இயல் 7 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 7 : Vaaliya Neelanea
மொழியை ஆள்வோம்
படித்துச்
சுவைக்க.
எல்லார்க்கும் பெய்யும் மழை
ஏந்திக்கொள்கிறார்கள் சிலர்
வரமாக
ஏற்றுக்கொள்கிறார்கள் சிலர்
வேறு வழியின்றி
ஒதுங்கிக்கொள்கிறார்கள் சிலர்
ஒத்துக்கொள்ளாதெனப்
பாறையில் விழுந்து
பயன்படாமலே போகின்றன
சில துளிகள்
சாக்கடையில் விழுந்து
சங்கமமாகின்றன சில
ஆனாலும்
எப்போதும் போல
இன்னமும்
எல்லோருக்குமாகப்
பெய்துகொண்டுதான் இருக்கிறது
மழை!
காலை
ஒவ்வொரு முறையும்
காவிரி ஆற்றைக்
கடந்து செல்கையில்
நீந்திக் களித்த நாட்கள்
நினைவுக்கு வந்தன!
குளித்து மகிழ்ந்த ஆற்றை
குழந்தையிடம் காட்டிய போது
அவள் கேட்டாள் .....
'எப்படி அம்மா .....
மணலில் நீந்திக்
குளித்தாய்?"
மொழிபெயர்க்க.
Conversation between two friends meeting by chance at a mall.
Aruna : Hi! Vanmathi! It's great to see you after a long time.
Vanmathi : It's great seeing you. How long has it been? It must be
more than 6 months. I'm doing good. How about you?
Aruna : Fine. I have come with my parents. They are inside the
grocery shop. What about you?
Vanmathi : I came with my father. He has gone to buy tickets for a
3D movie.
Aruna : Which movie?
Vanmathi : Welcome to the jungle.
Aruna Great!I am going to ask my parents to take me to that movie.
விடை:
இரண்டு தோழிகள் வணிகவளாகத்தில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது நடந்த உரையாடல்.
அருணா : வான்மதி, என்ன ஒரு ஆச்சர்யம் நீண்ட நாட்களுக்குப்பின் உன்னைப் பார்க்கிறேன், மகிழ்ச்சி .
வான்மதி : எனக்கும் மகிழ்ச்சியும், ஆச்சர்யமும் தான்! உன்னைப் பார்த்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது. ஆறு மாதங்களுக்கும் மேலாகிவிட்டது. நான் நன்றாக இருக்கிறேன் நீ எப்படி இருக்கிறாய்.
அருணா : நான் என் பெற்றோருடன் வந்தேன். அவர்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் உள்ள பிரிவில் உள்ளார்கள். நீ..?
வான்மதி : நான் என் தந்தையுடன் வந்தேன் இவ்வளாகத்தில் நடைபெறும் முப்பரிமாண (3D) திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்க சென்றிருக்கிறார்.
அருணா : என்ன படம்?
வான்மதி : காட்டுக்குள் வரவேற்பு
அருணா : ஓ... நானும் என் பெற்றோரிடம் அந்தப் படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கேட்க போகின்றேன்.
பொருத்தமான
இடங்களில்
அடைமொழியிட்டு,
சொற்றொடரை
விரிவாக்குக.
1.
புத்தகம்
படிக்கலாம்
(நல்ல,
ஆழ்ந்து,
நாளும்,
தேர்ந்து,
மகிழ்ந்து,
உணர்ந்து)
விடை:
அ) நல்ல புத்தகங்கள் படிக்கலாம்.
ஆ) நல்ல புத்தகத்தில் ஆழ்ந்த கருத்துகளைப் படிக்கலாம்.
இ) நாளும் நல்ல புத்தகம் படிக்கலாம்.
ஈ) நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து படிக்கலாம்.
உ) நல்ல புத்தகங்களை நாளும் மகிழ்ந்து, உணர்ந்து படிக்கலாம்.
2.
விளையாடுவது
நன்று
(ஓடியாடி,
மாலையில்,
சேர்ந்து,
திடலில்,
அனைவருடன்)
விடை:
அ) மாலையில் அனைவருடன் சேர்ந்து விளையாடுவது நன்று.
ஆ) மாலையில் திடலில் ஓடியாடி விளையாடுவது நன்று.
பிழை
நீக்குக.
