உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Geography: Biosphere
IV. சுருக்கமான விடையளி.
1.
உயிர்க்கோளம்
என்றால்
என்ன?
விடை:
• உயிர்க்கோளம், பாறைக் கோளம், நீர்க் கோளம், வளிக்கோளத்தை உள்ளடக்கிய புவியின் நான்காவது கோளமாகும்.
• கடல் மட்டத்திலிருந்து வளிமண்டல கீழடுக்கில் சுமார் 20 கி.மீ. உயரம் வரை பரவியுள்ள இக்கோளம் தாவர இனங்களும், விலங்கினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலைக் கொண்டுள்ளது.
2.
சூழ்நிலை
மண்டலம்
என்றால்
என்ன?
விடை:
• பல்வேறு உயிரினங்களின் தொகுதி ‘சூழ்நிலை மண்டலம்' ஆகும். இம்மண்டலத்தில் வாழ்கின்ற, உயிரினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதோடு, உயிரற்ற சுற்றுச் சூழல் காரணிகளோடும் தொடர்பு கொள்கின்றன.
• சூழ்நிலை மண்டலம் மிகச் சிறிய அலகிலிருந்து (எ.கா. மரப்பட்டை) உலகளாவிய சூழ்நிலை மண்டலம் (அல்லது) சூழல் கோளம் வரை (எ.கா. விவசாய நிலம், வனச்சூழல் அமைப்பு) வேறுபட்டுக் காணப்படுகிறது.
3.
உயிரினப்
பன்மை
என்றால்
என்ன?
விடை:
• ஒரு வாழ்விடத்தில் வாழ்கின்ற பல்வேறு வகையான உயிரினங்களைக் குறிப்பது ‘உயிரினப் பன்மை' ஆகும்.
எ.கா. தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற நுண்ணியிரிகள்.
4.
"உயிரினப்
பன்மை
இழப்பு"
என்பதன்
பொருள்
கூறுக?
விடை:
• மனித மற்றும் இயற்கைக் காரணிகளின் செயல்பாடுகளினால் தாவர மற்றும் விலங்கினங்களில் ஏற்படும் இழப்பு ‘உயிரினப் பன்மையின் இழப்பு' எனப்படும்.
5.
பல்வேறு
வகையான
நிலவாழ்
பல்லுயிர்த்
தொகுதிகளைக்
குறிப்பிடுக.
விடை:
நிலவாழ் பல்லுயிர்த் தொகுதிகள்.
• வெப்ப மண்டலக் காடுகள் பல்லுயிர்த் தொகுதி.
• வெப்ப மண்டல சவானா பல்லுயிர்த் தொகுதி
• பாலைவனப் பல்லுயிர்த் தொகுதி
• மித வெப்பமண்டலப் பல்லுயிர்த் தொகுதி.
• தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி.