பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils

   Posted On :  19.08.2023 11:38 pm

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண்

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. கீழ்க்கண்டவை எது பாறை கோளம் என அழைகைப்படுகிறது

அ) வளிமண்டலம்

ஆ) உயிரிக்கோலம்

இ) நிழல்கோலம்

ஈ) நீருக்கோலம்

[விடை: இ) நிலக்கோளம்]

 

2. உலக மண் நாளாக கடைபிக்கப்படும் நாள்

அ) ஆகஸ்ட் 15

ஆ) ஜனவரி 12

இ) அக்டோபர் 15

ஈ) டிசம்பர் 5

[விடை: ஈ) டிசம்பர் 5]

 

3. உயிரினம்  படிமங்கள் -------------------------  பாறைகளில் காணப்படுகிறது

அ) படிவுப் பாறைகள்

ஆ) தீவுப்பறைகள்

இ) உருமாறி பாறை

ஈ) அடியாழப் பாறை

[விடை: அ) படிவுப் பாறைகள்]

 

4. மண்ணின் மேல் நிலை அடுக்கு

அ) கரிம மண் அடுக்கு

ஆ) அடி மண் அடுக்கு

இ) அடி மண்

ஈ) அடித்தள பாறை

[விடை: அ) கரிம மண் அடுக்கு]

 

5 பருத்தி வளர ஏற்ற மண்

அ) செம்மண்

ஆ) கரிசல் மண்

இ) வண்டல் மண்

ஈ) மலை மண்

[விடை: ஆ) கரிசல் மண்]

 

6. மண்ணின் முக்கிய கூறு

அ) பாறைகள்

ஆ) கனிமங்கள்

இ) நீர்

ஈ) இவை அனைத்தும்

[விடை:  ஆ) கனிமங்கள்]

 

7 கீழ்க்கண்டவற்றில் எவ்வகை மண் பரவலாகவும் அதிக வளமுள்ளதாகவும் உள்ளது?

அ) வண்டல் மண்

ஆ) கரிசல் மண்

இ) செம்மண்

ஈ) மலை மண்

[விடை: அ) வண்டல் மண்]

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. பாறைகளைப் பற்றிய அறிவியல் சார்ந்த படிப்பு பாறையியல் (petrology)

2. செம்மண் மண் தினைப் பயிர்கள் விளைவிப்பதற்கு ஏற்றதாகும்.

3. 'புவியின் தோல்' என்று மண் அழைக்கப்படுகிறது

4. உருமாறிய பாறைகளின் ஒரு வகையான வெள்ளை பளிங்கு பாறை தாஜ்மகால் கட்ட பயன்படுத்தப்பட்டது

5. தீப் பாறை 'முதன்மை பாறை' என்று அழைக்கப்படுகிறது.

 

III. சரியா / தவறா எனக் குறிப்பிடுக

 

1. தீப்பாறைகள் முதன்மை பாறைகள் என்று அழைக்கப்படுகிறது விடை: சரி

2. களிமண் பாறையிலிருந்து பலகைக்கல் (Slate) உருவாகிறது. விடை: தவறு

3. செம்மண் சுவருதல் (Leaching) செயல்முறைகளில் உருவாகிறது விடை: தவறு

4. இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமான பணிகளுக்கு "செயற்கை மணல்" (M-Sand) பயன்படுகிறது விடை: சரி

5. படிவுப் பாறைகளைச் சுற்றி எரிமலைகள் காணப்படுகின்றன விடை: தவறு

 

IV பொருத்துக

 

i. கிரானைட் 1. அடிப்பாறை

ii. மண் அடுக்கு 2. அடியாழப் பாறைகள்

iii பாரன் தீவு 3. பட்டைப் பயிரிடல் வேளாண்மை

iv. மண் வளப்பாதுகாப்பு 4. செயல்படும் எரிமலை

அ)  2 1 4 3

ஆ) 2 1 3 4

இ) 4 3 2 1

ஈ) 3 4 2 1

விடை: அ)  2 1 4 3

 

2.  

i பசால்ட் (கருங்கல்) - 1. ஆந்த்ரசைட்

ii சுண்ணாம்புப் பாறை - 2. வெளிப்புற தீப்பாறைகள்

iii நிலக்கரி- 3. உருமாறியப் பாறைகள்

iv ஜெனிஸ் (நைஸ்) - 4. படிவுப்பாறைகள்

அ) 2 4 1 3

ஆ) 2 4 1 3

இ) 3 1 2 4

ஈ) 3 1 4 2

விடை: அ) 2 4 1 3

 

V.கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை ஆராய்ந்து தவறான விடையைத் தேர்வு செய்க

 

1. அ)) தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது.

