புவியின் அமைப்பு (interior of the Earth)
புவியின் மேற்பரப்பும், உட்புறமும் அதன் தன்மையிலும், அமைப்பிலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுகின்றன. புவியின் உள்ளமைப்பு மேலோடு,
கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
❖ புவியின் திடமான மேற்பரப்பு நிலக்கோளம் ஆகும்.
❖ புவியைச் சூழ்ந்துள்ள வாயுக்களால் ஆன மெல்லிய அடுக்கு வாயுக்கோளம் ஆகும்.
❖ புவியின் மேற்பரப்பிலுள்ள பெருங்கடல்கள்,
ஆறுகள், ஏரிகள் மற்றும் துருவப்பணி பாவங்களால் ஆன நீர்ப்பகுதி நீர்க்கோளம் ஆகும்.
❖ உயிரினங்கள் வாழும் அடுக்கு உயிர்க்கோளம் ஆகும்.
உங்களுக்குத் தெரியுமா?
'நிலக்கோளம்' மற்றும் புவிமேலோடு' ஆகிய இரண்டும் வெவ்வேறானவை ஆகும். புவி மேலோட்டினையும், கவசத்தின் மேற்பகுதி யையும் உள்ளடக்கியதே பாறைக்கோளமாகும்.
புவிநிகர் கோள்கள் (Terrestial Fanets) அனைத்தும் பாறைக்கோளத்தைக் கொண்டுள்ளன. புதன், வெள்ளி மற்றும் செவ்வாய்க் கோள்களின் நிலக்கோளம், புவியின் பாறைக்கோளத்தை விட தடிமனாகவும், கடினமாகவும் உள்ளது.
நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவிமேலோடு என்கிறோம். புவியின் தோல் போன்று புவிமேலோடு உள்ளது. இது 5 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது புவிமேலோடு திடமாகவும்,
இறுக்கமாகவும் உள்ளது. கடவடி தளத்தை Ocean
Roar) விட, கண்டப்பகுதிகளில் உள்ள புவி மேலோடானது அதிக தடிமனுடன் காணப்படுகிறது. புவிமேலோட்டினைக் கண்ட மேலோடு மற்றும் கடலடி மேலோடு என்று இரண்டாகப் பிரிக்கலாம். புவிமேலோட்டில் சிலிகா (SI) மற்றும் அலுமினியம்(Ai)
அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SAL)
என அழைக்கப்படுகிறது)
புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் (Mantle)
எனப்படும். இதன் தடிமன் சுமார் 2900 கிலோமீட்டர் ஆகும். கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும்,
கீழ்ப்பகுதியில் உருகிய நிலையிலும் காணப்படுகின்றன.
புவியின் உட்புறத்தில் உருகிய நிலையில் உள்ள பாறைக் குழம்பு மாக்மா' என அழைக்கப்படுகிறது.
புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது இது மிகவும் வெப்பமானது. கருவத்தில் நிக்கலும் (Ni) இரும்பும் (Fe) அதிகமாகக் காணப்படுவதால், இவ்வடுக்கு நைப் (NFE) என அழைக்கப்படுகிறது. கருவம் இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக உள்ளது உட்கருவம் திடநிலையிலும், வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது. புவியின் கருவத்தில் அதிகமாக இரும்பு காணப்படுவதே புவியீர்ப்பு விசைக்குக் காரணமாகும். புவி தன் அச்சில் சுழலும் போது திட நிலையில் உள்ள உட்கருவத்தின் மேல், திரவ நிலையிலுள்ள வெளிக்கருவம் சுழலுவதால், காந்தப்புலம் உருவாகிறது. காந்த திசைகாட்டும் கருவி செயல்பட இதுவே காரணமாகும். உட்கருவத்தில் அதிக அழுத்தம் காணப்படுவதால் அங்குள்ள பொருட்கள் அழுத்தப்பட்டு இறுக்கமாகின்றன. ஆகவே உட்கருவம் திடநிலையில் உள்ளது