அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life

   Posted On :  22.09.2023 12:26 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை.

அ. வாத்து

ஆ. கிளி

இ. ஓசனிச்சிட்டு

ஈ புறா

விடை: இ) ஓசனிச்சிட்டு

 

2 இயற்கையான கொசு விரட்டி

அ. ஜாதிக்காய்

ஆ. மூங்கல்

இ இஞ்சி

ஈ. வேம்பு

விடை: ஈ) வேம்பு

 

3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

அ. உருளைக்கிழங்கு

ஆ. கேரட்

இ. முள்ளங்கி

ஈ. டர்னிப்

விடை: அ) உருளைக்கிழங்கு

 

4. பின்வருவனவற்றுள் எது வைட்டமின் 'C' குறைபாட்டைப் போக்குகிறது?

அ. நெல்லி

ஆ. துளசி

இ. மஞ்சள்

ஈ. சோற்றுக் கற்றாழை

விடை: அ) நெல்லி

 

5 இந்தியாவின் தேசிய மரம் எது?

அ. வேப்பமரம்

ஆ. பலா மரம்

இ. ஆலமரம்

ஈ. மாமரம்

விடை: இ) ஆலமரம்

 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16 ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாப்படுகிறது.

2. பருத்தி நெசவுநாருக்கு எடுத்துக்காட்டாகும்.

3. நான் தமிழ்நாட்டின் மாநில மரம். நான் யார்? பனை 

4. துளசி இலையின் சாறு இருமலையும், மார்புச் சளியையும் குணமாக்குகிறது.

5. அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களின் உண்ணக் கூடிய விதைகள் பருப்பு (அ) பயிறு வகைகள் எனப்படுகின்றன.

 

III. சரியா, தவறா? தவறாக இருந்தால் சரியான விடையை எழுதுக

 

1. அழகிற்காக வளர்க்கப்படும் சாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப் படுகின்றன.

விடை: தவறு. அலங்காரத் தாவரங்கள்.

2 பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன.

விடை: சரி

3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது.

விடை: தவறு - உணவு தாவரம்.

4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று.

விடை: தவறு - கோடை காலத்திற்கு பருத்தி உடைகள் தான் ஏற்றவை.

5. கரும்புத் தாவரம் உயிரி எரிவாருளாகப் பயன்படுகிறது.

விடை: தவறு - சர்க்கரை தயாரிக்க பயன்படுகிறது. (அ) காட்டாமணக்கு உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது.

 

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக.

 

1. நார்தரும் காவரம் - கிருமி நாசினி

2. வன்கட்டை – நறுமணப் பொருள்

3. வேம்பு - சணல்

4. ஏலக்காய் - தானியம்

5. கம்பு – தேக்கு

 

விடைகள்

1. நார்தரும் காவரம் - சணல்

2. வன்கட்டை – தேக்கு

3. வேம்பு - கிருமி நாசினி

4. ஏலக்காய் - நறுமணப் பொருள்

5. கம்பு – தானியம்

 

 

V. ஒப்பிடுக

1. மாம்பழம் : கனி :: மக்காச்சோளம் : தானியம்

2 தென்னை : நார்: ரோஜா : அத்தர் / மலர்

3. தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் மண்புழு : மண்புழு உரம் தயாரிப்பாளர்

 

VI. மிகக் குறுகிய விடை தருக

 

1. உணவுத் தாவரங்கள் என்றால் என்ன?

மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக  விளங்கும் தாவரங்கள் உணவுத் தாவரங்கள் எனப்படுகின்றன.

(எ.கா.) காய்கறிகள் - பீட்ரூட்,  கேரட்

தானியங்கள் - நெல்,  கோதுமை

பருப்பு வகைகள் - கொண்டைக் கடலை,  பச்சைப்பயிறு

 

2. மருத்துவத் தாவரங்கள் என்றால் என்ன?

நோய்களைக் குணப்படுத்த பயன்படும் தாவரங்களை மருத்துவத் தாவரங்கள் என அழைக்கிறோம்.



3. வன்கட்டை எவ்வாறு மென்கட்டையில் இருந்து வேறுபடுகிறது?


வன்கட்டை :

வணிக ரீதியில் பயன்படும் மரக்கட்டைகள்  அதன் வலிமை, அடர்த்தி அடிப்படையில் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

வன்கட்டை

'ஆஞ்சியோஸ்பெர்ம்' எனும் பூக்கும் தாவரப்  பிரிவிலிருந்து வலுவான கட்டை பெறப்படுகிறது.

உயர்ந்த ரக  மரச்சாமான்கள் நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக்கட்டுமானங்கள் செய்ய பயன்படுகிறது.

(எ.கா) தேக்கு, பலா

மென்கட்டை

பொதுவாக ‘ஜிம்னோஸ்பெர்ம்' எனப்படும் பூவா தாவரப்பிரிவில் இருந்தும் ஒரு சில  ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களிலிருந்தும் பெறப்படுகிறது.

