இயல் 9 | 9 ஆம் வகுப்பு தமிழ் - மொழி அறிவு - கேள்விகள் மற்றும் பதில்கள் | 9th Tamil : Chapter 9 : Anpenum arane
மொழியை ஆள்வோம்
மொழி
பெயர்க்க.
A deer, a turtle, a crow and arat were
friends. One day the deer was caught in a hunter's trap. Friends made a plan to
save him. According to the plan, the deer lay motionless as if it were dead.
The crow sat on the deer and started poking. The turtle crossed the hunter's
path to distract him. The hunter left the deer, assuming it dead, and went
after the turtle. Meanwhile, the rat chew open the net to free the deer. The
crow picked up the turtle and quickly took it away from the hunter. From this
Panchatantra story, we learn that the teamwork can achieve great results.
விடை :
ஒரு மான், ஒரு கடல் ஆமை, ஒரு காகம், ஓர் எலி ஆகியவை நட்பு கொண்டிருந்தன. ஒருநாள் வேடன் வலைவிரித்து மானைப் பிடித்து விட்டான். நண்பர்கள் மானைக் காப்பாற்ற திட்டம் தீட்டின. மானை, நீ இறந்தது போல் அசைவின்றி படுத்துக் கொள் என்றன. காகம், இறந்து போன மாதிரி படுத்திருந்த மான் மீது அமர்ந்து கொத்த தொடங்கியது. கடல் ஆமை வேடனின் வழிமறித்தது; அவனை அலைக்கழித்தது, வேடன் வலையில் அகப்பட்ட மான் இறந்து விட்டது என
எண்ணி சென்று அதனை விட்டு விடுகிறான். கடல் ஆமை இன்னும் வேடனை அலைக்கழித்தபடியே இருக்கிறது. அதற்குள் எலி வலையைக் கடித்து மானைக் காப்பாற்றத் தொடங்கியது. மானை விடுத்த வேடன் கடலாமையைப் பிடிக்க எண்ணியபோது காகம் ஆமையை கொத்திக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து சென்று சிறிய கடலாமையை வேடனிடம் இருந்து காத்தது. இந்தப் பஞ்சதந்திரக் கதை குழுவாக இணைந்து ஒன்றுபட்டு செயல்பட்டால் பல சாதனைகளைப் புரியலாம் என்பதை உணர்த்துகிறது.
பொருத்தமான
நிறுத்தற்குறியிடுக.
ஆசிரியர்
மாணவர்களிடம்
மாணவர்களே
கடவுளரையும்
தலைவர்களையும்
குழந்தையாகக்
கருதி
எழுதப்பட்ட
சிற்றிலக்கிய
வகை
பற்றித்
தெரியுமா
தமிழ்ச்
சிற்றிலக்கிய
வகைகளுள்
பிள்ளைத்
தமிழும்
ஒன்று
என்று
கூறினார்.
பிள்ளைத்
தமிழ்
நூல்கள்
முத்துக்குமாரசாமி
பிள்ளைத்
தமிழ்
அமுதாம்பிகை
பிள்ளைத்தமிழ்
முதலியன.
அடடா
என்று
சிலிப்ப்பூட்டும்
பட்டறிவைப்
படிப்பவர்க்கு
அளிக்கும்
வகையில்
குமரகுருபாரின்
மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ்
மிகச்
சிறந்ததாகத்
திகழ்கிறது.
விடை :
ஆசிரியர் மாணவர்களிடம், "மாணவர்களே! கடவுளையும் தலைவர்களையும் குழந்தையாகக் கருதி, எழுதப்பட்ட சிற்றிலக்கிய வகை பற்றித் தெரியுமா? தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் பிள்ளைத் தமிழும் ஒன்று'' என்று கூறினார்.
பிள்ளைத்தமிழ் நூல்கள்: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகைப் பிள்ளைத்தமிழ் முதலியன.
“அடடா! என்று சிலிர்ப்பூட்டும் பட்டறிவைப் படிப்பவர்க்கு அளிக்கும் வகையில், குமரகுருபரரின் 'மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்' மிகச்சிறந்ததாகத் திகழ்கிறது.
