மனித உறுப்பு மண்டலங்கள் | பருவம் 2 அலகு 6 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நரம்பு மண்டலம் | 6th Science : Term 2 Unit 6 : Human Organ systems
நரம்பு மண்டலம்
மனிதனுக்கு நன்கு வளர்ச்சியடைந்த நரம்பு மண்டலம் அமையப் பெற்றுள்ளது.
நரம்பு மண்டலம் நியூரான்கள் அல்லது நரம்பு செல்களால் ஆனது. இம்மண்டலத்தில் மூளை, தண்டுவடம்,
உணர்ச்சி உறுப்புகள் மற்றும் நரம்புகள் உள்ளன. நரம்பு மண்டலமும், நாளமில்லாச் சுரப்பி
மண்டலமும் இணைந்து கடத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு
ஆகிய இரு முக்கியப் பணிகளை மேற்கொள்கின்றன.
முளை
மூன்று நமது மூளை ஒரு சிக்கலான உறுப்பு ஆகும். இது மண்டையோட்டின்
கபாலக் குழியினுள் உள்ளது. இது திசுக்களாலான உறைகளால் சூழப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இந்த சவ்வுகளுக்கு மூளை உறைகள் (Meninges) என்று பெயர். மூளையை மூன்று பிரிவுகளாகப்
பிரிக்கலாம். அவை முன் மூளை, நடு மூளை மற்றும் பின் மூளை என்பவையாகும். மூளையானது உடலின்
மத்தியக் கட்டுப்பாட்டு மையம் ஆகும்.
தண்டுவடம்
தண்டுவடம் பின்மூளையில் உள்ள முகுளத்தின்தொடர்ச்சி ஆகும். இது
முதுகெலும்புத் தொடரினால் மூடப்பட்டிருக்கின்றது. தண்டுவடமானது, மூளையை உடலில் உள்ள
பல்வேறு பாகங்களோடு நரம்புகளினால் இணைக்கக்கூடிய அமைப்பாக உள்ளது.
நரம்பு மண்டலத்தின் செயல்கள்
1. உணர்ச்சி உள்ளீடு
உணர் உறுப்புகளிலிருந்து சமிக்ஞை கடத்தப்படுதல்.
2. ஒருங்கிணைப்பு
உணர்ச்சி சமிக்ஞைகளை ஒருங்கிணைத்து வெளிப்பாடுகளை உருவாக்குதல் மற்றும் பதில்களை உருவாக்குதல்.
மூளையில் நூறு மில்லியனுக்கும் அதிகமான தகவல்களை ஒருவர் வாழ்நாளில் சேமித்து வைக்க முடியும் என்று கூறப்படுகிறது.
3. செயல் வெளிபாடு
மூளை மற்றும் தண்டுவடத்திலிருந்து சமிக்ஞைகளை செயல்படும் உறுப்புகளாகிய
தசை மற்றும் சுரப்பி செல்களுக்குக் கடத்துதல்.