இயல் 8 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 8 : Enthalai kadane
மொழியை ஆள்வோம்
மொழி
பெயர்க்க.
Once Buddha and his disciples were thirsty.
They reached a lake. But it was muddy because somebody just finished washing
their clothes. Buddha asked his disciples to take a little rest there by the
tree. After half an hour the disciples noticed that the water was very clear.
Buddha said to them,"You let the water and the mud be settled down on its
own. Your mind is also like that. When it is disturbed, just let it be. Give a
little time. It will settle down on its own. We can judge and take best
decisions of our life when we stay calm.”
விடை :
ஒருமுறை புத்தரும், அவருடைய சீடர்களும் மிகுந்த தாகத்துடன் இருந்தனர். ஓர் ஏரியை அடைந்தனர். யாரோ ஒருவர் தன் துணிகளைத் துவைத்திருந்தபடியால், ஏரி நீர் கலங்கி, சேருடன் காணப்பட்டது. புத்தர் தன் சீடர்களை நோக்கி சற்று நேரம் இம்மரத்தடியில் அமைதியாக இளைப்பாறுவோம் என்றார். அரைமணி நேரம் கழித்து அவருடைய சீடர்கள் ஏரியை உற்றுப் பார்த்தனர். அழுக்குகள் ஒதுங்கிவிட்டன. சேறும் நீரின் அடி ஆழத்திற்குச் சென்று படிந்து விட்டது. தண்ணீர் மிகவும் தெளிவாகி விட்டது. உங்கள் மனமும் இதைப்போலத்தான், ஏரியை அழுக்கும், சேறும் கலக்கியது போல உங்கள் மனத்தைக் கலக்கும் செயல்கள் நடைபெற்றால் சற்று நேரம் அமைதியாக இருங்கள். அவை கரைந்து, மறைந்து, அழிந்து போய்விடும். அதுவரை அமைதியாக இருந்துவிட்டு பின் உங்கள் முடிவுகளைச் சிந்தித்து எடுங்கள். அதுவே சிறந்த நேர்மையான வாழ்வுக்கு வழியாகும்.
சொற்றொடர்களை
அடைப்புக்குறிக்குள்
உள்ளவாறு
மாற்றுக.
1.
மறுநாள்
வீட்டுக்கு
வருவதாக
முரளி
கூறினார்
(நேர்
கூற்றாக
மாற்றுக).
விடை :
''நான் நாளை வீட்டுக்கு வருவேன்'' என்று முரளி கூறினார்.
2.
தென்னாட்டுப்
பெர்னாட்ஷா
என்று
அறிஞர்
அண்ணாவை
புகழ்கிறோம்
என்று
ஆசிரியர்
கூறினார்
(அயற்
கூற்றாக
மாற்றுக).
விடை :
தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அண்ணா புகழப்படுவதாக ஆசிரியர் கூறினார்.
3.
மார்னிங்
நாஷ்டாவுக்கு
இரண்டு
தோசைகள்
ஹோட்டலில்
சாப்பிட்டான்
(பிறமொழிச்
சொற்களைத்
தமிழாக்குக)
விடை :
காலை சிற்றுண்டிக்கு இரண்டு தோசைகளை உணவு விடுதியில் (உணவகத்தில்) உண்டான் (சாப்பிட்டான்).
4.
அலறும்
மயிலும்,
கூவும்
ஆந்தையும்,
அகவும்
சேவலும்
போன்ற
இயற்கையின்
ஒலிகளை
நாம்
நேசிக்க
வேண்டும்
(ஒலி
மரபுப்
பிழைகளை
திருத்துக).
விடை :
அகவும் மயிலும், அலறும் ஆந்தையும், கூவும் சேவலும், போன்ற இயற்கையின் ஒலிகளை நாம் நேசிக்க வேண்டும்.
5.
கோழிக்
குட்டிகளைப்
பிடிக்க
பூனைக்
குஞ்சுகள்
ஓடின
(பெயர்
மரபுப்
பிழைகளைத்
திருத்துக).
விடை :
கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க பூனைக்குட்டிகள் ஓடின.
அஞ்சல்
அட்டையில்
எழுதுக.
வார
இதழ்
ஒன்றில்
படித்த
கவிதையைப்
பாராட்டி
அந்த
ஆசிரியருக்கு
அஞ்சல்
அட்டையில்
கடிதம்
எழுதுக.
விடை
ஐயா
6.10.2018 ஆம் நாளன்று
தங்கள்
தென்றல்
இதழில்
தன்னம்பிக்கையைப்
பற்றிய
கவிதை
எட்டிவிடும்
என்னும்
தலைப்பில்
இடம்பெற்று
இருந்தது.
