உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Geography: Biosphere
VII. விரிவான விடையளி
1.
சூழ்நிலை
மண்டலத்தின்
பல்வேறு
கூறுகளை
விவரி.
விடை:
சூழ்நிலை மண்டலத்தின் கூறுகள்.
• உயிரற்ற கூறுகள் , உயிருள்ள கூறுகள் , ஆற்றல் கூறுகள் என மூவகைப்படும்
உயிரற்ற கூறுகள்.
• சுற்றுச் சூழலில் உள்ள உயிரற்ற, கரிம, இயற்பியல் மற்றும் இரசாயன காரணிகளை உள்ளடக்கியதாகும்.
(எ.கா.) நிலம், காற்று, நீர், சுண்ணாம்பு, இரும்பு போன்றவை.
உயிருள்ள கூறுகள்
• தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கியவை.
• உற்பத்தியாளர்கள் : இவை தமக்கு வேண்டிய உணவை தாமே உற்பத்தி செய்துக்கொள்ளக்கூடிய உயிரினங்கள்.
• முதல் நிலை நுகர்வோர் - தாவர உண்ணிகள்
• இரண்டாம் நிலை நுகர்வோர் - ஊன் உண்ணிகள்
• சிதைப்போர்கள் - சாறுண்ணிகள் எனப்படும். இவை இறந்த, அழுகிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை உணவாக உட்கொண்டு வாழக்சுடியவை.
ஆற்றல் கூறுகள் (Energy Components)
• உயிர்க்கோளம் முழுமைக்கும் ஆற்றலை வழங்கக்கூடியது சூரியன் ஆகும்.
• அனைத்து உயிரினங்களும் தம் பணியினைச் செய்வதற்கும் ஓர் ஆற்றலை மற்றோர் ஆற்றலாக மாற்றுவதற்கும் சூரிய ஆற்றல் பயன்படுகிறது.
2.
சூழ்நிலை
மண்டலத்தின்
செயல்பாடுகளை
எழுதுக.
விடை:
சூழ்நிலை மண்ட லத்தின் செயல்பாடுகள் (Functions of an ecosystem): சூழ்நிலை மண்டலத்தின் செயல்பாடுகள் ஆற்றல் ஓட்டத்தின் அமைப்பைச் சார்ந்துள்ளன. அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு > ஆற்றல் மட்டம் > உணவுச் சங்கிலி > உணவு வலை ஆகியவற்றை உருவாக்குகின்றன.
ஆற்றல் மட்டம்:
• ஆற்றல் ஓட்டம் பெரும்பாலும் சூழ்நிலை மண்டலத்தின் பல்வேறு நிலைகளில் படிநிலை ஒழுங்கு முறையில் நடைபெறுகிறது. இந்நிலைகள் ஆற்றல் மட்டம் எனப்படுகிறது.
உணவுச் சங்கிலி:.
• உயிரினங்களில் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு ஆற்றல் மாற்றம் பல்வேறு ஆற்றல் மட்டத்தின் வழியாகத் தொடர்ச்சியாக நடைபெறுவதை உணவுச் சங்கிலி என்று அழைக்கிறோம்.
உணவு வலை:
• உணவுச் சங்கிலிகள் (Food Chain) ஒன்றினையொன்று சார்ந்து, பிணைக்கப்பட்ட அமைப்பு உணவு வலை (Food web) எனப்படுகிறது. (ஆற்றல் மட்டம் — உணவுச் சங்கிலி – உணவு வலை)
3.
புவியில்
உள்ள
நீர்வாழ்
பல்லுயிர்த்
தொகுதியை
விவரி.
விடை:
நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
• இங்கு காணப்படும் உயிரினங்கள் ஒன்றுடனொன்று தொடர்பு கொண்டு அவை வாழுகின்ற சூழலுக்கும் சக்தி மூலங்களுக்கும், இடத்திற்கும் தக்கவாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன
• நீர்வாழ் உயிரினங்களின் மீதும் உயிரற்ற காரணகளின் தாக்கம் காணப்படுகிறது.
• நன்னீர்வாழ் பல்லுயிர்தொகுதி மற்றும் கடல்நீர்வாழ் பல்லுயிர்த்தொகுதி என இரண்டு வகை உண்டு.
நன்னீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
• இத்தொகுதியானது ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகள், சதுப்பு நிலங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
• இத்தொகுதி உயிரினங்கள் - தாவரங்கள் - அல்லி - தாமரை - பாசியினத் தாவரங்கள் - விலங்குகள் . ஆமை . முதலை . மீன் இனங்கள்.
கடல்நீர்வாழ் பல்லுயிர்த் தொகுதி
• கடல் நீரில் காணப்படும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு வாழ்விட ஆதாரமாக உள்ள இத்தொகுதி புவியில் காணப்படும் மிகப்பெரிய பல்லுயிர்த்தொகுதியாகும்.
• இரண்டாம் வகை கடல்நீர்வாழ் உயிரினங்களான பவளப்பாறைகள் (coral reefs) உள்ளன.
• மனிதர்கள் இத்தொகுதியை நீர், உணவு, பொழுதுபோக்கு அம்சங்களுக்காகப் பயன்படுத்துகிறார்கள். இத்தொகுதியில் காணப்படும் பிரச்சனைகள் அதிக அளவில் மீன்பிடத்தல், சுற்றுச்சூழல் மாசுபடுதல், கடல் மட்டம் உயர்தல்.