நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் | அலகு 9 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 9 : Matter Around Us
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
1. வெப்பநிலைமானிகளில்
பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
அ. தாமிரம்
ஆ. பாதரசம்
இ. வெள்ளி
ஈ.தங்கம்
விடை: ஆ) பாரதரசம்
2. இரசவாதிகள்
நீரைக் குறிப்பதற்குப் பயன்படுத்திய படக்குறியீடு
3. எந்தத்
தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?
அ.புளுட்டோனியம்
ஆ. நெப்டியூனியம்
இ. யுரேனியம்
ஈ. பாதரசம்
விடை : ஈ) பாதரசம்
4. பாதரசத்தின்
குறியீடு
அ) Ag
ஆ) Hg
இ) Au
ஈ) Pb
விடை : ஆ) Hg
5.கம்பியாக
நீளும் அலோகம் எது? தன்மையைப் பெற்றுள்ள
அ. நைட்ரஜன்
ஆ. ஆக்ஸிஜன்
இ. குளோரின்
ஈ. கார்பன்
விடை : ஈ. கார்பன்
6. உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும்
பண்பு எது?
அ. கம்பியாக நீளும் பண்பு
ஆ. தகடாக விரியும் பண்பு
இ. தகடாக விரியும் பண்பு
ஈ. பளபளப்புத் தன்மை
விடை: ஆ) தகடாக விரியும் பண்பு
7. மின்சாரத்தைக்
கடத்தும் அலோகம்
அ. கார்பன்
ஆ. ஆக்சிஜன்
இ. அலுமினியம்
ஈ. சல்ஃபர்
விடை: அ) கார்பன்
8. கரிக்கோலின்
(பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
அ. கிராஃபைட்
ஆ. வைரம்
இ. அலுமினியம்
ஈ. கந்தகம்
விடை: அ) கிராஃபைட்
9. மூலக்கூறுகளின்
அமைப்பைக் கொண்டு பின்வரும் பொருள்களின் இயற்பியல் நிலைகளை அடையாளம் காண்க.
A
அ. A - வாயு, B- திண்மம், C – திரவம்
ஆ. A - திரவம், B - திண்மம், C -வாயு
இ. A -வாயு, B- திண்மம்,
C – திரவம்
ஈ. A - திரவம், B - வாயு, C- திண்மம்
விடை: அ) A -வாயு, B - திண்மம், C – திரவம்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. உலோகங்களின் பண்புகளையும் அலோகங்களின் பண்புகளையும் பெற்றுள்ள
தனிமங்கள் லோகப்போலிகள்
என அழைக்கப்படுகின்றன.
2. டங்ஸ்டனின் குறியீடு W
3. பெரும்பான்மையான உலோகங்களின் உருகுநிலை அலோகங்களின் உருகு
நிலையைவிட அதிகம்
4. நீரில் உள்ள தனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன்
5. சிலிக்கன் அல்லது ஜெர்மானியம் குறை கடத்தியாகப்
பயன்படுகிறது.
III. பொருத்துக.
அ.
இரும்பு மின்கம்பிகள் தயாரிக்க
தாமிரம் தையல் ஊசி தயாரிக்க
டங்ஸ்டன் இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக
போரான் மின் விளக்கிற்கான இழைகள் செய்ய
விடைகள்
இரும்பு - தையல் ஊசி தயாரிக்க
தாமிரம் - மின்கம்பிகள் தயாரிக்க
டங்ஸ்டன் - மின் விளக்கிற்கான இழைகள் செய்ய
போரான் - இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக
ஆ.
அணு பருப்பொருள்களின் கட்டுமான அலகு
தனிமம் பல்வேறு வகை அணுக்கள்
சேர்மம் ஒரே வகை அணுக்கள்
மூலக்கூறு பருப்பொருளின் மிகச்சிறிய அலகு
விடைகள்
அணு - பருப்பொருள்களின் கட்டுமான அலகு
தனிமம் - ஒரே வகை அணுக்கள்
சேர்மம் - பல்வேறு வகை அணுக்கள்
மூலக்கூறு - பருப்பொருளின் மிகச் சிறிய அலகு
IV. மிகச் சுருக்கமாக விடையளி.
1. கம்பியாக
நீளும் தன்மை என்றால் என்ன?
