Home | 10 ஆம் வகுப்பு | 10வது தமிழ் | மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 10th Tamil : Chapter 2 : Uyirin osai

   Posted On :  22.07.2022 06:42 am

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை

மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்

10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மொழியை ஆள்வோம்

படித்துச் சுவைக்க.

அந்த இடம்

காற்றே! வா

உன்னைப் பாடாமல்

இருக்க முடியாது

ஏனெனில்

பாட்டின் மூல ஊற்றே

நீதான்

……………….

………………

பொய்கையிடம் போனால்

குளிர்ந்து போகிறாய்

பூக்களைத் தொட்டால்

நறுமணத்தோடு வருகிறாய்

புல்லாங்குழலில் புகுந்தால்

இசையாகிவிடுகிறாய்

எங்களிடம்

வந்தால் மட்டுமே

அழுக்காகி விடுகிறாய்

மரங்களின்

ஊமை நாவுகள்

உன்னிடம் மட்டுமே

பேசுகின்றன

கடல் அலைகள்

உன்னோடு மட்டுமே

குதித்துக் கும்மாளமிடுகின்றன

வயலின் பச்சைப் பயிர்கள்

நீ வந்தால் மட்டுமே

ஆனந்த நடனம்

ஆடுகின்றன

நீ என்ன குதூகலமா?

கொண்டாட்டமா?

கோலாகலமா?

நெடுநாட்களாகவே

எனக்கொரு சந்தேகம்

விளக்குகளிலிருந்து

பறிக்கும் சுடர்களை

பூக்களிலிருந்து

திருடும் நறுமணத்தை

வீணையிலிருந்து

கவர்ந்த இசையை

எங்கே கொண்டு போய்

ஒளித்து வைக்கிறாய்?

- அப்துல் ரகுமான்.

 

தமிழில் மொழிபெயர்த்துத் தலைப்பிடுக.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark. The milky clouds start their wandering. The colourful brids start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers' fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant.

இயற்கை () காலைப்பொழுது

காலையில் கதிரவன் தன் தங்கக் கதிர்களை உதிக்கின்றது. தன் பொன்னிறக் கதிர்களால் இருளை விரட்டுகிறது. வெண்ணிற மேகமானது அங்குமிங்கும் நகர்கிறது. வண்ண நிறமான பறவைகள் காலையில் தன் இசைக் கீதத்தை இசைக்கின்றன. சுறுசுறுப்பாக வண்ணத்து பூச்சிகளும் மலர்களைச் சுற்றி நடமாடுகின்றன. பூக்களின் நறுமணம் தென்றல் காற்றை நிரப்பும். அந்தக் காற்று எல்லா இடங்களிலும் விரவி ஒரு புத்துணர்வு சூழ்நிலையை உருவாக்கும்.

 

சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.

(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழலிவந்தாள், மலை வாழ்பவர், முத்துப்பல்)

1. இன்சொல் - பண்புத்தொகை

இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.

2. எழுகதிர் - வினைத்தொகை

கடலின் நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு

3. கீரிபாம்பு - உம்மை தொகை

பூமிகாகவும் புவனாவும் கீரியும் பாம்பும் போல எப்பொழுதும் பகைமை உடையவர்கள்.

4. பூங்குழலி வந்தாள் - அன்மொழித் தொகை

பூப்போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்

5. மலை வாழ்பவர் - ஏழாம் வேற்றுமைத் தொகை

குறிஞ்சி நில மக்கள் மலையின் கண் வாழ்பவர்

6. முத்துப்பல் - உவமைத் தொகை

வெண்மதியின் முத்துப்பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

 

செய்திகளைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு. ஆனால் கண்ணீற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் : ஆல மலர் : பலா மலர்

மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள் : சுள்ளி மலர்; பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள் : அத்தி; ஆலம்; கொழிஞ்சி; பலா.

பயன்பாடு, நாற்றம் மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன : நெருஞ்சி, எருக்கு, பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை, குரீ இப்

பூளை, இலுப்பைப்பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப்பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாக அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

                                      - கோவை. இளஞ்சேரன்

வினா :

1. மலர் உண்டு; பெயரும் உண்டு - இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

2. அரும்பாகி மொட்டாகி பூவாகி ..... என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

4. அரிய மலர் - இலக்கணக் குறிப்புத் தருக.

5. தொடரில் பொருந்தாப் பொருள் தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை, கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும் பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்.

விடை :

1. மலருக்குப் பெயர் உண்டு

2. மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்.

