ஒளியியல் | மூன்றாம் பருவம் அலகு 1 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 3 Unit 1 : Light
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
1. ஒளியானது எப்பொழுதும் __________ செல்லும், இந்தப்பண்பு __________ என அழைக்கப்படுகிறது.
அ) வளைகோட்டில், நிழல்கள்
ஆ) நேர்கோட்டில், நிழல்கள்
இ) நேர்கோட்டில், எதிரொளிப்பு
ஈ) வளைந்து பின் நேராக, நிழல்கள்
விடை : ஆ) நேர்கோட்டில், நிழல்கள்
2. ஆடியில்படும் ஒளியானது __________
அ) ஊடுருவிச் செல்கிறது
ஆ) எதிரொளிப்பு அடைகிறது
இ) உட்கவரப்படுகிறது
ஈ) விலகலடைகிறது
விடை : ஆ) எதிரொளிப்பு அடைகிறது
3. __________ பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது.
அ) நீர்
ஆ) குறுந்தகடு
இ) கண்ணாடி
ஈ) கல்
விடை : இ) கண்ணாடி
4. ஒளி என்பது ஒரு வகை __________
அ) பொருள்
ஆ) ஆற்றல்
இ) ஊடகம்
ஈ) துகள்
விடை : ஆ) ஆற்றல்
5. நீங்கள், உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையின் பரப்பில் பார்க்க இயலாது, ஏனெனில் __________
அ) ஒழுங்கான எதிரொளிப்பு, மர மேஜையில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு பளப்பளப்பான பரப்பில் நடைபெறுகிறது.
ஆ) ஒழுங்கான. எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.
இ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
ஈ) இரண்டு பரப்புகளிலும், ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை : ஆ) ஒழுங்கான எதிரொளிப்பு, பளபளப்பான பரப்பில் நடைபெறுகிறது மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு மர மேஜையில் நடைபெறுகிறது.
6. பின்வருவனவற்றில் எது பகுதி ஒளி ஊடுருவும் பொருள்?
அ) கண்ணாடி
ஆ) மரம்
இ) நீர்
ஈ) மேகம்
விடை : ஈ) மேகம்
7. ஒளியானது __________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
அ) எதிரொளிக்கும் பரப்பை அடையும் போது.
ஆ) எதிரொளிக்கும் பரப்பை அணுகும்போது
இ) எதிரொளிக்கும் பரப்பின் வழியே செல்லும்போது
ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை .
விடை : ஈ) மேற்கூறிய எதுவும் இல்லை
(குறிப்பு: ஒளியானது எதிரொளிக்கும் பரப்பை அடைந்த பின் எதிரொளிப்பு நடைபெறுகிறது)
8. கீழ்க்காணும் எப்பொருள், ஒளியை நன்கு எதிரொளிக்கும்?
அ) பிளாஸ்டிக் தட்டு
ஆ) சமதள ஆடி
இ) சுவர்
ஈ) காகிதம்
விடை : ஆ) சமதள ஆடி
9. சிவராஜன் ஒரு மீட்டர் அளவுகோலை, காலை 7 மணிக்கு விளையாட்டு மைதானத்தில் நேர்க்குத்தாக நிற்க வைக்கிறான். நண்பகலில் தோன்றும் அளவுகோலின் நிழலானது __________
அ) தோன்றாது.
ஆ) காலையில் தோன்றிய நிழலைவிட நீளமானது மற்றும் நிழல், சூரியனின் எதிர்த்திசையில் தோன்றும்.
இ) காலையில் தோன்றிய நிழலைவிடக் குறைவான நீளம் கொண்டது மற்றும் நிழல், சூரியனின் அதே திசையில் தோன்றும்.
ஈ) காலையில் தோன்றிய நிழலை விடக் குறைவான நீளம் கொண்டது.
விடை : அ) தோன்றாது
10. ஊசித்துளைக்காமிராவில் தோன்றும் பிம்பம் தலைகீழானது, ஏனெனில் ___________
அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
ஆ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்லும்போது, தலைகீழாகச் செல்கிறது.
இ) ஒளிக்கதிர்கள் துளையின் வழியேச் செல்கிறது.
ஈ) ஒளிக்கதிர்கள் எதிரொளிக்கப்படுகின்றன.
விடை : அ) ஒளியானது நேர்க்கோட்டில் செல்லும்
11. பின்வரும் எந்தக்கூற்று, நிழல்கள் உருவாக்கத்தை விளக்குகிறது?
அ) ஒளி நேர்கோட்டில் செல்கிறது.
ஆ) ஒளி ஊடுருவாப் பொருள் ஒளியைத் தன் வழியே அனுமதிப்பதில்லை.
இ) எதிரொளிப்பு, கண்ணாடி போன்ற பரப்புகளில் நடைபெறுகிறது.
ஈ) இடவல மாற்றம் அடைகிறது.
அ மற்றும் ஆ
அ மற்றும் ஈ
அ மற்றும் இ
அ மட்டும்
விடை : i) அ மற்றும் ஆ
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. ஒரு சமதள ஆடியானது உருவாக்கும் பிம்பம் __________ ஆகும்
விடை: நேரான மாய பிம்பம்
2. __________ எதிரொளிப்பு ஆனது பொருள்களைக் காண உதவுகிறது
விடை: ஒளி
3. ஒளிக்கதிர்கள் பளபளப்பான பரப்பின் மீது விழும்போது, அவை __________ அடைகின்றன
விடை: எதிரொளிப்பு
4. சூரிய ஒளியானது, __________ வண்ணங்களின் கலவை ஆகும்
விடை: பல (VIBGYOR)
5. ஒரு வெள்ளொளி ஆனது, ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும் நிகழ்வு __________ எனப்படும்.
விடை: நிறப்பிரிகை
6. சந்திரன், சூரியனிடமிருந்து ஒளிக்கதிர்களை __________ செய்கிறது.
விடை: எதிரொளிக்க
7. __________ பயன்படுத்தி, சூரிய ஒளியில் அடங்கியுள்ள வண்ணங்களைப் பிரிக்கலாம்
விடை: முப்பட்டகம்
8. சொரசொரப்பான பரப்பின் மேல் __________ எதிரொளிப்பு நடைபெறுகிறது.
விடை: ஒழுங்கற்ற
III. கீழ்க்காணும் கூற்றுகள் சரியா, தவறா என ஆராய்க. கூற்று தவறு எனில், சரியான கூற்றை எழுதுக
1. ஆடியின் முன் நிற்கும் போது, உன் வலக் கையின் பிம்பமும், இடக் கையின் பிம்பமும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன
விடை : சரி
2. சூரிய ஒளியானது, நீர்த்துளிகளின் மூலம் நிறப்பிரிகை அடைந்து வானவில் தோன்றுகிறது
விடை : சரி
3. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. எனவே பெரிஸ்கோப்பின் மூலம் தோன்றும் பிம்பமும் இடவலமாற்றம் அடைகிறது.
விடை : தவறு
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடைகிறது. ஆனால் பெரிஸ்கோப் ஒன்றின் மூலம் கிடைக்கக்கூடிய கடைசி பிம்பமானது இடவலமாற்றம் இன்றி கிடைக்கிறது.
4. சூரிய ஒளியைக் கோள்கள் எதிரொளிப்பதன் காரணமாக அதனைக் காண முடிகிறது
விடை : சரி
5. புத்தகத்தின் மேற்பரப்பு, ஒளியை எதிரொளிப்பதால் புத்தகத்தை நாம் காண முடிகிறது.
விடை : சரி
6. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம், நேர்மாறு பிம்பம் ஆகும். விடை : சரி
7. ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவும், பொருளின் அளவும் சமம்
விடை : தவறு
சரியான விடை : ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பத்தின் அளவு பொருளின் அளவிலிருந்து மாறுபடலாம்.
8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் தலைகீழ் மாற்றம் அடைகிறது.
விடை : தவறு
சரியான விடை : சமதள ஆடியில் தோன்றும் பிம்பமானது தலைகீழ் மாற்றம் அடைவதில்லை
9. சமதள ஆடி, ஒளி ஊடுருவாத ஒரு பொருள் ஆகும்.