மென்கட்டை ஒட்டுப் பலகைகள் மரப்பெட்டிகள், நடுத்தர அடர்த்தி கொண்ட பல கைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. (எ.கா) கடம்பு – பைன்

 

4. நறுமணப் பொருள்கள் என்றால் என்ன?

வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படுவதும் உணவிற்கு நறுமணமூட்டப்  பயன்படும் தாவரப் பொருட்கள் நறுமணப் பொருட்கள் எனப்படுகின்றன.

பெறப்படும் பொருட்கள்:

மரப்பட்டைகள், வேர்கள், இலைகள், மலர்கள் (அ) தண்டுகள் போன்றவற்றிலிருந்து  பெறப்படுகிறது.

பயன்கள்:

உணவிற்கு  சுவையூட்டவும் - நிறமூட்டியாகவும், உணவைக் கெடாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது.

(எ.கா) ஏலக்காய், மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை,  கொத்தமல்லி விதைகள், இஞ்சி, ஜாதிக்காய் மற்றும் இலவங்கப் பட்டை.

 

5. நீ வசிக்கும் பகுதியில் உள்ள மூன்று மருத்துவத் தாவரங்களை எழுதுக.


தாவரப்பெயர்

1 தூதுவளை

2 குப்பைமேனி

3 கறிவேப்பிலை

பயன்கள்

இருமல்,  சளி, மார்புச்சளி குணமாக்க பயன்படுகிறது.

சொறி, சிரங்கு, படுக்கைப் புண் மற்றும் தோல்  வியாதிகள் குணமாக்க பயன்படுகிறது.

உணவுக்கு  சுவையூட்ட நீரிழிவு நோயை குணப்படுத்தவும் எதிர் உயிரிப் பொருளாகவும் பயன்படுகிறது.

பயன்படும் பகுதி

முழு தாவரம்

இலைகள்

இலைகள்


 

6. மரக்கட்டைகளின் பயன்கள் யாவை?

வன்கட்டை: உயர்ரக மரச்சாமான்கள்,  நாற்காலிகள்,  மேற்கூரைகள் மற்றும் கட்டில்,  மேஜை, கதவு,  நிலைக்கால் ஜன்னல் போன்ற மரக்கட்டுமானங்கள் தயாரிக்க பயன்படுகின்றன.

மென்கட்டை: ஓட்டுப்பலகைகள்,  மரப்பெட்டிகள்,  நடுத்தரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் (அ) காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.

 

VII. குறுகிய விடை தருக

 

1. அலங்காரத் தாவரங்கள் பற்றி எழுதுக?

அழகியல்  காரணங்களுக்காக வீட்டுத் தோட்டங்களில், பூங்காக்களில், மாடித் தோட்டங்களில் வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்கார தாவரங்கள் எனப்படும்.

எ.கா  மரங்கள்   சரக்கொன்றை,  மந்தாரை மற்றும் டிலோனிக்ஸ் மரம்  (காட்டுத் தீ)

குறு மரங்கள் 

செம்பருத்தி,  நந்தியாவட்டை

கொடிகள்

முல்லை,  சங்குப்பூ

சிறு செடிகள்

ரோஜா,  செவ்வந்தி, கார்னேஷன், ஜெர்பரா போன்றவை.


 

2. வேப்ப மரத்தின் பயன்களை எழுதுக?


பயன்படும் பகுதி

வேப்ப மர இலைகள்

வேப்ப மரப்பட்டை

வேப்பங் கொட்டைகள் வேப்ப எண்ணெய்

பயன்கள்

தோல்  வியாதி, சின்னம்மை, வயிற்றுப் புழுக்கள், பசியின்மை குணப்படுத்த பயன்படுகிறது.

இதயம் மற்றும் இரத்தத் குழாய் நோய்கள் குணப்படுத்த காய்ச்சல், நீரிழிவு, பல் ஈறு நோய்களை குணப்படுத்தப் பயன்படுகிறது.

பூச்சிக் கொல்லி, தோல் வியாதிக்கும், வயிற்றுப் புழுக்கள் நீக்க வேப்ப எண்ணெய் பூசப்பட்ட யூரியா, நைட்ரஜனை மெதுவாக விடுவதால், தாவரங்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக் கொள்ளவும், பயன்படுகிறது. இது மண்ணுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.


 

3. எவையேனும் ஐந்து தாவரங்களையும், அவற்றின் எந்தப் பகுதியை உண்கிறோம் என்பதையும் எழுதுக


தாவரப் பொருள்கள்

1  கேரட், முள்ளங்கி, பீட்ரூட்

2  உருளை, இஞ்சி, மஞ்சள்

3 கறி வேப்பிலை,  கொத்தமல்லி

4  முருங்கை

5 நெல், கோதுமை, மக்காச் சோளம், கேழ்வரகு

உணவாக பயன்படும் பகுதி

ஆணிவேர்

தரை கீழ் தண்டு

இலைகள்

இலைகள், காய்கள் மரப்பட்டை

விதை (தானியங்கள்)


 

VIII. விரிவான விடை தருக

 

1. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

வணிக ரீதியாக பயன்படும் மரக்கட்டைகள் வலிமை,  அடர்த்தி அடிப்படையில் இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.


