகள்

பகுபத உறுப்பிலக்கணம்

போக்குக = போக்கு+க

போக்கு - பகுதி

க - வியங்கோள் வினைமுற்று விகுதி


நூல் வெளி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று யசோதர காவியம். இந்நூல் வடமொழியிலிருந்து தமிழில் தழுவி எழுதப் பெற்றதாகும். இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை . இது சமண முனிவர் ஒருவரால் இயற்றப்பட்டது என்பர். யசோதர காவியம், யசோதரன் என்னும் அவந்தி நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது. இந்நூல் ஐந்து சருக்கங்களைக் கொண்டது; பாடல்கள் எண்ணிக்கை 320 எனவும் 330 எனவும் கருதுவர்.


Tags : Chapter 8 | 9th Tamil இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ்.
9th Tamil : Chapter 8 : Enthalai kadane : Poem: Yashothara kaviyam Chapter 8 | 9th Tamil in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே : கவிதைப்பேழை: யசோதர காவியம் - இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 8 : என்தலைக் கடனே