விடை : சரி
10. ஒரு பொருளின் நிழல், பொருள் இருக்கும் அதே பக்கத்தில் அமையும்.
விடை : தவறு
சரியான விடை : ஒரு பொருளின் நிழலானது ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்திசையில் உருவாகும்.
11. நம்மைச்சுற்றி இருக்கும் பொருள்களை, ஒளியின் ஒழுங்கான எதிரொளிப்பின் மூலமே காண்கிறோம்.
விடை : சரி
12. ஒரு வெள்ளொளி ஆனது, முப்பட்டகம் வழியே செல்லும்போது, அது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடைகிறது.
விடை : சரி
IV. பொருத்துக.
1. நேர்கோட்டுப் பண்பு - அ. முதன்மை ஒளிமூலம்
2. சமதள ஆடி – ஆ. ஒளிராப் பொருள்
3. மின்மினிப்பூச்சி – இ. பெரிஸ்கோப்
4. நிலா – ஈ. ஊசித்துளைக் காமிரா
5. அகன்ற ஒளி மூலம் – உ. நிறப்பட்டை
6. ஒழுங்கான எதிரொலிப்பு – ஊ. ஒளிரும் பொருள்
7. சூரியன் – எ. புறநிழல்
8. ஏழு வண்ணங்கள் – ஏ. பளப்பளப்பான பரப்பு
விடைகள் :
1. நேர்கோட்டுப் பண்பு - ஈ. ஊசித்துளைக் காமிரா
2. சமதள ஆடி – இ. பெரிஸ்கோப்
3. மின்மினிப்பூச்சி – ஊ. ஒளிரும் பொருள்
4. நிலா – ஆ. ஒளிராப் பொருள்
5. அகன்ற ஒளி மூலம் – எ. புறநிழல்
6. ஒழுங்கான எதிரொலிப்பு – ஏ. பளப்பளப்பான பரப்பு
7. சூரியன் – அ. முதன்மை ஒளிமூலம்
8. ஏழு வண்ணங்கள் – உ. நிறப்பட்டை
V. சுருக்கமாக விடையளி
1. எதிரொளிப்பு விதிகளை, படத்துடன் கூறுக.
2. படத்தில் ஒரு பென்சில், ஓர் ஆடியில் மேலே இருக்கும் நிலையைக் காட்டுகிறது? எனில்
அ) ஆடியில் தோன்றும் பென்சிலின் பிம்பத்தை வரைக.
ஆ) பென்சிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எவ்வாறு ஆடியில் எதிரொளிக்கப்பட்டு, கண்ணிற்கு அதன் பிம்பம் கிடைக்கிறது படம் வரைந்து காட்க.
3. ஒருவர், தன் முன்னால் ஆடியில் ஒரு மரத்தின் பிம்பத்தை 3.5 மீட்டர் தொலைவில் இருந்து பார்கிறார். மரம், அவர் கண்களிலிருந்து 0.5 மீட்டர் தொலைவில் பின்னால் இருக்கிறது, எனில் மரத்திற்கும் அவர் கண்ணிற்கும் இடையே உள்ள தொலைவு என்ன? பொருளைக் காண நமக்கு அவசியமான காரணிகள் யாவை?
விடை :
மனிதனுக்கும், கண்ணாடிக்கும் இடையே உள்ள தொலைவு = 3.5m
மனிதனுக்கும், மரத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 0.5m
மரத்திற்கும் கண்ணாடிக்கும் இடையே மொத்த தொலைவு = 0.5 + 3.5 = 4m
படுகோணம் ∠i = 4m ∠r =4m
பொருளுக்கும், கண்ணிற்கும் இடையே உள்ள தெலைவு = கண்ணாடி மற்றும் மனிதனுக்கும் இடையே உள்ள தொலைவு + ∠r
= 3.5m + 4m =7.5m
4. ஒளிரும் பொருள்கள் என்றால் என்ன?