பெருந்தலைவர்
காமராசர்
பள்ளிப்படிப்பை
நிரைவு
செய்யவிள்ளை
எண்ராலும்
தமிழிலும்
ஆங்கிலத்திலும்
புத்தகங்கள்
படிக்கும்
அலவுக்கு
புலமைகள்
பெற்றிருந்தது
பலருக்குத்
தெரியாது.
ஆங்கிலச்
செய்தி
இதழ்கலை
நாள்தோறும்
படித்தது.
எப்போது
அரையை
விட்டு
வெளியே
போனாலும்
மின்விசிரியை
நிருத்த
மறப்பதில்லை.
வெளியூருக்குச்
செல்லும்போது
தம்முடைய
துணிமனிகளைத்
தாமே
எடுத்துவைத்துக்கொள்வார்.
விடை:
பெருந்தலைவர் காமராசர் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை என்றாலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அளவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச்செய்தி இதழ்களை நாள்தோறும் படித்தது, எப்போது அறையைவிட்டு வெளியே போனாலும் மின்விசிறியை நிறுத்த மறப்பதில்லை. வெளியூருக்கு செல்லும்போது தம்முடைய துணிமணிகளைத் தாமே எடுத்து வைத்துக் கொள்வார்.
கீழ்க்காணும்
பத்தியில்
உள்ள
ஆகுபெயர்களை
அட்டவணைப்படுத்துக.
விமலா
கூடத்தில்
உள்ள
தட்டிலிருந்த
டிசம்பரைத்
தலையில்
சூடிக்கொண்டாள்.
மல்லிகையைப்
படத்திற்குச்
சூட்டினாள்.
அடுப்பிலிருந்து
பாலை
இறக்கினாள்.
பின்பு
தோட்டத்திற்குச்
சென்றாள்.
விமலாவைப்
பார்த்தவுடன்
தோட்டம்
அமைதியானது!
“தலைக்கு
இருநூறு
கொடுங்கம்மா”
என்று
தோட்டத்தில்
வேலை
செய்தவருள்
ஒருவர்
சொன்னார்.
வெள்ளை
மனங்கொண்ட
வேலையாட்களின்
கூலியைக்
குறைக்க
விரும்பாமல்
அதனை
அவளும்
ஏற்றுக்கொண்டாள்.
அவர்கள்
சென்றதும்,
காலையில்
சாப்பிடப்
பொங்கல்
வைத்தாள்.
வீட்டில்
சமையல்
செய்ய,
எந்தெந்தப்
பொருள்கள்
குறைவாக
உள்ளன
என்பதைப்பற்றிச்
சிந்தித்தாள்.
"சாப்பாட்டிற்கு
ஐந்து
கிலோ
வாங்க
வேண்டும்.
தாளிப்பதற்கு
மூன்று
லிட்டர்
வாங்க
வேண்டும்.
துணி
உலர்த்துவதற்கு
நான்கு
மீட்டர்
வாங்க
வேண்டும்”
எனத்
திட்டமிட்டாள்.
அலைபேசி
அழைத்தது.
அரை
நிமிடம்
அலைபேசியில்
வந்த
வயலின்
கேட்டு
மகிழ்ந்தாள்.
பிறகு
எடுத்துப்
பேசினாள்.
கடைக்குப்
போய்விட்டு
வந்த
பிறகு.
பாதியில்
விட்டிருந்த
சிவசங்கரியைப்
படித்து
முடிக்கவேண்டும்
என்று
நினைத்தாள்.
விடை:
டிசம்பரைத் தலையில் சூடிக் கொண்டாள்-
டிசம்பர் என்னும் காலப்பெயர் பூவுக்கு ஆகி வந்ததால்
(காலவாகு பெயர்)
பாலை இறக்கினாள் -
பால் கொதித்த பாத்திரத்தை இறக்கினாள். கருவி பாலுக்கு
ஆகி வந்தது. (கருவியாகு பெயர்)
தலைக்கு இருநூறு -
ஒவ்வொருவருக்கும் என்பதைத் தலை என்னும் சினைப்
பெயரால் உணர்த்துகிறது (சினையாகு பெயர்)
சாப்பாட்டிற்கு ஐந்து கிலோ வாங்க வேண்டும் - 5 கிலோ அரிசியைக் குறிக்க..... எடுத்து அளந்து தருவது (நிறுத்து) (எடுத்தலளவை ஆகுபெயர்)
தாளிப்பதற்கு மூன்று லிட்டர் வாங்கவேண்டும் - முகந்து அளக்கும் எண்ணெய் (முகத்தலளவையாகு பெயர்)
துணி உலர்த்த நான்கு மீட்டர் நீட்டி - அளக்கும் துணி உலர்த்தும் கொடியைக் குறிக்கும் (நீட்டலளவையாகு பெயர்)
சிவசங்கரியை படித்து முடிக்க வேண்டும். - சிவசங்கரி நூலைக் குறிக்கும் .... (கருத்தாவாகு பெயர்)
பயண
அனுபவங்களை
விவரிக்க.
