மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 6th Science : Term 2 Unit 2 : Electricity

   Posted On :  18.09.2023 03:04 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்

வினா விடை

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. பொருத்தமான விடையைத்  தேர்ந்தெடுக்கவும்

 

1. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

அ. மின் விசிறி

ஆ. சூரிய மின்கலன்

இ மின்கலன்

ஈ. தொலைக்காட்சி

விடை: இ) மின்கலன்

 

2. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

அ. மின்மாற்றி

ஆ. மின்உற்பத்தி நிலையம்

இ. மின்சாரக் கம்பி

ஈ. தொலைக்காட்சி

விடை: ஆ) மின்உற்பத்தி நிலையம்

 

3. மின்கல அடுக்கின் சரியான குறியீட்டைத் தேர்ந்தெடு




4. கீழ்க்கண்ட மின்சுற்றுகளில் எதில் மின்விளக்கு ஒளிரும்?



 

5. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

அ. வெள்ளி

ஆ. மரம்

இ அழிப்பான்

ஈ நெகிழி

விடை; அ) வெள்ளி

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. மின்கடத்தி பொருள்கள் தன் வழியே  மின்னோட்டம் செல்ல அனுமதிக்கின்றன.

2. ஒரு மூடிய மின்சுற்றினுள் பாயும் மின்சாரம் மின்னோட்டம் எனப்படும்.

3. சாவி என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனமாகும்.

4. மின்கலனின் குறியீட்டில் பெரிய செங்குத்து கோடு நேர் முனையைக் குறிக்கும்.

5. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு மின்கல அடுக்கு ஆகும்.

 

III. சரியா (அ) தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்

 

1. பக்க இணைப்பு மின்சுற்றில், ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப் பாதைகள் உண்டு. விடை : சரி

2 இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் எதிர் முனையை மற்றொரு மின்கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

விடை: தவறு. இரண்டு மின்கலன்களைக் கொண்டு உருவாக்கப்படும் மின்கல அடுக்கில் ஒரு மின்கலத்தின் நேர்முனையை மற்றொரு மின் கலத்தின் எதிர்முனையோடு இணைக்க வேண்டும்.

3. சாவி என்பது மின்சுற்றினைத் திறக்க அல்லது மூடப்பயன்படும் மின்சாதனம் ஆகும்.

விடை: சரி

4. தூய நீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.

விடை: தவறு - தூய நீர் என்பது ஒரு மின்கடத்தாப்பொருள் ஆகும்

5. துணை மின்கலன்களை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

விடை: தவறு - துணை மின்கலன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும்

 

IV. பொருத்துக

குறியீடு விளக்கம்

1.  திறந்த சாவி

2.  மின்கலன்

3. ஒளிரும் மின்விளக்கு

4.  மின்கல அடுக்கு

5.  ஒளிராத மின்விளக்கு

 

விடைகள்

1.   மின்கல அடுக்கு

2.  ஒளிராத மின்விளக்கு

3.  திறந்த சாவி

4.  ஒளிரும் மின்விளக்கு

5.  மின்கல அடுக்கு

 

 

V. பின்வரும் சொற்களைக் கொண்டு ஒரு முழுமையான வாக்கியத்தை உருவாக்குக


 

VI. மிகக் குறுகிய விடையளி

 

1 கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் மின்விளக்கு A மட்டும் ஒளிர வேண்டும் எனில் எந்தெந்த சாவி(கள்) மூடப்பட வேண்டும்.



2. கூற்று (A) : நமது உடலானது மின்அதிர்வை வெகு எளிதில் ஏற்றுக்கொள்கிறது.

காரணம் (R) : மனித உடலானது ஒரு நல்ல மின்கடத்தியாகும்.

அ. A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

ஆ. A சரி, ஆனால் R என்பது Aக்கு சரியான விளக்கம் அல்ல.

இ A தவறு ஆனால் R சரி.

ஈ A மற்றும் R இரண்டும் சரி. R என்பது A க்கு சரியான விளக்கம் அல்ல.

விடை : அ) A மற்றும் R இரண்டும் சரி மற்றும் R என்பது A க்கு சரியான விளக்கம்.

 

3. எலுமிச்சம் பழத்தில் இருந்து மின்னோட்டத்தை உருவாக்க முடியுமா?

முடியும். எலுமிச்சம் பழத்தை மின்பகுளியாகவும் தாமிரக்கம்பி மற்றும் குண்டூசியை எலுமிச்சை பழத்திற்குள் செலுத்தி நேர் மற்றும் எதிர்மின்வாய்களாகக் கொண்டு மின்னோட்டத்தை உருவாக்க முடியும்.