• தாமாகவே ஒளிரக்கூடிய பொருட்கள் ஒளிரும் பொருள்கள் எனப்படும்.
• (எ.கா) சூரிய ஒளி, மின்சார பல்பு
5. நிலா ஓர் ஒளிரும் பொருளா? காரணம் கூறு.
• ஆம். சந்திரன் நன்கு ஒளியைத் தரும் மூலம் ஆகும்.
• ஆனால் சந்திரன் தாமாகவே ஒளியை உமிழாது.
• சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று அதனை பூமிக்கு பிரதிபலிக்கிறது.
6. ஒளியை உட்கவரும் பண்பினைப் பொருத்து, பொருள்களின் மூன்று வகைகள் யாவை?
• ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) தூய நீர்
• பகுதி ஒளி ஊடுருவும் பொருள்கள் (எ.கா) சொரசொரப்பான கண்ணாடி
• ஒளி ஊடுருவாப் பொருள்கள் (எ.கா) கல்
7. நிழல்களின் பகுதிகள் யாவை?
• கரு நிழல்
• புற நிழல்
8. நிழல்களின் பண்புகள் யாவை?
• ஒளி ஊடுருவாப் பொருள்கள் மட்டுமே நிழல்களை உருவாக்குகின்றன.
• நிழல்கள் எப்பொழுதும் ஒளி மூலம் இருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் உருவாகும்.
• ஒரு பொருளின் நிழலின் மூலம் அதன் தன்மையைக் கண்டறிய முடியாது.
• பொருளின் நிறம் எதுவானாலும், நிழல் கருமையாகவே இருக்கும்.
• ஒளி மூலம், ஒளி ஊடுருவாப்பொருள் மற்றும் நிழல் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
• நிழலின் அளவானது
i. ஒளிமூலம் மற்றும் பொருள் மேலும்
ii. பொருள் மற்றும் திரை இவற்றிற்கிடையே உள்ள தொலைவை சார்ந்துள்ளது.
9. சமதள ஆடி என்றால் என்ன?
• சமதள ஆடி என்பது, எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான ஒரு சமதள பரப்பு ஆகும்.
• தன் முன் தோன்றும் பொருளின் பிம்பத்தை உருவாக்கும்.
10. முப்பட்டகம் என்றால் என்ன?
முப்பட்டகம் என்பது இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
11. கண்ணுறு ஒளி என்றால் என்ன?
மனிதக் கண்ணால் கண்டறியக்கூடிய மின்காந்த கதிர்வீச்சின் வரம்பே கண்ணுறு ஒளி ஆகும்.
12. கீழ்க்காணும் பொருள்களை அட்டவணையில் சரியான இடத்தில் நிரப்புக. (நட்சத்திரம், செங்கல் சுவர், தாவரங்கள், கண்ணாடி கோள்கள், மின்பல்பு, எரியும் மெழுகுவத்தி)
ஒளி மூலங்கள்
நட்சத்திரம்
கோள்கள்
மின்பல்பு
எரியும் மெழுகுவத்தி
ஒளியை எதிரொலிப்பை
செங்கல் சுவர்
தாவரங்கள்
கண்ணாடி
13. 1 மீட்டர் 45 செ.மீ உயரமுடைய ஒரு சிறுவன், நீளமான ஓர் ஆடியிலிருந்து 2 மீட்டர் தொலைவில் நிற்கிறான், எனில் பின்வருவனவற்றை நிரப்புக.
அ) சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு __________
விடை : 4 மீ
ஆடியிலிருந்து சிறுவன் நிற்கும் தூரம் = 2 மீ (∠i)
∠i = ∠r = 2 மீ
எனவே சிறுவன் மற்றும் அவன் பிம்பத்திற்கும் உள்ள தொலைவு = சிறுவனிடமிருந்து கண்ணாடியின் தூரம் + கண்ணாடிக்கும் பிம்பத்திற்கும் உள்ள தூரம்.
= 2 மீ + 2 மீ = 4 மீ
ஆ) ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் __________
சமதள ஆடி ஏற்படுத்தும் பிம்பம் நேரானது. எனவே ஆடியில் தோன்றும் சிறுவனுடைய பிம்பத்தின் உயரம் 1மீ 45 செ.மீ ஆகும்.
