இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 7 : Last Phase of Indian National Movement
பாடச்
சுருக்கம்
• இந்திய விடுதலைப் போராட்டத்தின் இறுதிகட்டம்
நவம்பர் 1940இல் போருக்கு எதிரான தனிநபர் சத்தியாகிரகத்தோடு துவங்கியது.
• இதில் அமைதியான சூழல் 1942இல் பிரிட்டிஷ்
பேரரசை கடுமையான தாக்குதலுக்கு உட்படுத்திய வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் முன்பான
சிறுகாலம் மட்டுமே ஆகும்.
• கடுமையான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டாலும்,
மக்களின் பெருவாரியான பங்களிப்பு குன்றிப்போகாமல் இருந்தமைக்கு இந்திய தேசிய இராணுவ
விசாரணையும் இராயல் இந்திய கடற்படையின் கலகமுமே சான்றாக அமைந்துள்ளன.
• ஏழாண்டுகள் நீண்ட இப்போராட்ட காலத்தின் கருப்புப்
பக்கங்கள் என்பன முஸ்லிம் லீக்கின் லாகூர் மாநாட்டில் முஸ்லிம்களுக்கு தனிநாடு என்று
மேலோட்டமாகத் தோன்றி பின் வலிமையடைந்த பாகிஸ்தான் கோரிக்கையாகியது.
• இக்கோரிக்கையின் மூலமாகப் பிரிவினையோடு இணைந்த
ஒரு விடுதலையும் இனக்கலவரத்தில் கணக்கில்லாதோர் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தேறின.
• மதச்சார்பின்மை என்ற சிந்தனைக்கு எழுந்த
சவால்களோடே சுதந்திர இந்தியா பிறந்தது.