சொற்றொடர்
உருவாக்குக.
1.
செந்தமிழும்
சுவையும்
போல
விடை :
தவைவன் தலைவியாக நீவிர் இருவரும் செந்தமிழும் சுவையும் போல இணைந்தே மகிழ்வுடன் இனிதாய் வாழுங்கள்.
2.
பசுமரத்தாணிபோல
விடை :
குழந்தைப் பருவத்தில் நான் மனனம் செய்த பாரதியார் பாடல்கள் அனைத்தும் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது.
3.
உள்ளங்கை
நெல்லிக்கனி
போல
விடை :
என் தமிழாசிரியர் நடத்திய அணியிலக்கணம் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவாகப் புரிந்தது.
4.
அத்தி
பூத்தாற்போல
விடை :
என் மாமாவின் வருகை அத்தி பூத்தாற்போல் என்றாவது நிகழ்வதால் மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
5.
மழைமுகம்
காணாப்
பயிர்
போல
விடை :
தன் குடும்பத்தை விட்டு விடுதிக்குச் சென்ற கமலா, மழைமுகம் காணாப் பயிர் போல சோர்வுற்று வாடிக் காணப்பட்டாள்.
வடிவம்
மாற்றுக.
பாடலில்
காணும்
இலக்கிய
வடிவங்களையும்
அவற்றுக்குப்
புகழ்
பெற்றோரையும்
கண்டறிந்து
எழுதுக.
வெண்பாவிற்
புகழேந்தி;
பரணிக்குஓர்
சயங்கொண்டான்;
விருத்தம்
என்னும்
ஒண்பாவிற்கு
உயர்கம்பன்;
கோவைஉலா
அந்தாதிக்கு
ஒட்டக்
கூத்தன்;
கண்பாய
கலம்பகத்திற்கு
இரட்டையர்கள்;
வசைபாடக்
காள
மேகம்;
பண்பாய
பகர்சந்தம்
படிக்காசு
அலாதொருவர்
பகர
ஒணாதே.
-
பலபட்டடைச்
சொக்கநாதப்
புலவர்.
விடை :
இலக்கிய வடிவம் - புகழ் பெற்றோர்
வெண்பா - புகழேந்தி
பரணி - சயங்கொண்டான்
விருத்தம் - கம்பன்
கோவை, உலா, அந்தாதி - ஒட்டக்கூத்தர்
கலம்பகம் - இளஞ்சூரியர், முதுசூரியர் என்னும் இரட்டையர்கள்
வசைக்கவி – காளமேகம்
சந்தம் - படிக்காசுப்புலவர்
நூல்
மதிப்புரை:
நீங்கள்
விரும்பிப்
படித்த
நூல்
ஒன்றுக்கு
மதிப்புரை
எழுதுக
விடை :
மதிப்புரை:
சமீபத்தில் நான் விரும்பிப் படித்த நூல் கவிதாசன் அவர்கள் எழுதிய “சிகரங்களைத் தொடுவோம்” என்னும் நூல் ஆகும்.
இந்நூல் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு மட்டுமல்ல, உழைத்து களைத்து சோர்ந்து போய் என்ன சமுதாயம் இது! என்று சலிப்புறும் மனங்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கின்ற நூலாகத் திகழ்கிறது எனில் மிகையாகாது. “மனிதனின் மனம் ஆற்றலின் அட்சயபாத்திரம்”
''இனிய சொற்கள் இதயங்களின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்"
''சாமானியனும் சாதனையாளனாகலாம்''
“காலையில் எழுந்ததும் உங்கள் திறமையைக் காட்ட புதிதாய் ஒருநாள் பிறந்தது என்று எண்ணுங்கள்” என்பன போன்ற சிந்தனைத் துளிகள் நிறைந்துள்ள இந்நூலைப் படிப்போர் நிச்சயமாய்ச் சிகரங்களைத் தொடுவர்.
படிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் தூண்டுகோலாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும். படியுங்கள். உங்கள் வாழ்வில் உயருங்கள். சிகரங்களைத் தொட்டுச் சிறப்படையுங்கள்.
நயம்
பாராட்டு.