‘எனது
பயணம்'
என்னும்
தலைப்பில்
உங்களது
அனுபவங்களை
வருணித்து
எழுதுக.
விடை:
. இந்த ஆண்டு நான் பயணம் மேற்கொண்ட இடம் வயநாடு ஆகும். கேரளாவின் வற்றாத அழகு கொட்டிக்கிடக்கும் பகுதி இது. எங்கு திரும்பினும் பச்சைப் பசேல் தான். கடல் மட்டத்தில் இருந்து 700 முதல் 2100 மீட்டர் உயரத்தில் அமைந்த பகுதி இது. இயற்கை அன்னை ஆட்சி செய்யும் வனப்பு மிக்க பகுதி.
. வயநாடு மாவட்டத்தில் கல்பெற்றா, மானந்தவாடி, வைத்திரி ஆகிய இடங்கள் முக்கியமானவை.
. இவ்விடங்களில் விலங்குகளின் சரணாலயங்கள் உண்டு. துள்ளித் திரியும் மான் கூட்டம், கூட்டம் கூட்டமாய் செல்லும் யானைகள், எங்கோ கேட்கும் பறவைகள் கரையும் ஓசை என மனதுக்கு இன்பம் தரும் இடம் ஆகும்.
. கல்பெற்றாவில் இருந்து சிறிது தூரம் சென்றால் செம்ப்ரா மலை முகடு உள்ளது. இது வயநாட்டின் உயரமான மலை உச்சியாகும். மலை ஏற்றத்துக்கு சிறந்த இடமாகும். கல்பெற்றாவில் இருந்து 15 கல் தொலைவில் கரலாட் ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி செய்து கொண்டு ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து நாங்கள் குழந்தைகளாகி மகிழ்ந்தோம். வயநாட்டின் அழகுக்கு அழகு சேர்க்கும் அருவிகள் பல உண்டு. அவற்றுள் சிப்பாரா அருவி மிகப் புகழ் பெற்றது.
. 100 அடி முதல் 300 அடி உயரத்தில் இருந்து வரிசைத் தொடராகக் கொட்டிக் கொண்டிருக்கும் அருவிகள் கண்களையும், கருத்தையும் கொள்ளை கொள்கின்றன. அருவியின் தடாகத்தில் நீந்தி மகிழ்ந்து புத்துணர்வு பெற்றோம். இங்கு அபூர்வ மூலிகைகள், தங்குவதற்கு மரவீடுகள், இரவில் மிரளச் செய்யும் விலங்குகள் கூட்டம் என நம்மை இன்னொரு உலகுக்கு அழைத்துச் செல்லும். நீங்களும் ஒரு முறை சென்று வரலாமே.
"இயற்கை ஆட்சி செய்யும் இவ்விடம் அனைவருக்கும் பிடிக்கும்"
நயம் பாராட்டுக.
வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்
வளைந்து
செல்
கால்களால்
ஆறே!
அயலுள
ஓடைத்
தாமரை
கொட்டி
ஆம்பலின்
இதழ்களை
விரித்தாய்
கயலிடைச்
செங்கண்கருவரால்
வாளை
கரைவளர்
தென்னையில்
பாயப்
பெயரிடைப்
பட்ட
வானெனத்
தோன்றும்
பெருங்குளம்
நிறைந்து
விட்டாயே!