உலோகங்களை இழுத்து மெல்லிய கம்பியாக மாற்றும்
பண்பிற்கு கம்பியாக நீளும் தன்மை என்று பெயர்.
2. பின்வரும்
சேர்மங்களில் உள்ள தனிமங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
அ. கார்பன்
மோனாக்சைடு
ஆ. சலவை
சோடா
3. பின்வரும்
தனிமங்களின் குறியீடுகளை எழுதுக.
அ. ஆக்சிஜன்
ஆ. தங்கம்
இ. கால்சியம்
ஈ. காட்மியம்
உ.இரும்பு
4. நாம்
உயிர் வாழ்வதற்கு மிக அவசியமானதும், அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும்போது உள்ளிழுத்துக்
கொள்வதுமான அலோகம் எது?
நாம் உயிர்வாழ்வதற்கு மிக அவசியமானதும்,
அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கும் போது உள்ளிழுத்துக்கொள்வதுமான அலோகம் ஆக்சிஜன்
ஆகும்.
5. ஏன்
ஆலய மணிகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன?
உலோகங்கள் தட்டப்படும்போது தனித்துவமான
ஒலி எழுப்பும் பண்பைப் பெற்றுள்ளதால், ஆலய மணிகள் செய்ய பயன்படுகின்றன.
6. வேதிக்குறியீடுகள்
தரும் தகவல்கள் யாவை?
வேதிக்குறியிடுகள் தனிமங்களின் பெயர்களை சுருக்க
வடிவில் குறிக்கின்றன.
7. உலோகப்
போலிகளுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
உலோகப் போலிகள் :
> சிலிக்கன்
> போரான்
8. திரவ
நிலையில் உள்ள ஏதேனும் மூன்று சேர்மங்களைக் குறிப்பிடுக.
திரவ நிலையில் உள்ள மூன்று சேர்மங்கள் –
> நீர்
> கந்தக அமிலம்
> அசிட்டிக் அமிலம் (வினிகர்)
9. உலோகப்
போலிகளின் ஏதேனும் மூன்றைக் குறிப்பிடுக.
உலோகப் போலிகளின் பண்புகள்:
> அறை வெப்பநிலையில் உலோகப் போலிகள் அனைத்தும்
திண்மங்கள்.
>
உலோகப் போலிகளின் இயற்பியல் பண்புகள் உலோகங்களை ஒத்திருக்கின்றன.
> உலோகப்போலிகளின் வேதியியல் பண்புகள் அலோகங்களை
ஒத்திருக்கின்றன.
> உலோகப்போலிகள், உலோகங்களுடன் சேர்ந்து உலோகக்
கலவைகளை ஏற்படுத்துகின்றன.
V. சுருக்கமாக விடையளி.
1. ஊறுகாயை
அலுமினியப் பாத்திரத்தில் வைக்கலாமா? காரணம் கூறுக.
> ஊறுகாயை அலுமினியப் பாத்திரத்தில் வைக்கக்கூடாது.
> ஏனெனில் ஊறுகாயில் உள்ள அமிலங்கள், உலோக
அலுமினியத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் வாயுவை வெளிப்படுத்தும்.
> இதனால் ஊறுகாய் கெட்டுப் போய்விடும்.
2. உலோகங்களுக்கும்
அலோகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் ஏதேனும் நான்கினை அட்டவணைப்படுத்துக.
3. சமையல்
பாத்திரங்கள் ஏன் அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன?
> அலுமினியம் மற்றும் பித்தளை
சிறந்த வெப்பக் கடத்திகள்.