”எத்துணையும்
பேதமுறாது
எவ்வுயிரும்
தம்முயிர்போல்
எண்ணி
உள்ளே
ஒத்துரிமை
உடையவராய்
உவக்கின்றார்
யாவர்
அவர்
உள்ளம்தான்
சுத்த
சித்துருவாய்
எம்பெருமான்
நடம்புரியும்
இடம்
என
நான்
தெரிந்தேன்
அந்த
வித்தகர்தம்
அடிக்கேவல்
புரிந்திட
என்
சிந்தை
மிக
விழைந்த
தாலே”
- வள்ளலார்
விடை :
முன்னுரை:
வள்ளலார் எனப் போற்றப்படும் இராமலிங்க அடிகள் சமத்துவமும், சமதர்மமும் வளரவும், சமயம் என்பது பிறர் நலன் போற்றுவதாக அமையவும் குரல் கொடுத்தவர் ஆவார். இறைவனை எண்ணி இவர் பாடிய பாடல்கள் சிறப்புடன் விலங்குகின்றன. அந்த வகையில் இவரது பாடல் ஒன்றிற்கு அமைந்துள்ள இலக்கிய நயங்களைக் காண்போம்.
திரண்ட கருத்து:
எந்த ஒரு வேறுபாட்டையும் வெளிப்படுத்தாது எல்லா உயிர்களையும் தம் உயிர் போல எண்ணி, தன் உள்ளத்துள்ளே ஒத்த அன்புடையவராய் இருப்பவரை இறைவன் உவந்து ஏற்கிறார் அத்தகைய உள்ளம் உடையவர்களே சித்துருவாய்த் திகழும் எம்பெருமான் நடம்புரியும் இடம் ஆகும். எல்லா வல்ல இறைவன் அடிக்கு ஏவல் புரியும் சிந்தைமிக இருந்ததால் எவ்வுயிரிடத்தும் அன்புடன் வாழ விழைந்தேன்.
மையக்கருத்து:
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு பாராட்டி உயிர்களுக்கு ஏவல் செய்வதே இறைவனுக்குச் செய்யும் தொண்டு. அவர் உள்ளத்துள்ளே இறைவன் உள்ளான் என்ற கருத்தை மையமாக வைத்து வள்ளலார் இப்பாடலைப் புனைந்துள்ளார்.
மோனை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும்.
சான்று: எத்துணையும் எவ்வுயிரும் உடையவராய் உவக்கின்றார் என மோனை நயம் அமைந்துள்ளது.
எதுகை நயம்:
செய்யுளில் அடியிலோ சீரிலோ இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும்.
சான்று: எத்துணையும், ஒத்துரிமை, சித்துரு, வித்தகர் என எதுகை நயம் மிக்குள்ளது .
சந்த நயம்:
“சந்தம் தமிழுக்குச் சொந்தம்” என்பதை உணர்த்தும் வகையில் அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பெற்று அகவல் ஓசையுடன் மையம் பொருந்த அமைந்துள்ளது.
அணி நயம்:
“எவ்வுயிரும் தம்முயிர் போல” என்பதில் உவமையணி இடம்பெற்றுள்ளது
முடிவுரை:
பக்தி உணர்வு சொட்ட பாடப்பட்டுள்ள இப்பாடல் பக்திச்சுவையும் இலக்கியச் சுவையையும் ஒருங்கே பெற்றுள்ளது.
மொழியோடு விளையாடு
1.
எழுத்துகளை
முறைப்படுத்தி
சொற்களைக்
கண்டுபிடி.
விடை :
. புன்பமொப்லமைழி - பன்மொழிப்புலமை.
. யனிநேம்தம் - மனிதநேயம்.
. கச்வப்ஞ் புசிழ்ச - வஞ்சப்புகழ்ச்சி.
. தைக்விதுகபு - புதுக்கவிதை.
. டுசிப்காட்ஞ்ப - காஞ்சிப்பட்டு
2.
அகராதி
காண்க.
விடை :
. குரிசில் – பெருமையில் சிறந்தேன், உபகாரி, தலைவன்.
. தலையளி - முகமலர்ந்து கூறுதல், அன்பு, அருள்.