இ) சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால், ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு __________
சிறுவன் 1 மீட்டர் தொலைவு ஆடியை நோக்கிச் சென்றால் சிறுவனுக்கும், ஆடிக்கும் உள்ள தொலைவு i = 1மீ
∠i = ∠r = 1மீ
எனவே ஆடிக்கும், பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு = 1மீ ஆகும்
.
14. ஏதேனும் ஒரு பொருள் ஒன்றையும் ஊசித்துளைக் காமிரா ஒன்று உருவாக்கும் அப்பொருளின் பிம்பத்தையும் வரைக.
விடை :
15. அவசர கால ஊர்திகளில் (AMBULANCE) என்ற வார்த்தை வல, இடமாக மாற்றி எழுதப்பட்டிருப்பதன் காரணம் என்ன?
• சமதள ஆடியின் இடவலமாற்றம் என்ற பண்பு இதில் பயன்படுத்தப்படுகிறது.
• ஊர்தியில் பின்னோக்கி எழுதப்பட்ட வார்த்தையின் எழுத்துகள் முன் செல்லும் வாகனத்தின் கண்ணாடியில் இடவலமாற்றத்தின் காரணமாக 'AMBULANCE' என நேராகத் தெரியும்.
16. ஆடியில் தோன்றும் சில பெரிய ஆங்கில எழுத்துகளின், பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதர பெரிய ஆங்கில எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்குக் காரணம் என்ன? விளக்குக.
• A, H, I, M, O, T, U, V, W, X மற்றும் Y போன்ற 11 எழுத்துகளின் பிம்பங்கள் மாற்றம் அடைகின்றன. இதற்கு ‘சமச்சீர் தன்மையே' காரணமாகும்.
• மற்ற எழுத்துக்களின் (B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S மற்றும் Z) பிம்பங்கள் மாறாமல் இருக்கின்றன. இதற்கு ‘இடவல மாற்றம்’ காரணமாகும்.
17. M1 மற்றும் M2 என்ற இரு ஒன்றுக்கொன்று செங்குத்தான சமதள ஆடிகள் படத்தில் காட்டியுள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. AB என்ற கதிர் M1 என்ற சமதள ஆடியோடு 45° படுகோணத்தை ஏற்படுத்துகிறது.
விடை :
அ. __________ __________ ஆகியவை எதிரொளிப்புக் கதிர்கள் ஆகும்.
விடை : BC, CD
ஆ. __________ __________ ஆகியவை படுகதிர்கள் ஆகும்.
விடை : AB, BC
இ. BC என்ற கதிர் ஏற்படுத்தும் படுகோணம் என்ன?
விடை : 45°
ஈ. CD என்ற கதிர் ஏற்படுத்தும் எதிரொளிப்புக் கோணம் என்ன?
விடை : 45°
18. ராஜன், கடிகார பிம்பங்களின் படங்களைக் கொண்டு விளையாடுகிறான். அவன் தன் அறையில் உள்ள கடிகாரத்தைப் பார்க்கிறான். அது 1:40 எனக்காட்டுகிறது. பின்வரும் படங்களில், ராஜன் கடிகார மற்றும் அதன் கண்ணாடிப் பிம்பத்தில் கடிகார முட்களை எவ்வாறு வரைந்திருப்பான்?
விடை :
19. ஒளியின் எதிரொளிப்பு என்றால் என்ன?
எந்தவொரு பொருளின் மேற்பரப்பையும் அடைந்த பிறகு, ஒளி கதிர்கள் மீண்டு வருவது ஒளியின் எதிரொளிப்பு எனப்படும்.
20. ஓர் ஒளிக்கதிர் 50° கோணத்தில் ஒரு சமதள ஆடியில் விழுகிறது எனில் எதிரொளிப்புக்கோணம் என்ன?