- வாணிதாசன்
விடை :
முன்னுரை:
தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் உள்ளன. அவை கற்போரின் மனத்தைப் பெரிதும் கவர வல்லன. அந்த வகையில் வாணிதாசன் பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
வளைந்து செல்லும் கால்வாய்கள் மூலம் ஆறே வயல்வெளியில் புகுந்தாய் மணிபோன்ற கதிர்களை விளையச் செய்தாய். அருகில் உள்ள ஓடைகள் குளங்களை நிறைத்தாய். தாமரை கொட்டி, ஆம்பல் மலர்களின் இதழ்களை விரியச்செய்தாய். சிவந்த கண்களையுடைய கருமையுடைய வரால், வாளை மீன்கள் கரையில் ஓங்கி வளர்ந்த தென்னையில் பாய்ந்து விளையாடுகின்ற நீர் நிறைந்த பெருங்குளங்கள் நிலமெங்கும் நிறையச் செய்து, நிலத்தில் ஒரு வானம் இருப்பதுபோல தோன்றச் செய்கிறாய்.
மையக்கருத்து:
ஆறு, கால்வாய்கள் நீர்நிலைகளை நிரப்பி, நிலத்தைச் செழிக்க செய்வதோடு நிலத்தில் நிறைந்திருக்கும் நீரிலே வானம் தெரிவதால் பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்று இயற்கை வளங்களை மையமாக வைத்துப் பாடியுள்ளார் வாணிதாசன்.
எதுகை:
செய்யுளில், அடியிலோ, சீரிலோ, இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று :
வயலிடை
அயலுள்
கயலிடை
பெயரிடை
மோனை:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று:
வயலிடை - வளைந்து
அயலுள் - ஆம்பல்
பெயரிடை - பெருங்குளம்
இயைபு
செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும்.
சான்று:
விளைத்தாய் – விரித்தாய்
அணிநயம்:
செய்யுளின் அழகுக்குச் சேர்ப்பது அணியே ஆகும். அணி இல்லாத பாடல் அழகில்லா மங்கை போலும். பெயரிடைப்பட்ட வானெனத் தோன்றும் என்னும் அடியில் உவமை அணி அமைந்து இச்செய்யுளின் அழகுக்கு அழகு சேர்த்துள்ளது.
சுவை நயம்:
இப்பாடலைப் படிக்கப் படிக்க, மனத்தில் மகிழ்வு உண்டாவதால் “உவகைச் சுவை” அமைந்துள்ளது.
முடிவுரை:
வாணிதாசன் இயற்கைப் புனைவுகளைப் பாடுவதில் வல்லவர். அவரது கவித்திறனுக்கு இப்பாடல் சான்றாக அமைவதோடு, அனைத்து நயங்களையும் பெற்று ஒளிர்கிறது.
மொழியோடு விளையாடு
1.
புதிர்
அவிழ்க்க
.
நான்கெழுத்துக்காரன்
முதல் இரண்டும்
அம்மாவில்
''மா'வைத் தொலைத்து நிற்கும்;
அடுத்த எழுத்தைச் சேர்த்தால்,
வில்லின் துணைவன்;
கடை இரண்டும்
கணக்கில் 'இது' என்பர்.!
முழுதாய்ப் பார்த்தால்
மேகத்திடை தெரிவான்!
- அவன் யார்?
விடை : அம்புலி
2.
பண்புத்தொகைகளை
இட்டு
நிறைவு
செய்க.
[இன்னோசை,
பேரொளி,
சிற்றோடை,
பேரின்பம்,
பைங்கிளி
, பேரூர்,
செந்தாமரை]
விடை :
மானாமதுரை ஒரு அழகான பேரூர். நீண்டவயல்களும் சிற்றோடைகளும் நிறைந்த அவ்ஊரின் நடுவே வானுயர்ந்த கோபுரத்துடன் கூடிய கோவில் குளத்தில் எங்கும் செந்தாமரைப் பூக்கள் மலர்ந்துள்ளன. கதிரவனின் பேரொளி வீசிட சோலைப் பைங்கிளிகளின் இன்னோசை கேட்போரைப் பேரின்பம் அடையச் செய்கிறது.
வட்டத்திற்குள் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.
விடை :
கால் - காலை - கான்
புத்தகம் - புல் - புத்தி
அகல் - அவல் - கல்
அதிகம் - கறி - தறி
புதன் - வலை - அறிவன்
கலை - கத்தி - கவலை
காவல் - அலை - தில்லை
3. காட்சியைக் கண்டு கவினுறு எழுதுக.
