காற்று | அலகு 11 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - அமில மழை | 8th Science : Chapter 11 : Air
அமில மழை
நீரின் தூய வடிவம் மழைநீர் ஆகும். எனினும் தொழிற்சாலைகளில் கழிவு
வெளியேற்றம், எரிபொருள்களை எரித்தல், எரிமலை வெடிப்பு போன்றவற்றால் காற்றில் கலக்கும்
மாசுபடுத்திகளான நைட்ரஜன் சல்பர் ஆக்சைடுகள் போன்றவை மழைநீரில் கரைந்து நைட்ரிக் அமிலம்
மற்றும் சல்பூரிக் அமிலங்களை உருவாக்கி மழைநீரை அமிலத்தன்மை உடையதாக்குகின்றன. இதனால்
அமில மழை உருவாகிறது.
தூய
மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது. ஆனால் அமில மழையின் pH மதிப்பு 5.6 ஐ விடக்
குறைவு. ஏனெனில், வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு மழைநீரில் கரைந்திருக்கிறது.
1. அமில
மழையின் விளைவுகள்
அமில மழை பல விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றுள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
. • மனிதர்களின் கண்களிலும், தோலிலும் எரிச்சலை உண்டாக்குகிறது.
• விதை முளைத்தலையும், வளர்தலையும் தடை செய்கிறது.
• மண்ணின் வளத்தை மாற்றுவதோடு தாவரங்களையும், நீர்வாழ் உயிரினங்களையும்
அழிக்கிறது.
• கட்டடங்கள் மற்றும் பாலங்களின் அரிப்பிற்குக் காரணமாகிறது.
2. அமில
மழையைத் தடுக்கும் வழிமுறைகள்
அமில மழையின் பாதிப்புகளை கீழ்க்கண்ட வகைகளில் தடுக்கலாம்.
• பெட்ரோல், டீசல் போன்ற படிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல்
• அழுத்தப்பட்ட இயற்கை வாயுவைப் (CNG) பயன்படுத்துதல்
• மாற்று எரிபொருளைப் பயன்படுத்துதல்.
• தொழிற்சாலைக்
கழிவுகளை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல்.