படுகோணத்தின் மதிப்பு = 90° - 50° = 40° (∠i)
ஒளி எதிரொளிப்பு விதியின்படி, படுகோணமும், எதிரொளிப்புக் கோணமும் சமம்.
i = r
∠i = 40° ∠r = 40°
எனவே எதிரொளிப்புக்கோணம் = 40° ஆகும்.
21. சமதள ஆடியில் இடவல மாற்றம் பற்றி நீவிர் அறிவது என்ன?
சமதள ஆடியின் இடவல மாற்றப் பண்பின் காரணமாக ஆங்கில எழுத்து 'b' ஆனது 'd' போன்று தெரியும்.
22. வெள்ளொளியின் நிறத்தொகுப்பை எவ்வாறு பெறலாம்?
• ஒரு வெள்ளொளியானது முப்பட்டகத்தின் ஒரு சமதளப் பரப்பின் வழியே செல்லும்போது, மற்றொரு சமதளப்பரப்பின் வழியே ஏழு வண்ணங்களாக பிரிகையடையும். இந்நிகழ்வு நிறப்பிரிகை ஆகும்.
• இதில் பெறப்படும் நிறங்கள் நிறத்தொகுப்பு எனப்படும்.
23. நியூட்டன் வட்டினை வேகமாகச் சுழற்றும் போது, ஏன் அது வெண்மை நிறத்துடன் தோற்றமளிக்கிறது?
• நியூட்டன் வட்டினை அதன் மையம் வழியேச் செல்லும் அச்சினைப் பொருத்து வேகமாகச் சுழற்றும் போது, நம் கண்ணின் ரெட்டினா வெண்மை நிறத்தை உணர்த்துகிறது.
• நியூட்டன் வட்டு மூலம், வெண்மை நிறம், ஏழு வண்ணங்களை (VIBGYOR) உள்ளடக்கியது என அறிய முடிகிறது.
24. நிழல் என்றால் என்ன? நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் யாவை?
• ஒளி ஊடுருவாப் பொருளானது, ஒளியை தன் வழியே செல்ல அனுமதிப்பதில்லை . எனவே நிழல் உருவாகிறது.
• சூரிய ஒளி, ஒளி ஊடுருவாப் பொருள், திரை ஆகியவை நிழலை உருவாக்க தேவையான பொருள்கள் ஆகும்.
VI. பின்வரும் வினாக்களுக்கு விரிவாக விடையளி.
1. ஒழுங்கான மற்றும் ஒழுங்கற்ற எதிரொளிப்பு என்றால் என்ன? படத்துடன் விவரி.
ஒழுங்கான எதிரொளிப்பு :
• எதிரொளிக்கும் பரப்பு வழவழப்பாகவும் சமதளமாகவும் இருப்பின் ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறும்.
• ஒழுங்கான எதிரொளிப்பில் படுகதிர்கள் இணைகதிர்களாகப் பரப்பின் மேல் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுகின்றன.
ஒழுங்கற்ற எதிரொளிப்பு :
• பரப்பு சொரசொரப்பாக இருப்பின் ஒழுங்கற்ற எதிரொளிப்பு நடைபெறும்
• இந்நிகழ்வில் எதிரொளிப்பிற்குப் பின் ஒளிக்கதிர்கள் வெவ்வேறு திசையில் செல்கின்றன.
2. ஒளிரும் மற்றும் ஒளிரா மூலங்கள் இவற்றிற்கிடையான வேறுபாட்டைக் கூறுக. ஒவ்வொன்றிற்கும் ஓர் எடுத்துக்காட்டு தருக.
ஒளிரும் பொருள்கள்
ஒளிரும் பொருள்கள் அவற்றின் சொந்த ஒளியை வெளிபடுத்தும் பொருள்
(எ.கா) மெழுகுவர்த்தி, பல்பு, நட்சத்திரங்கள், சந்திரன்
ஒளிரா பொருள்கள்
ஒளிராத பொருள்கள் ஒளிரும் உடல்களிலிருந்து ஒளியைப் பிரதிபலிக்கும் பொருள்கள்
(எ.கா) மனிதன், தாவரம், புத்தகம்
3. அன்றாட வாழ்வில் நீ காணும் ஒளியின் நேர்க்கோட்டு பண்பு நிகழ்வுகள் இரண்டினை கூறுக.