 

2. விலங்கு- தாவர இடைவினையின் முக்கியத்துவத்தைப் பற்றி எழுதுக.


வரையரை :

உணவு,  வசிப்பிடம் உள்ளிட்ட தேவைகளுக்கு விலங்குகள் தாவரங்களைச் சார்ந்திருக்கின்றன. இந்தத் தொடர்பினால்  விலங்குகள் மட்டுமின்றி, தாவரங்களும் பயனடைகின்றன - இவை பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தாவர - விலங்கு தொடர்பு

மல்பெரி இலைகள் - பட்டுப்புழுக்கள்

தாவரங்கள், பூச்சியினங்கள் மற்றும் பறவைகள்

தாவரங்கள் மற்றும் தேனீக்கள்

பவளப்பாறை பாசிகள் தாவரங்கள் மற்றும் மீன்கள்

விதைகள் - கனிகள் - விலங்குகள் – பறவைகள்

பயன்படும் 

பட்டு இழைகள்

அயல் மகரந்தச் சேர்க்கை

அயல் மகரந்தச் சேர்க்கை

மீன்களுக்கு உணவு

விதை பரவுதல் கனி பரவுதல்

கிடைக்கும் பொருள்

பட்டுத்துணி

உணவு, காய்கள்,  கனிகள்

தேன் மற்றும் காய், கனிகள்

மீன் பிடி உணவு தொழில் சிறப்பாக நடைபெறுகிறது.

தாவரங்கள் பரவுதல்

 

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி

 

1. பாலைவனத்தில் குறைவான நீரே காணப்படுகிறது. இதற்குக் காரணம் யாது?

1.  நிறைய பாலைவனங்களில் 10 அங்குலத்திற்கும் குறைவான மழை அளவே ஒவ்வொரு ஆண்டும் காணப்படுகிறது.

2. மழை அளவை விட நீராவிப் போக்கின் அளவு அதிகம்.

3. பாலைவனங்களில் வாழும் தாவர விலங்கினங்களுக்கு மிகச் சிறிய அளவு தான் கிடைக்கிறது.

4. மேலும் அவை நீரைச் சேமிக்கவும், வறட்சியைத் தாங்கவும் தகவமைப்புப் பெற்றுள்ளது.

(எ.கா)  கள்ளி வகை  தாவரங்கள் - ஒட்டகம் போன்ற விலங்குகள்.

 

2. "பனைமரம் உயரமான மரம், அதனால் அது வன்கட்டையைத் தருகிறது" என்று கூறினார். இதை கவிதா நீ ஏற்றுக் கொள்கிறாயா? மறுக்கிறாயா? எதுவாயினும் ஏன் என்பதை எழுதுக?

1. பனை மரங்கள் அதி உயரமான உயரமுடைய தாயிருந்தாலும் அவை மென் கட்டைகளையே உருவாக்கின்றன.

2. வளையக்கூடிய வலுவற்றதாக இருப்பதால் இதன் கட்டைகள் மென்மையான கட்டைகள் எனப்படுகின்றன.

3. இதன் கட்டை நார்கள் - தொப்பிகள் போன்ற பொருட்கள் செய்ய பயன்படுகிறது.

4. 'கஜா' புயலில் (நவம்பர் 2018) தென்னை மரங்கள் இலட்சக்கணக்கில் வேரோடு வீழ பனை மென்கட்டைகளை உடையதால் புயலால் சேதமடையவில்லை.

 

3. படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடைதருக.



அ. பாக்டீரியாக்கள் எவ்வாறு மண் வளத்தை அதிகரிக்கின்றன?

1. தாவர விலங்கு கழிவுகளை மண்ணில் சிதைவடையச் செய்து வளமான மட்கிய உரத்தை உருவாக்குகிறது.

2. வளிமண்டல நைட்ரஜனை நிலை நிறுத்தி மண் வளத்தை அதிகரிக்க விவசாயத்திற்கு உதவுகிறது.



ஆ. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேனீக்கள் அவசியம் எவ்வாறு?

தேனீக்கள் பூக்களிலுள்ள தேனை எடுத்து தேன் பெற உதவுவதோடு அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவி, தாவர இனப்பெருக்கம் நடைபெற மிக அவசியமாகிறது

Tags : Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life : Questions Answers Plants in Daily Life | Term 3 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள் : வினா விடை - அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 3 அலகு 5 : அன்றாட வாழ்வில் தாவரங்கள்