ஆ) பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உருமாறுகிறது.

இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை.

ஈ) தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை.

விடை:  இ) படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை. - தவறு

 

 

2.அ) மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது.

ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது.

இ) மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம்.

ஈ) இலைமக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும்.

விடை: ஆ) இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது. - தவறு

 

VI. கொடுக்கப்பட்ட கூற்றுகளை ஆராய்ந்து சரியான கூற்றைக் கண்டுபிடித்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

கூற்று 1 - படிவுப் பாறைகள் பல்வேறு அடுக்குகளைக் கொண்டவை

கூற்று 2 - படிவுப் பாறைகள் பல்வேறு காலங்களில் உருவானவை.

அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்.

ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1க்கு சரியான விளக்கம் அல்ல .

இ) கூற்று 1 சரி ஆனால் கூற்று 2 தவறு.

ஈ) கூற்று 2 சரி ஆனால் கூற்று தவறு.

விடை: அ) கூற்று 1 மற்றும் 2 சரி ஆனால் கூற்று 2 ஆனது கூற்று 1 க்கு சரியான விளக்கம்

 

VII காரணம் கூறுக

 

1. நீர்த்தேக்கப் படுகைகளில் இரசாயன படிவுப் பாறைகள் காணப்படுகின்றன

இரசாயன படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலம் உருவாகின்றன. இப்பாறைகள் உப்புப்படர் பாறைகள் என்றும் அழைக்கப்படுகிறது..

 

2 தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது.

தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். மேலும் இப்பாறைகள் எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.

 

VIII வேறுபடுத்துக

 

1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்



2. மண் வள பாதுகாப்பு மற்றும் மண்ணரிப்பு


 

IX சுருக்கமாக விடையளி

 

1. தீப்பாறைகள் எவ்வாறு உருவாகின்றன?

>  தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக்குழம்பு உறைந்து உருவாகின்றன.

> இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாவதால் இவற்றை முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப்பாறைகள் என்று அழைக்கிறோம்.

 

2. பாறைகளின் கூட்டமைப்பு பற்றி விவரி?

> மண்ணின் கூட்டுப் பொருள்களான கனிமங்கள், கரிமப் பொருள்கள், நீர் மற்றும் காற்று ஆகும்.

> கனிமங்கள் - 45%

கரிமப் பொருள்கள் - 5%

நீர்  - 25%

காற்று - 25% கொண்டுள்ளது.


3. ‘பாறைகள்’ வரையறு.

> பாறைகள் என்பது திட கனிம பொருட்களால் புவியின் மேற்பரப்பில் மற்ற கோள்களில் உள்ளது போல் உருவானதாகும்.

> புவியின் மேலோடு பாறைகளால் உருவானது. இது ஒரு திட நிலையில் உள்ள ஒரு முக்கியமான இயற்கை வளம் ஆகும்.

> பாறைகள் இயற்கையிலே கடின மற்றும் மென்தன்மை கொண்டதாகும்


4. மண்ணின் வகைகளைக் கூறுக.

> வண்டல் மண்

> கரிசல் மண்

> செம்மண்

> சரளை மண்

> மலை மண்


5. மண்வளப் பாதுகாப்பு என்றால் என்ன?

மண் வளப் பாதுகாப்பு என்பது மண் அரிப்பிலிருந்து பாதுகாத்து மண் வளத்தை மேம்படுத்தும் செயல் முறையாகும்.

 

X. விரிவான விடையளி

 

1. மண் உருவாக்கச் செயல்முறைகள் பற்றி விவரி.

> மண் என்பது பல்வகை கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப் பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.

> மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும்.

> பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல் முறைகளுக்கு உட்படுத்தப்படும் பொழுது மண்ணாக உருவாகிறது.

> நீர், காற்று, வெப்ப நிலைமாறுபாடு, புவி ஈர்ப்பு விசை, வேதிபரிமாற்றம், உயிரினங்கள் மற்றும் அழுத்த வேறுபாடுகளால் தாய்ப்பாறைகள் உடைபட்டு மிருதுவான துகள்களாக மாறுகின்றன.

 

2. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்


பாறைகள் தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

> தீப்பாறைகள், > படிவுப் பாறைகள் - உருமாறியப் பாறைகள் (அ) மாற்றுருப் பாறைகள்.

தீப்பாறைகள்: தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும். இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் அவை.