> அலுமினியம் மற்றும் பித்தளை
பாத்திரங்களின் உட்பகுதியில் வெள்ளீயம் பூசப்படுவதால், உணவுப் பொருட்களுடன் அவ் உலோகங்கள்
வினைபுரிவது தடுக்கப்படுகிறது.
> எனவே சமையல் பாத்திரங்கள்
அலுமினியம் மற்றும் பித்தளையில் செய்யப்படுகின்றன.
4. இரசவாதம்
- வரையறு.
குறைந்த மதிப்புடைய உலோகங்களை தங்கமாக மாற்றும்
செயலுக்கு இரசவாதம் என்று பெயர்.
5. பின்வரும்
குறியீடுகளால் குறிக்கப் பெறும் தனிமங்களின் பெயர்களை எழுதுக.
அ.
Na
ஆ.
Ba
இ.W
ஈ..
Al
உ. U
6. ஏதேனும்
ஆறுஅலோகங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் எழுதுக.
7. ஏதேனும்
நான்கு சேர்மங்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக.
8. அலங்கார
நகை தயாரிப்பில் பயன்படும் உலோகங்களைக் குறிப்பிடுக.
அலங்கார நகைத் தயாரிப்பில் பயன்படும் உலோகங்கள்
> தங்கம்
> வெள்ளி
> பிளாட்டினம்
> தாமிரம்.
9. பின்வரும்
சேர்மங்களின் பயன்களைக் குறிப்பிடுக.
அ. ரொட்டிசோடா
ஆ. சலவைத்தூள்
இ. சுட்ட
சுண்ணாம்பு
VII. காரணம் கூறுக.
1. பின்வருவனவற்றிற்கான
காரணங்களை எழுதுக.
அ. உணவுப்
வாருள்களை உறையீடு செய்வதற்கு அலுமினியத் தகடுகள் பயன்படுகின்றன.
> அலுமினியம் உலோகமாதலால் மெல்லிய தகடாக
அடித்து உணவுப் பொருள்களை கட்ட உதவும் உறைகள் செய்யப் பயன்படுகின்றன.
> மேலும் அலுமினியம் பொதுவாக உணவுப்பொருள்களுடன்
வினை புரியாது
ஆ. திரவங்களை
கடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் உலோகங்களால் செய்யப்படுகின்றன.
>
உலோகங்கள்
சிறந்த வெப்பக் கடத்திகள், எனவே திரவங்களை சூடுபடுத்துவதற்கான மூழ்குத் தண்டுகள் செய்யப் பயன்படுகின்றன.
இ. சோடியம், பொட்டாசியம் ஆகிய இரண்டும் மண்ணெண்ணெயின்
உள்ளே வைக்கப்படுகின்றன.
> சோடியம் மற்றும் பொட்டாசியம் காற்றுடன் வினைபுரிந்து ஆக்சைடு
மற்றும் கார்பனேட் படலங்களை உருவாக்குவதால் அவற்றின் நிறம் மங்குகிறது. எனவே காற்றுடன்
வினைபுரிவதை தடுக்க சோடியமும், பொட்டாசியமும் மண்ணெண்ணெயினுள் வைக்கப்படுகிறது. நீருடன்
இவை வினைபுரிவதால் நீரினுள் வைக்க இயலாது.
ஈ. வெப்பநிலைமானிகளில்
பாதரசம் பயன்படுத்தப்படுகிறது.
வெப்பநிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்த காரணம்
> அதன் அதிக அடர்த்தி
> வெப்பத்தினால் சீராக விரிவடையும் அதன் தன்மை
2. கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளைத் தயாரிக்க முடியவில்லை, ஏன்?
கல் அல்லது மரம் போன்ற பொருள்கள் இழுக்கப்படும் போது மெல்லிய கம்பியாக நீளும் பண்பினை பெறவில்லை. எனவே கல் அல்லது மரம் போன்ற பொருள்களில் இருந்து கம்பிகளை தயாரிக்க முடியவில்லை .