அன்றாட வாழ்வில் தாவரங்கள் | பருவம் 3 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - உணவுத் தாவரங்கள் | 6th Science : Term 3 Unit 5 : Plants in Daily Life
உணவுத் தாவரங்கள்
மனிதர்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாகத் தாவரங்கள் விளங்குகின்றன.
நமக்கு உணவு தரும் தாவரங்களை நாம் உணவுத் தாவரங்கள் என்கிறோம்.
உங்கள் வீட்டில் காய்கறித் தோட்டம் அல்லது தோட்டத்திலிருந்து
உள்ளதா? காய்கறிகள் சேகரிப்பதைப் பார்த்து இருக்கிறீர்களா?
தாவரங்களின் எப்பகுதிகள் நமக்கு உணவாகப் பயன்படுகின்றன?
நாம் தாவரத்தின் பல்வேறு பாகங்களான வேர், தண்டு, இலை, விதை,
காய் மற்றும் கனிகளை உணவாக உட்கொள்கிறோம். உணவுத் தாவரங்களை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்.
1. காய்கறிகள்
2. தானியங்கள்
3. பருப்பு வகைகள்
மேலும் காபி, தேநீர், சர்க்கரை மற்றும் எண்ணெய்க்கான மூலப்பொருள்களையும்
நாம் தாவரங்களிலிருந்து பெறுகிறோம்.
காய்கறிகள்
நாம் தாவரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து காய்கறிகளைப் பெறுகிறோம்.
வேர்கள்
(எ.கா) பீட்ரூட், கேரட்.
இலைகள்
(எ.கா)
கீரைகள்,
முட்டைக்கோஸ், கறிவேப்பிலை.
தண்டுகள்
(எ.கா)
கரும்பு, உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு.
மலர்கள்
(எ.கா) வாழைப்பூ, காலிபிளவர்.
கனிகள்
(எ.கா)
நெல்லி, கொய்யா.
தானியங்கள்
தாவரங்களில் என்பவை புல்வகைத் விளைவிக்கப்படும் உணவுப் பொருளாகும்.
(எ.கா.) நெல், கோதுமை, கம்பு, கேழ்வரகு, தினை.
பருப்பு வகைகள்
அவரைக் தாவரங்களில் சார்ந்த உள்ள உண்ணக்கூடிய விதைகளே பருப்புகள்
எனப்படுகின்றன. பருப்புகள் கனிஉறையினுள் வளர்கின்றன. (எ.கா) கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு
செயல்பாடு 1 : உனக்குத் தெரிந்த காய்கறிகள், தானியங்கள் மற்றும்
பருப்பு வகைகளை அட்டவணைப்படுத்துக.
உலகளவில்
கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
நறுமணத் தாவரங்கள்
வெப்பமண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள்
உணவிற்கு பயன்படுகின்றன. நறுமணமூட்டப் தாவரங்களின் மரப்பட்டைகள், வேர்கள், இலைகள்,
மலர்கள் அல்லது தண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் உணவிற்கு
சுவையூட்டவும், நிறமூட்டியாகவும், உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் பயன்படுகின்றன.
செயல்பாடு
2 : ரவா, மைதா, சவ்வரிசி, சேமியா போன்றவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன? நண்பர்களுடன்
கலந்துரையாடவும்.