I. வெளிப்புறத் தீப்பாறைகள்,

II. ஊடுருவிய தீப்பாறைகள்

1. வெளிப்புறத் தீப்பாறைகள்: புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு ‘லாவா' புவியின் மேற்பரப்பிற்கு வந்து குளிர்ந்த பாறைகளாக மாறுகிறது. இவ்வாறு உருவாகும் பாறைகள் ‘வெளிப்புறத்தீப்பாறைகள்' என்றழைக்கப்படுகிறது. II. ஊடுருவிய தீப்பாறைகள்: பாறைக்குழம்பு புவிபரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் ஊடுருவில் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும். இவை இரண்டு வகைப்படும். அவை

> அடியாழப் பாறைகள் (அ) பாதாளப் பாறைகள்

> இடையாழப் பாறைகள்

படிவுப் பாறைகள்: படிவுப்பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. படிவுப் பாறைகளின் படிய வைக்கும் செயல்முறைகள் மற்றும் படிவுகளின் தன்மையை பொருத்து படிவுப் பாறைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

> உயிரினப் படிவுப் பாறைகள் > பௌதீக படிவுப் பாறைகள் > இரசாயன படிவுப் பாறைகள்

உருமாறிய பாறைகள்: அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும், படிவுப்பாறைகளும் மாற்ற மடைந்து உருமாறிய பாறைகளாக மாறுகிறது. இப்பாறைகள் இரண்டு வகைப்படும் அவை

> 'வெப்ப உருமாற்றம் >  இயக்க உருமாற்றம்

 

3. மண்ணடுக்குகள் பற்றி விவரிக்கவும்.



 

4. மண்ணினை வகைப்படுத்தி விவரிக்கவும்

மண்ணின் வகைபாடு: மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம் பௌதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் ஆறு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன அவை. > வண்டல் மண் - கரிசல் மண் , செம்மண் - சரளை மண் - மலை மண் - பாலை மண் வண்டல் மண்: வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது. இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம் மிக்கது. இது நெல், கரும்பு, கோதுமை, சணல் மற்றும் மற்ற உணவுப் பயிர்கள் பயிரிட ஏற்றது. கரிசல் மண்: கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன. கரிசல் மண்ணில் பருத்திப் பயிர் நன்கு வளரும். செம்மண்:செம்மண், உருமாறியப் பாறைகள் மற்றும்படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் உருவாகிறது. இது வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது. சரளை மண்': சரளை மண் அயன மண்டல பிரதேச காலநிலையில் உருவாகிறது. இம்மண் வளம் குறைந்து காணப்படுவதால் தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்றது. மலை மண்: மலை மண், மலைச் சரிவுகளில் காணப்படுகிறது. இப்பகுதிகளில் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது. பாலை மண்: பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது. வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.

 

 

XI செயல்பாடுகள்

1. இணையதள உதவியுடன் கீழ்க்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்.



2 வரைபடப் பயிற்சி

இந்திய புறவெளி நிலவரைபடத்தில் கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.



3. கண்காட்சி

பல்வேறு வகையான மண் மாதிரிகளைச் சேகரித்து உன் வகுப்பறையில் காட்சிப்படுத்தவும்.

 

4. குழுக் கலந்துரையாடல்

இயற்கை மணலுக்கு மாற்றாக கட்டுமானப் பணிகளுக்கு செயற்கை மணல் (M-Sand) பயன்படுத்த காரணம்

1. தரம் - 2. நன்மைகள் - 3. தீமைகள்

தரம்:

> M-Sand (Manufactured Sand) உருவாக்கப்படக்கூடிய மணல்

> M-Sand GILDIT GOTSI

நன்மைகள்:

> ஆறுகளிலிருந்து மணல் எடுப்பது தவிர்க்கப்படுவதுடன் ஆறுகள் பாதுகாக்கப்படுகிறது.

> சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது.

> செயற்கை மணல் பயன்படுத்துவதால்

> கட்டுமானம் உறுதியாக இருக்கும். கட்டுமானச் செலவு குறைகிறது.

> இயற்கை மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.

தீமைகள்:

> (M-Sand) செயற்கை மணலில் ஈரப்பதம் குறைவு.

> கட்டுமானப் பணிகளுக்கு அதிக நீரும், சிமெண்ட்டும் தேவை.

Tags : Rocks and Soils | Chapter 1 | Geography | 8th Social Science பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Geography : Chapter 1 : Rocks and Soils : Questions with Answers Rocks and Soils | Chapter 1 | Geography | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண் : வினா விடை - பாறை மற்றும் மண் | அலகு 1 | புவியியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : அலகு 1 : பாறை மற்றும் மண்