3. பாதிரிப்பூ - குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும் உடல் நலத்தைப் பெருக்கி குளிர்ச்சியூட்டும். முருங்கைப்பூ - இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும் குடித்துவர நீரழிவு நோய் ,நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவு ஆற்றல் பெருகும்.

4. அரிய மலர் - குறிப்புப் பெயரெச்சம்

5. த்தின் - த்தின், ரித்து - றித்து, த்தை - த்தை

 

வாழ்த்து மடலை எழுதுக.

மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

மணிநகர்,

சிவகாசி,

15.04.2019.

அன்புள்ள நண்பா!

வணக்கம். இங்கு நான் மற்றும் அனைவரும் நலம். அங்கு உன் நலமும் உன் வீட்டில் உள்ள அனைவரின் நலமும் அறிய ஆவலாக உள்ளேன்.

நண்பா உன் திறமையைக் கண்டு மகிழ்ந்தேன் "மரங்களின் இயற்கை வரம் " என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பெற்று பரிசு வாங்கிய செய்தியை நாளிதழில் புகைப்படத்துடன் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

நீ கட்டுரையில் எழுதிய செய்தியின் கரு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம், மரங்களை அழிக்காதீர்: என்ற செயலில் ஈடுபடுவோம்.

தூய் காற்றை சுவாசிப்போம் என்ற செய்திக்குறிப்புகள் அருமையாக உள்ளன.

தொடர்ந்து உன் திறமைகளை வளர்த்துக்கொள். பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

                                                   இப்படிக்கு,

                                                 அன்பு நண்பன்,

                                                 இரா .தமிழழகன்.

உறைமேல் முகவரி :

பெறுநர்

இரா.முத்தமிழன்,

6/96 பாரதி நகர்,

பசுமலை,

மதுரை - 4.

 

பாரதியின் வசன நடை - சிட்டுக்குருவி

சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக்கண்கள், சினனத்தலை, வெள்ளைக் கழுத்து அழகிய மங்கல் வெண்மை நிறமுடைய பட்டுப்போர்த்த வயிறு, கருமையும் வெண்மையும் கலந்த சாம்பல் நிறத்தாலாகிய பட்டுப் போர்த்த முதுகு, சிறிய தோகை, துளித்துளிக்கால்கள் இத்தனையும் சேர்த்து ஒரு பச்சைக் குழந்தையின் கைப்பிடியிலேயே பிடித்து விடலாம். இவ்விதமான உடலைச் சுமந்து கொண்டு என் வீட்டில் இரண்டு உயிர்கள் வாழ்கின்றன. அவற்றில் ஒன்று ஆண் மற்றொன்று பெண்.

- இது போன்று உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றைப் பற்றி வசனநடையில் எழுதுக.

உறுதியான மூக்கு, விதையொத்த கண்கள், கூர்மையான பார்வை, மெல்லிய கண்கள், கரும் பச்சை நிறமுடைய பட்டுப் போர்த்திய வயிறு, கருமை சாம்பல் மற்றும் செந்நிறம் கலந்த முதுகு , நீண்ட அழகிய பல வண்ணத்தாலான தோகை, பனங்கிழங்கை யொத்த கால்கள் இவை அனைத்தையும் சேர்த்து ஒருவர் கையில் பிடிப்பது மிகவும் அரிதாகும். இப்படிப்பட்ட உடலைச் சுமந்துகொண்டு என் வீட்டுத் தோட்டத்திற்கு இரண்டு, உயிர்கள் வந்து போகின்றன. அவற்றில் ஒன்று ஆண்மயில் மற்றொன்று பெண்மயில்.


மொழியோடு விளையாடு

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

1. முதல் இரண்டை நீக்கினாலும் வாசனை தரும்: நீக்காவிட்டால் வாசனை தரும்.

விடை : நறுமணம்

2. பழமைக்கு எதிரானது - எழுது கோலில் பயன்படும்

விடை : புதுமை

3. இருக்கும் போது உருவமில்லை - இல்லாமல் உயிரினம் இல்லை.

விடை : காற்று.

4. நாலெழுத்தில் கண் சிமிட்டும் - கடையிரண்டில் நீந்திச் செல்லும்

விடை : விண்மின்.

 5. ஒரெழுத்தில் சோலை - இரண்டெழுத்தில் வனம் (காடு, புதுமை, விண்மீன், காற்று, நறுமணம்)

விடை : காடு

 

நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது வாடைக் காற்று வீசியது.