மலை யெனவும் (குறிஞ்சி)
முல்லைவனம் எனவும்
மருத நிலமாம் வயல் எனவும்
நெய்தலாம் கடலும்
பாலையாம் வெயிலும் என உன்
நிலத்தைப் பிரித்தாய்
முல்லைச்சரங்கள் தொடுக்கும்
கரங்கள் ஆடல் கலைகளையும் நடத்தும்
முல்லையும் கொட்டியும் ஆம்பலும்
இசை முழங்கி பாடும்
நீர் நிறை கரைகளில்
வளர் மரங்களில்
பைங்கிளியும் மணிப்புறாவும் மனம்
மயக்கும் தம் இசையால்
சிறுபானை தொடங்கி உயர்
கோபுரம் வரை மின்னும் கலைவண்ணம்
இப்பாடல் உணர்த்தும் தமிழ்
கலாச்சாரத்தை மக்கள்
மறவாமல் இருந்தால் போதும்
செயல்திட்டம்
ஒரு
வாரத்திற்குத்
தேவையான
உணவுப்
பொருள்களின்
வரவு
செலவு
பட்டியலை
உருவாக்குக.
ஒரு
வாரத்திற்குத்
தேவையான
உணவுப்பொருட்கள்
இவ்வார
வரவு
= ₹2000/|
விடை :
அகராதியில் காண்க.
விடை :
சொல் - பொருள்
ஈகை - கொடை, பொன், கற்பகமரம், காடை, காற்று, மேகம், கொடுத்தல்.
குறும்பு - குறுநில மன்னர், பாலை நில ஊர், பகைவர், குறும்புத்தனம்.
கோன் - அரசன், தலைவன் இடையர்பட்டப் பெயர்.
புகல் - புகுகை , தஞ்சம், செல், விருப்பம், வெற்றி, புகழ், போக்கு.
மொய்ம்பு - தோள், வலிமை.
நிற்க அதற்குத் தக
சமூகத்திற்கு
எனது
பணிகள்
அ) குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.
ஆ) தண்ணீர் வீணாவதை எங்கு கண்டாலும் தடுப்பேன்.
இ) என்னால் முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வேன்.
ஈ) மழைநீர் சேகரிப்பின் இன்றியமையாமையை வலியுறுத்துவேன்.
உ) பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துவேன்.
ஊ) இயற்கையைப் பேணிப் பாதுகாக்க மரங்களை நடுவேன்.
எ) சாலை விதிகளைப் பின்பற்றுவேன். பிறரையும் பின்பற்ற செய்வேன்.
ஏ) நம் கலைகளையும் பண்பாட்டையும் பேணிக்காக்க என்னால் இயன்றதைச் செய்வேன்.
கலைச்சொல் அறிவோம்
இந்திய தேசிய இராணுவம் - Indian National Army
பண்டமாற்றுமுறை -
Commodity Exchange
காய்கறி வடிசாறு - Vegetable Soup
செவ்வியல் இலக்கியம் - Classical Literature
கரும்புச் சாறு - Sugarcane Juice
அறிவை விரிவுசெய்
ஆகாயத்துக்கு அடுத்த வீடு - மு. மேத்தா
தமிழ்ப் பழமொழிகள் - கி.வா. ஜகந்நாதன்
இருட்டு எனக்குப் பிடிக்கும் (அன்றாட வாழ்வில் அறிவியல்) –
ச. தமிழ்ச்செல்வன்
இணையச் செயல்பாடுகள்
ஆகுபெயரை அடையாளம்
காண்போமே!
படிகள்
கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி ஆகுபெயர் என்னும் செயலியைப் பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்க.
செயலியைத் திறந்தவுடன் ஆகுபெயர் பற்றிய விளக்கமும் அதன் வகைகளும் எடுத்துக்காட்டுடன் கொடுக்கப்பட்டிருக்கும்.