அக்கவிதை
படிப்பவர்க்கு
ஊக்கத்தையும்,
புது
முயற்சியையும்
ஊட்டுவதாக
அமைந்திருந்தது.
வெற்றி
பெற
வேண்டும்
என்ற
எண்ணத்தை
இளைய
சமுதாயத்தின்
இதயத்தில்
விதைப்பதாய்
அமைந்திருந்தது.
இதுபோன்ற
கவிதைகளுக்கு
முன்னுரிமை
தருக.
ஆசிரியர்
தென்றல் வார இதழில்.
சென்னை
PIN | 6010004
நன்றி!
நயம் பாராட்டுதல்.
திங்கள்முடி சூடுமலை
தென்றல்
விளை
யாடுமலை
தங்குமுகில்
சூழுமலை
தமிழ்முனிவன்
வாழுமலை
அங்கயற்கண்
அம்மை
திரு
அருள்சுரந்து
பொழிவதெனப்
பொங்கருவி
தூங்குமலை
பொதியமலை
என்மலையே
-குமரகுருபரர்
விடை :
முன்னுரை:
தமிழ் இலக்கியங்கள் உள்ளத்து இன்பத்தைப் பெருக்கும் ஆற்றல் படைத்தன அவை இயற்கையைப் போற்றுவதில் காலத்தைக் கடந்து முன் நிற்கின்றன. அந்த வகையில் பொதிய மலையைப் போற்றும் வண்ணம் அமைந்துள்ள குமரகுருபரரின் பாடலில் காணப்படும் இலக்கிய நயங்களை காண்போம்.
திரண்ட கருத்து:
நிலவைத் தன் மணிமுடியாகச் சூடிய மலை. எப்போதும் தென்றல் தவழ்ந்து விளையாடும் மலை. அகலாது தன்னகத்தே தங்குகின்ற முகில் கூட்டங்கள் சூழ்ந்த மலை. தமிழ் முனிவன் அகத்தியன் வாழ்ந்த மலை.
அங்கயற்கண்ணியாம் மீனாட்சி கண் திறந்து அருள் சுரந்து பொழிவதைப் போல் பொங்குகின்ற அருவிகள் விழுகின்ற மலை. பொதிய மலையாம் என் மலையே.
மையக்கருத்து:
பொதிகை மலையின் இயற்கைப் பேரழகு, தமிழ் வளர்த்த மலை, அருவி சூழ்ந்த மலை மேகங்கள் தவழும் மலை எனப் பொதிகையின் அழகைக் குமரகுருபரர் மையமாக வைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ, சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை நயம் எனப்படும்.
சான்று :
தங்கு முகில் - தமிழ் முனி
அங்கயற்கண்ணி - அருள் சுரந்து
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று:
திங்கள் - தங்கு
அங்கயற் - பொங்கருவி
அணி நயம்:
பொதிகை மலையில் விழும் அருவி “அங்கயற்கண் அம்மை திரு அருள் சுரந்து பொழிவதென” என்னும் அடியில் உவமையணி அமைந்துள்ளது.
சந்தநயம்:
அறுசீர்ச் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று செப்பலோசையுடன் இனிமையாக அமைந்துள்ளது.
இயைபுத் தொடை:
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வரத் தொடுப்பது இயைபுத் தொடை.
சான்று:
சூடு மலை, யாடு மலை, வாழு மலை
முடிவுரை:
குமரகுருபரரின் இப்பாடல் இன்பம் தரும் இன்சுவையுடன் அமைந்து பொதிகை மலையின் புகழைப் பறைசாற்றுகிறது. இது போன்ற பாடல்களைப் படித்து இன்புறுவாமாக.
மொழியோடு விளையாடு
1.
பொருத்தமான
வாய்பாடுகளை
வட்டமிடுக.
பகலவன் - காசு / ( கருவிளம் ) / கூவிளங்கனி
மலர்ச்சி - கூவிளம் / ( புளிமா ) / கருவிளம்
தாவோவியம் - ( தேமாங்கனி ) / தேமா/பிறப்பு
வெற்றிடம் - நாள் / ( கூவிளம் ) / புளிமா
பூங்குட்டி - கருவிளங்கனி/மலர்/ / (தேமாங்காய்)
2.
அகராதியில்
காண்க.
வயம் - வலிமை, வெற்றி, வேட்கை , பறவை, வசம், குதிரை, ஆடு, செழித்தல், பெருகுதல், மிகுதல், நீடுவாழ்தல், நிகழ்தல்.