 

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மின்கடத்தியைக் கண்டுபிடித்து எழுதுக.


 

5. டார்ச் விளக்கில் எவ்வகையான மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது?

டார்ச் விளக்கில் எளிய மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.

 

6. பொருந்தாததை வட்டமிடுக. அதற்கான காரணம் தருக.

சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்னியற்றி

விடை : மின்னியற்றி மின் மூலமாகும். மற்றவை மின்சுற்றின் பாகங்களாகும்.

 

VII. குறுகிய விடையளி

 

1. தொடரிணைப்பு ஒன்றிற்கு மின்சுற்றுப் படம் வரையவும்.


2. கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படுமா? விளக்கம் தருக.

கடிகாரத்தில் பயன்படுத்தப்படும் மின்கலன் மூலம் நமக்கு மின் அதிர்வு ஏற்படாது. ஏனெனில் கடிகார மின்கலனின் மின்னழுத்தம் மிக மிகக் குறைவு. (1.5V) .

 

3. வெள்ளி உலோகம் மிகச் சிறந்த மின்கடத்தியாகும். ஆனால் அது மின் கம்பி உருவாக்கப் பயன்படுத்தப்படுவதில்லை? ஏன்?

வெள்ளி விலை உயர்ந்த உலோகம். எனவே பொருளாதார ரீதியாக மின்கம்பி உருவாக்க பயன்படுத்துவதில்லை.

 

VIII. விரிவான விடையளி

1. மின்மூலங்கள் என்றால் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மின் நிலையங்கள் பற்றி விளக்குக.

மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் மின்மூலங்கள் எனப்படும்.

அனல் மின் நிலையங்கள் :

 1. அனல் மின்நிலையங்களில் நிலக்கரி, டீசல் (அ) வாயுக்களை எரித்து உருவாக்கப்படும் நீராவியால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

2. இங்கு வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் :

1. அணைக்கட்டில் பாயும் நீரால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

2. இங்கு இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

அணுமின் நிலையம் :

1. அணுக்கரு ஆற்றலைக் கொண்டு நீர் கொதிக்க வைக்கப்பட்டு டர்பைன் இயக்கப்படுகிறது.

2. இங்கு அணுக்கரு ஆற்றல் இயக்க ஆற்றலாக பின் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது.

காற்றாலை :

1. காற்றின் ஆற்றலால் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது.

2. இயக்க ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

 

2. மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மின்சாதனங்களின் பெயர்களையும் அவற்றின் குறியீடுகளையும் பட்டியலிடுக.



3. மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

மின்கடத்திகள்:

1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்கும் பொருட்கள் மின்கடத்திகள் எனப்படும்.

2. (எ.கா.) உலோகங்கள் (தாமிரம், இரும்பு) மாசுபட்ட நீர் மற்றும் புவி போன்றவை.

அரிதிற் கடத்திகள் (மின்கடத்தாப் பொருள்கள்):

1. மின்னூட்டங்களை தன் வழியே செல்ல அனுமதிக்காத பொருட்கள் அரிதிற்கடத்திகள் (அ) மின்கடத்தாப் பொருட்கள் எனப்படும்.

2. (எ.கா.) பிளாஸ்டிக், கண்ணாடி, மரம், ரப்பர், பீங்கான், எபோனைட் போன்றவை

 

IX. உயர் சிந்தனைத்திறன் வினாவிற்கு விடையளி


1. ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, இரு இணைப்புக் கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை. எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. எலுமிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மின்கல அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது. அந்த மின்விளக்கு ஒளிருமா?

1. மின்விளக்கு ஒளிரும்.

2. எலுமிச்சம் பழத்தின் ஒரு புறத்தில் தாமிரக் கம்பியையும் மற்றொரு புறம் குண்டூசியை செருக வேண்டும். -

3. இரண்டையும் இணைப்புக்கம்பியுடன் இணைத்து மின் விளக்கோடு இணைத்தால் மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.

4. எலுமிச்சை - மின்பகுளியாகவும், தாமிரம் - நேர்மின்வாயாகவும், குண்டூசி - எதிர்மின்வாயாகவும் செயல்பட்டு மின்சாரம் உருவாகி மின்விளக்கு எரியும்.


 

X. கீழ்க்காணும் கட்டத்திலிருந்து மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகளை கண்டறிந்து அட்டவணையில் நிரப்புக.



Tags : Electricity | Term 2 Unit 2 | 6th Science மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 2 : Electricity : Questions Answers Electricity | Term 2 Unit 2 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல் : வினா விடை - மின்னியல் | பருவம் 2 அலகு 2 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 2 : மின்னியல்