அதனைத் தெளிவுற அறிந்த பின்பு திரையின் கீழ் வரும் தேர்வு என்பதைத் தேர்ந்தெடுத்து, கொடுக்கப்படும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
செயல்பாட்டிற்கான உரலி
https://play.google.com/store/apps/
details?id=appinventor.ai_ngmukun.aagupeyar
சாலைப் பாதுகாப்பு
உயிர்ப் பாதுகாப்பின் முதல் படி
அறிவை விரிவுசெய்யவும் அகண்டமாக்கவும் அகன்ற பார்வையுடன் மக்களைச் சந்திக்கவும் அவர்களோடு பயணம் செய்யவும் நமக்கு உதவுவன சாலைகளே! வாழ்க்கையில் இலக்கு இன்றியமையாதது; சாலையில் பாதுகாப்பு இன்றியமையாதது. நிலத்தின் உயிரோட்டமாகத் திகழும் ஆறுகளுக்கு அடுத்தபடியாக அவ்வாறு திகழ்வன சாலைகளே! நேராகவும் குறுக்காகவும் வளைந்தும் நெளிந்தும் செல்லும் சாலைகள் நாட்டின் நரம்புகள்.
இந்தியாவில் பயணிக்கும் சாலைவகைகளை நாம் அறிந்துகொள்வோம்.
1. தேசிய நெடுஞ்சாலைகள் (National Highways): நாட்டின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றை இணைப்பவை.
2. மாநில நெடுஞ்சாலைகள் (State Main Roads): இவை தேசிய நெடுஞ்சாலைகளை மாநிலங்களோடு இணைக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகள் மாவட்டங்களின் தலைநகரங்கள், சுற்றுலாத் தலங்கள், மாவட்டங்களில் உள்ள சிறு நகரங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
3. சிற்றூர்ச் சாலைகள் (Village Roads): இந்தியாவின் நாடித்துடிப்பாக விளங்குபவை சிற்றூர்களே(கிராமங்களே). அந்தச் சிற்றூர்களையும் மற்ற ஊர்களையும் இணைப்பவை சிற்றூர்ச் சாலைகள். அவை மாவட்டங்களையும் மாநிலங்களையும் தாண்டித் தேசிய நீரோட்டத்தில் கலக்கிறன்றன.
வேகக் கட்டுப்பாடு
போகுமிடம்தான் முக்கியமே தவிர, போகும் வேகம் அல்ல. ஐந்து மணித் துளிகள் முன்னரே கிளம்பினால், நேர அழுத்தத்திலிருந்தும் சாலை நெரிசலிலிருந்தும் மீளலாம். சரியான நேரத்துக்குச் செல்வது முக்கியம்தான். அதைவிட முக்கியம் விபத்தில்லாப் பயணம் அல்லவா? அரக்கப்பரக்க ஊர்திகளை ஓட்டக்கூடாது என்பதற்காகத் தமிழக அரசு வேகக் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இருசக்கர ஊர்திகள் 50கி.மீ வேகத்திலும், நான்கு சக்கர ஊர்திகள் 60 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என்பது பொது விதி. எனினும் பள்ளிகள், மருத்துவமனைகள், பெருஞ்சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் போன்ற ஊர்ப்பகுதிகள், மலைப் பாதைகள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகியவற்றில் வேகக்கட்டுப்பாட்டில் செல்லவேண்டிய இடங்களையும் வேக அளவையும் காட்டும் குறியீடுகள் இருக்கும். அவற்றைப் பார்க்கக்கூடிய அளவு வேகத்தில் பயணம் செய்வதும் அவற்றைப் பின்பற்றுவதுமே சிறப்பு.
சாலையில் செல்லுமுன் இவற்றை நினைவில் கொள்ளுங்கள்
● அலைபேசியை அணைத்துவிட்டுச் சாலையைக் கடப்பதே நல்லது.
● அலைபேசியில் பாட்டுக் கேட்டபடி, பேசியபடி ஊர்தியை ஓட்டாதீர்கள்.
● விளையாட்டுத் திடல்களில் மட்டுமே விளையாடுங்கள், சாலைகளில் அல்ல. .
● சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள நடைமேடைகளைப் பயன்படுத்துங்கள்.
● விதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சாலையைக் கடக்கவும். .
● ஆர்வக் கோளாறில் ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டிகளை ஓட்டுவது சட்டப்படி குற்றம். .
● பின்புறப் பயணிகளும் தலைக்கவசம் அணிவது கட்டாயம்.
சாலை விதிகளை மதிப்பது உயிர்ப் பாதுகாப்பின் முதல் படி.
தறிகெட்ட வேகம் நூற்று எட்டில் முடியும்.