• மரங்களின் கிளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்
• சிமெண்ட் கிரிலின், சிறு துளைகளின் வழியே சூரிய ஒளி நேராக செல்லுதல்.
• லேசர் மற்றும் டார்ச் விளக்கின் ஒளி நேராக செல்லுதல்
4. எதிரொளிப்பு மற்றும் நிழல் - வேறுபடுத்துக.
எதிரொளிப்பு
1. எதிரொளிப்பு என்பது ஒரு ஒளியானது நேர் கோட்டில் சென்று பொருள் மீது பட்டு மீண்டும் திரும்பி விலகி செல்வது ஆகும்.
2. ஒளியானது மூலத்தில்இருந்து மற்றும் மற்றொரு ஒளி மூலத்திலிருந்து வருகிறது.
3. பிரதிபலிப்பு படத்தில் விவரங்களை அளிக்கிறது.
நிழல்
1. ஒளி ஊடுருவாப் பொருள் தன் வழியே ஒளி செல்ல அனுமதிக்கதால் ஏற்படுவது நிழல்
2. இது ஒரு ஒளி மூலத்தைத் தடுப்பதிலிருந்து உருவாகிறது.
3. நிழல் பொருள்களின் வெளிப்புறத்தை மட்டுமே தருகிறது.
5. சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளைக் கூறுக.
• சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் நேரானது.
• சமதள ஆடியில் தோன்றும் பிம்பம், மெய் பிம்பம் ஆகும்.
• சமதள ஆடியில் தோன்றும் பிம்பமும் பொருளும் ஒரே அளவில் இருக்கும்.
• சமதள ஆடியிலிருந்து, பொருள் இருக்கும் தொலைவும் பிம்பம் தோன்றும் தொலைவும் சமம்.
• சமதள ஆடியின் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் பெறும்.
6. பின்வரும் படங்களின் மூலம் நீவீர் அறிவது என்ன?
• ஒளியானது நேர்கோட்டில் செல்லும்
• ஒளியானது தானே வளைந்து செல்லாது
• இதுவே ஒளியின் நேர்கோட்டுப் பண்பு எனப்படும்
• மேற்கண்ட படத்திலிருந்து B படமானது ஒளியின் முக்கியமான இப்பண்பினை விளக்குகிறது.
• படம் A-வில் ஒளியானது தானாகவே வளைகிறது. இந்த பண்பு ஒளியில் நடைபெறாத நிகழ்வாகும்.
7. பின்வருவனவற்றை வரையறுக்க.
i) படுகதிர்
ii) எதிரொளிப்புக் கதிர்
iii) குத்துக்கோடு
iv) படுகோணம்
i) படுகதிர் :
எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் படுகதிர் எனப்படும்.
ii) எதிரொளிப்புக் கதிர் :
எதிரொளிக்கும் பரப்பில் படுகதிர் விழும் புள்ளியிலிருந்து மீண்டு வரும் கதிர் எதிரொளிப்புக் கதிர் எனப்படும்.
iii) குத்துக்கோடு :
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு குத்துக்கோடு எனப்படும்.
iv) படுகோணம் :
படுகதிர்க்கும் குத்துக்கோட்டிற்கும் இடையே உள்ள கோணம் படுகோணம் எனப்படும்
8. சமதள ஆடியில் தோன்றும் பிம்பங்களை ஊசித்துளைக் காமிரா காமிரா உருவாக்கும் பிம்பங்களோடு ஒப்பிடுக.
ஊசித்துளைக் காமிராவில் தோன்றும் பிம்பம்
1. மெய் பிம்பம்
2. பிம்பத்தின் அளவு பொருளின் அளவுடன் ஒப்பிடும்போது மாறுபடலாம்
3. தலைகீழ் பிம்பம்
சமதள ஆடியில் தோன்றும் பிம்பம்
1. மாய பிம்பம்
2. பிம்பம் மற்றும் பொருளின் அளவு சமம்
3. நேரான பிம்பம்