விடை :
துலக்கம் - விளக்கம், ஒளி, பளபளப்பு, மெருகு, தெளிவு.
நடலை - வஞ்சனை, துன்பம், பொய்மை, பாசாங்கு , அசைவு.
முயல்.
ஓதம் - ஈரம், வெள்ளம், கடல் அலை , ஒலி , பெருமை, வாதநோய்.
பொலிதல் -
3.
வினைத்தொகையை
பொருத்தி
எழுதுக.
(வளர்தமிழ், விளைநிலம், குளிர்காற்று, விரிவானம், உயர்மதில், நீள்வீதி, கரை விளக்கு, மூடுபனி, வளர்பிறை, தளிர் பூ)
விடை :
. வளர்பிறை நிலவுடன் விரிவானம் அழகாகக் காட்சியளிக்கிறது.
. தளிர்பூங்கொடிகளும், விளைநிலங்களும், மனதைக் கொள்ளையடிக்கின்றன.
. நீள்வீதிகள் அனைத்தும் மூடுபனியில் மூழ்கிக் கிடக்கின்றன.
. மெல்ல வீசும் குளிர்காற்றும் வளர்தமிழ் புகழ்பாடுகிறது.
. தொலைவில் கலங்கரை விளக்கின் ஒளி உயர்மதில் சுவரை ஒளிரச் செய்கிறது.
பொருத்துக:
நேர்
நேர்
நிரை
- கருவிளங்காய்
நிரை/நிரை/நேர்
- கூவிளம்
நேர்/நிரை
- தேமாங்காய்
நிரை
நிரை
- தேமாங்கனி
நேர்/நேர்/நேர்
– கருவிளம்
விடை:
நேர்/நேர்/நிரை - தேமாங்கனி
நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்
நேர்/நிரை - கூவிளம்
நிரை/நிரை - கருவிளம்
நேர்/நேர்/நேர் - தேமாங்காய்
4.
காட்சியைக்
கண்டு
கவினுற
எழுதுக.
உலகையே புரட்டிப் போடும்
உன்னத வலிமை
எழுதுகோலுக்கு உண்டு
செங்கோலின் வலிமையால்
உயர்ந்ததை விட
எழுதுகோலின் வலிமையால்
உயர்ந்த நாடுகள் பல உண்டு
எழுத்தையும் போற்றுவோம்....
எழுதுகோலையும் போற்றுவோம்....
கலைச்சொல் அறிவோம்
எழுத்துச் சீர்திருத்தம் - (Reforming the letters)
பெரியாரால் தமிழ்மொழியில் ஏற்படுத்தப்பட்டது.
எழுத்துரு - (font)
அச்சில் எழுத்துக்களின் வடிவமைப்பு அளவைக் குறிப்பது.
மெய்யியல் - (philosophy)
வாழ்வியல் உண்மைகளைத் தத்துவ இலக்கியமாக, கருத்துகளாக கூறுவது.
அசை - (syllable)
சொல்லைப் பிரித்தல் (சீர் பிரித்தல்).
இயைபுத்தொடை - (Rhyme)
செய்யுளில் அடிதோறும் இறுதிச் சொல் அல்லது எழுத்து ஒன்றி வருவது.
நிற்க அதற்குத் தக
ஒரு
நல்ல
தோழியாக/தோழராக
நண்பர்களுக்குச்
செய்யவேண்டியது.
விடை :
அ) எழுதுபொருள்களை நண்பர்களுக்குக் கொடுத்து உதவுவது.
ஆ) விடுப்பு எடுத்த நண்பர்களுக்கு ஏடுகள் கொடுத்து உதவுதல், வகுப்பில் நடந்தவற்றைப் பகிர்தல்.
இ) நல்ல பண்புகளைப் பாராட்டி ஊக்குவித்தல்.
ஈ) குறைகளை நயமுடன், புண்படா வகையில் சுட்டிக்காட்டுதல்.
உ) இடர்வரும் வேளையில் இனிமையான, இதமான சொற்களால் தேற்றுதல்.
அறிவை விரிவு செய்
பெரியாரின் சிந்தனைகள் - வே. ஆனைமுத்து
அஞ்சல் தலைகளின் கதை – எஸ்.பி. சட்டர்ஜி (மொழிபெயர்ப்பு - வீ.மு. சாம்பசிவன்)
தங்கைக்கு - மு. வரதராசன், தம்பிக்கு - அறிஞர் அண்ணா