விடை : காற்றின் பாடல்

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிரு மொட்டு முகிழ்த்தது, அச்செடியை வரவேற்கும் விதமாக பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

விடை : மொட்டின் வருணனை

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல் - பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

விடை : மிதக்கும் வாசம்

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும், கசகசத்த உயிரனங்கள்.

விடை : உயிர்ப்பின் ஏக்கம்

5. நின்றுவிட்ட மழை தரும் குளிர் சொட்டுச் சொட்டாக வளிம்புகளிலிருந்து மரங்களிலிருந்து விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

விடை : நீரின் சிலிர்ப்பு

6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும், இலைகளின் அசைவுகள் சூறைக்காற்றின் ஆலோலம் (வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம் நீரின் சிலிர்ப்பு)

.கா : கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது, வானம் இருண்டது வாடைக்காற்று வீசியது. தலைப்பு - காற்றின் பாடல்

விடை : வனத்தின் நடனம்

 

அகராதியில் காண்க.

அகன்ற சுடர் - சூரியன், அகன்ற சுடர், விரிந்த சுடர்

ஆர்கலி - கடல், மழை, ஆரவாரம், பேரொலி, வெள்ளம்

கட்புள் - பறவை, ஒரு புலவன்

கொடுவாய் - புலி, வளைந்த வாய், பழிச்சொல்

திருவில் - வானவில், இந்திரவில்

 

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


காற்றே!

உன் அருமை யாருக்கும் தெரியவில்லை

உயிர் வாழ நீ அவசியம்

மரங்களை அழித்தோம் நாங்கள்

வளம் இல்லா உயிரினமாகி விட்டோம்

மரங்களை வளர்ப்போம்

தூய்மையான காற்றை சுவாசிப்போம்

 

செயல்திட்டம்

தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.

 

நிற்க அதற்கு தக

வானொலி அறிவிப்பு

ஜல் புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150 கி.மீ... தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலின் போது


புயலின் போது வெளியே செல்ல வேண்டாம்.

தொலைபேசி, மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும்.

மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். 

வெளியேற நேர்ந்தால் ஆரம்பகட்ட எச்சரிக்கையின் போதே  வெளியேறவும்.

மாடியில் இருப்பதைத் தவிர்த்துத் தளப் பகுதியிலேயே தங்கவும்.

காற்று அடிப்பது நின்றாலும் எதிர்த்திசையிலிருந்து மறுபடி வேகமாக வீச ஆரம்பிக்கும். எனவே, காற்றடிப்பது முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம்.

வாகனத்தை ஓட்ட நேர்ந்தால் கடற்கரைப் பகுதிகளுக்குத் தொலைவிலும், மரங்கள் மின்கம்பிப் பாதைகள், நீர் வழிகள் ஆகியவற்றிலிருந்து விலகியும் வாகனத்தின் உள்ளேயே தங்கியிருக்கவும்.

மேற்கண்ட அறிவிப்பைக் கேட்ட நீங்கள், உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்தி எழுதுக.

விடை :

1. வானொலி அறிவிப்பைக் கேட்டுப் பின்பற்றவும்

2. புயலின் போது வெளியே செல்ல மாட்டேன்

3. மாடியில் இருப்பதைத் தவிர்த்து தளப் பகுதியிலேயே தங்குவேன்

4. மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்

5. தொலைபேசி மின் சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பேன்

 

கலைச் சொல் அறிவோம்

Storm - புயல்

Tornado சூறாவளி

Tempest - பெருங்காற்று

Land Breeze - நிலக்காற்று

Sea Breeze - கடற்காற்று

Whirlwind சுழல்காற்று

 

அறிவை விரிவு செய்

குயில்பாட்டு – பாரதியார்

அதோ அந்தப் பறவை போல – ச. முகமது அலி

உலகின் மிகச்சிறிய தவளை – எஸ்.ராமகிருஷ்ணன்


 

இணையத்தில் காண்க.

1. https://ta.wikipedia.org/ wiki/காற்றுத்_திறன்

2. https://ta.wikipedia.org/ wiki/வளி_மாசடைதல்

3. http://agritech.tnau.ac.in/ta/ environment/

envi_pollution_intro_air_ta.html


Tags : Chapter 2 | 10th Tamil இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ்.
10th Tamil : Chapter 2 : Uyirin osai : Tamil Language Exercise - Questions and Answers Chapter 2 | 10th Tamil in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை : மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் - இயல் 2 | 10 ஆம் வகுப்பு தமிழ் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 2 : உயிரின் ஓசை