ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள் | வரலாறு | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளிக்கவும் | 10th Social Science : History : Chapter 6 : Early Revolts against British Rule in Tamil Nadu
V. சுருக்கமாக விடையளிக்கவும்.
1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
• வரி வசூலிப்பது.
• நிலப்பகுதிகளை நிர்வகிப்பது.
• வழக்குகளை விசாரிப்பது.
• சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது.
• இவர்களது காவல் காக்கும் கடமை படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும்
அழைக்கப்பட்டது.
2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக்
கண்டறிந்து எழுதுக.
• கிழக்கில் - சாத்தூர்,
நாகலாபுரம், எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி.
• மேற்கில் - ஊத்துமலை,
தலைவன் கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, சேத்தூர்.
3. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?
• பூலித்தேவரை தாக்கும் பொருட்டு நவாப் கூடுதல் படைகளை மாபூஸ்கானுக்கு
அனுப்பினார்.
• மாபூஸ்கான் படையில் கம்பெனியின் சிப்பாய்கள் மற்றும் கர்நாடகப் பகுதி
குதிரைப்படை, காலாட்படை, களக்காடு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.
• இதற்கு முன்பாகவே திருவிதாங்கூரின் 2000 படை வீரர்கள் பூலித்தேவருடன் இணைந்தனர்.
• களக்காட்டு போரில் மாபூஸ்கானின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.
4. கம்பெனியாருக்கும், கட்டபொம்மனுக்கும்
இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?
• அனைத்து பாளையங்களிலிருந்தும் வரிகளை வசூலிக்க கம்பெனி ஆட்சியர்களை
நியமித்தது.
• ஆட்சியர்கள் பாளையக்காரர்களை அவமானப்படுத்தி படைகள் மூலம் வரி வசூல்
செய்தனர்.
• இதுவே கட்டபொம்மனுக்கும், ஆங்கிலேயருக்கும்
பெரும் பகை ஏற்பட காரணமாக விளங்கியது.
5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.
• மருது சகோதரர்கள் ஜூன் 1801 இல் நாட்டின் விடுதலையை முன்னிறுத்திய ஒரு பிரகடனத்தை வெளியிட்டனர்.
• இதுவே ‘திருச்சிராப்பள்ளி பேரறிக்கை' என்றழைக்கப்படுகிறது.
• பிரிட்டிஷாருக்கு எதிராக மண்டல, சாதி, சமய, இன வேறுபாடுகளைக் கடந்து
நிற்பதற்காக முதலில் விடுக்கப்பட்ட அறைகூவலே 1801 ஆம் ஆண்டின்
பேரறிக்கை ஆகும்.
• ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட விழைந்த தமிழகப் பாளையக்காரர்கள்
பலரும் ஒன்று திரண்டனர்.