மனித உரிமைகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளி | 9th Social Science : Civics: Human Rights
IV. சுருக்கமாக விடையளி.
1.
மனித
உரிமை
என்றால்
என்ன?
விடை:
“இன, பாலின, தேசிய, இனக்குழு, மொழி, மதம் அல்லது வேறு தகுதி அடிப்படையைப் பொருத்து மாறுபடாமல் மனிதர்களாகப் பிறக்கும் அனைவருக்கும் மரபாக இருக்கும் உரிமையே” மனித உரிமை ஆகும்.
2.
அடிப்படை
உரிமைகள்
யாவை?
விடை:
அடிப்படை உரிமைகள்.
• சமத்துவ உரிமை
• சுதந்திர உரிமை
• சுரண்டலுக்கு எதிரான உரிமை
• சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை
• சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்.
• அரசமைப்புச் சட்ட வழி தீர்வுகளுக்கான உரிமை
3.
இதைகளுக்கான
உரிமைகளாக
ஐ.நா. சபை அறிவித்துள்ளவை
யாவை?
விடை:
குழந்தைகளுக்கான உரிமைகள் :
• வாழ்வதற்கான் உரிமை.
• குடும்பச் சூழலுக்கான உரிமை
• கல்விக்கான உரிமை
• சமூக பாதுகாப்பு உரிமை
• பாலியல் தொல்லைகளுக்கு எதிரான உரிமை
• விற்பது மற்றும் கடத்தலுக்கு எதிரான உரிமை
• குழந்தை உழைப்பு முறை போன்ற மற்ற சுரண்டல்களுக்கு எதிரான உரிமை.
4.
அரசியலமைப்புத்தீர்வு
வழிகளுக்கான
உரிமையைப்
பற்றி
சிறு
குறிப்பு
வரைக.
விடை:
• ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகையில், அரசமைப்பு தருகின்ற தீர்வழிகளுக்கான உரிமைகளின்படி அவர் நீதிமன்றத்தை அணுகலாம்.
• நீதிமன்றம் அக்குடிமகனுக்குரிய உரிமையை மீட்டளிக்குமாறு அரசுக்கு ஆணையிடுகிறது இது நீதிப் பேராணை என்று அழைக்கப் படுகிறது.
• ஒரு செயல் அரசமைப்புச் சட்டத்தின் படி ஏதேனும் தவறானதாக கருதப்படின் அதற்கான சரியான தீர்வுகளை அரசமைப்புச் சட்ட தீர்வாணைகள் வழங்குகின்றன.
5.
போக்சா
(POCSO) - வரையறு.
விடை:
• போக்சா சட்டம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் ஆகும்.
சிறப்பு அம்சங்கள் :
• இச்சட்டம் 18 வயது வரை உள்ளவர்களை குழந்தைகள் என வரையறுக்கிறது. குழந்தைகளின் உடல், மன,அறிவுசார் மற்றும் சமூக வளர்ச்சியினை உறுதி செய்கிறது.
• பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்க்குத் தகுந்த தண்டனை வழங்குகிறது.
• குழந்தையின் வாக்குமூலம் அவ்வாறே பதிவு செய்ய வேண்டும்.
• பாதிக்கப்பட்ட குழந்தையை அடிக்கடி சாட்சி சொல்ல அழைக்கக் கூடாது.
6.
குழந்தைகளுக்குச்
சிறப்பு
கவனம்
தேவைப்படுவது
ஏன்?
விடை:
குழந்தைகளுக்குச் சிறப்புக் கவனம் தேவை. ஏனெனில்
• குழந்தைகள் பொருளாதாரச் சுரண்டல், பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழில் ஆகிய காரணங்களுக்காக விற்பனை அல்லது கடத்தல் செய்யப்படுகின்றனர்.
7.
தொழிலாளர்
நலனுக்காக
பி.ஆர். அம்பேத்காரின்
பங்களிப்பு
யாவை?
விடை:
பெண் தொழிலாளர்கள் நலனுக்காக டாக்டர். பி.ஆர். அம்பேத்கார் பங்களிப்பு :
• சுரங்கத் தொழிலாளர் பேறுகால நன்மைச் சட்டம்
• பெண் தொழிலாளர் நலநிதி
• பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டம்
• பெண் தொழிலாளர்களுக்கான பேறுகால நன்மைகள் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன.
8.
சட்டத்தின்
முன்
அனைவரும்
சமம்.
ஆனால்
பெண்களுக்கான
தனிச்சட்டம்
நடைமுறைப்
படுத்தப்படுகிறது.
நியாயப்படுத்துக.
விடை:
• சட்டத்தின் முன் அனைவரும் சமம் ஆயினும் வேலை வாய்ப்புகளில் பாலினப் பாகுபாடு காணப்படுகின்றது.
• பெண் குழந்தைகள் சிறுவயதிலேயே திருமணம் செய்யப்படுவதனால் குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிகள்,கல்வியறிவு, ஆரோக்கியமான வாழ்வை இழந்து விடுகின்றனர்.
• எனவே பெண்களுக்கான தனிச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.
9.
டாக்டர்
பி.ஆர். அம்பேத்கர் தொழிலாளர் நலனுக்கு அளித்த பங்களிப்பைப் பற்றி ஏதேனும் இரண்டு கூறு.
விடை:
• தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு.
• தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்.
• தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் (E.S.I.)
• தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியம்.
10.
வேறுபடுத்துக
- மனித
உரிமைகள்
மற்றும்
அடிப்படை
உரிமைகள்.
மனித
உரிமைகள்
மற்றும்
அடிப்படை
உரிமைகளுக்கு
இடையிலான
வேறுபாடுகள்
:
விடை:
மனித உரிமைகள்:
1. மனிதன் தன்மானத்தோடும், சுதந்திரத்தோடும் வாழ்கின்ற உரிமைகள்.
2. மனிதனின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள் இதில் அடங்கியுள்ளன. இவற்றைப் பறிக்க இயலாது.
3. மனித உரிமைகள் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டவை.
அடிப்படை உரிமைகள்:
1. அரசமைப்பில் காணப்படும் குடிமக்களின் ஆதார உரிமைகள் அடிப்படை உரிமைகள் எனப்படும். இவை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படலாம்.
2. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ள உரிமைகளும், அடிப்படை - உரிமைகளில் அடங்கும்.
3. அடிப்படை உரிமைகள் நமது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மூலம் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றன.