அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடுகள் | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life
செயல்பாடு 1 : உனக்குத் தெரிந்த காய்கறிகள், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அட்டவணைப்படுத்துக.
செயல்பாடு 2 : ரவா, மைதா, சவ்வரிசி, சேமியா போன்றவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? நண்பர்களுடன் கலந்துரையாடவும்.
செயல்பாடு 3 : கீழாநெல்லி, வல்லாரை, மணத்தக்காளி, திப்பிலி, வெட்டிவேர், தூதுவளை போன்ற தாவரங்களின் மருத்துவப் பயன்பாட்டினை உங்கள் பெற்றோரிடமிருந்து கேட்டுக் குறித்து வரவும். வேறு என்னென்ன தாவரங்கள் மருத்துவப்பயன்பாட்டிற்காக உங்கள் பகுதியில் பயன்படுத்தப்படுகின்றன?
செயல்பாடு 4 : சிறிய பஞ்சு உருண்டை ஒன்றை எடுத்துக்கொள். அதைப் படத்தில் காட்டியவாறு கைகளினால் பிடித்து மெதுவாக இழுத்துப் பார்த்தால் அது சுருள்கிறது. இப்படிச் சுருளும்போது உங்களால் ஒரு நூலை உருவாக்க முடிகிறதா?
நூலிழைகளிலிருந்து நூலை உருவாக்கும் முறை நூல் நூற்றல் எனப்படுகிறது.
இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப்பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது. மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.
மரக்கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply wood) ஆகும். இது ஒருவகைக் கூட்டு மரப் (composite wood) பலகை ஆகும்.