. நயம் - நன்மை, விருப்பம், போற்றுகை, மிகுதி, பயன், நுண்மை , அருள்.
. உய்த்தல் - செலுத்துதல், நடத்துதல், நுகர்தல், அனுப்புதல், அறிவித்தல், நீக்குதல்.
. இருசு - நேர்மை, வண்டியச்சு, மூங்கில்.
3.
தொகைக்
சொற்களைக்
கொண்டு
பத்தியைச்
சுருக்குக.
சேர,
சோழ,
பாண்டிய
அரசர்களிடம்
யானைப்படை,
குதிரைப்படை,
தேர்ப்படை,
தரைப்படை
ஆகியவை
இருந்தன.
அவர்கள்
மா,
பலா,
வாழை
ஆகிய
கனிகளுடன்
விருந்தோம்பல்
செய்தனர்.
கிழக்கு,
மேற்கு,
வடக்கு,
தெற்கு
ஆகிய
திசைகளில்
அவர்களின்
ஆட்சிப்புகழ்
பரவியிருந்தது.
தமிழகத்தின்
குறிஞ்சி,
முல்லை,
மருதம்,
நெய்தல்
ஆகிய
நிலங்களில்
உள்ள
புலவர்கள்
இவ்வரசர்களை
இம்மையிலும்
மறுமையிலும்
வாழ்கவென்று
வாழ்த்தினர்.
விடை:
மூவேந்தர்களிடம், நாற்படைகளும் இருந்தன. முக்கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். நாற்றிசைகளிலும் அவர்களின் ஆட்சி புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் ஐவகை நிலங்களிலும் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இருமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்.
4.
வினைப்பகுதிகளை
எச்சங்களாகவும்
முற்றாகவும்
மாற்றுக.
விடை :
பூங்கொடி நேற்று பள்ளிக்குச் சென்றாள் (செல்). தன் தோழிகளைக் கண்டு(காண்)மகிழ்ச்சியுடன் உரையாடினாள் (உரை). பின்னர் வங்கிக்குப் போய் (போ) தான் கூடுதலாகச் செலுத்திய (செலுத்து) தொகையை திரும்பப் பெற்று (பெறு)க் கொண்டு(கொள்) வந்தாள். வரும் வழியில் வீட்டுக்கு வேண்டிய (வேண்டு) பொருள்களை வாங்கி, அங்கு நின்ற நில்) பேருந்தில் ஏறி (ஏறு) வீடு திரும்பினாள்(திரும்பு).
5.
பொருத்தமான
தமிழ்
எண்களைக்
கொண்டு
நிரப்புக.
தமிழிலுள்ள மொத்த எழுத்துகள் உசஎ.
இவை முதலெழுத்து, சார்பெழுத்து என்று உ பிரிவாகப் பிரிக்கப்படும். கஉ உயிரெழுத்துகள் கஅ மெய்யெழுத்துகள் ஆகிய நு0 எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். இவற்றைச் சார்ந்து பிறப்பவை சார்பெழுத்துகள் எனப்படுகின்றன. சார்பெழுத்துகள் க0 வகைப்படும்.
6. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
உயிர்களிடத்து அன்பு வேண்டும்
உயிர்ப் பசி போக்குபவன்
ஆண்டவனுக்கே
தொண்டாற்றும் அடியவனாகிறான்
உயிர் நேயமே உண்மை நாகரிகம்
உயிர் நேயம் உள்ளவரே
நாகரிகர் ஆவார்.....
அந்நேயமற்றோர் நரகரே
நிற்க அதற்குத் தக
7.
நான்
தலைமைப்
பொறுப்பிற்கு
வந்தால்..
விடை :
. அனைவரிடமும் பாகுபாடின்றி நடந்து கொள்வேன்
. இயன்றவரை பிறருக்கு உதவுவேன்.
. பெரியோர்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்
. அனைவரையும் ஈடுபாட்டுடன் பணிபுரியச் செய்வேன்.
. என் கீழ் பணிபுரிவோரின் சுக துக்கங்களில் பங்கு கொள்வேன்.
. அன்பு கலந்த கண்டிப்புடன் கடமையாற்றுவேன்.
கலைச்
சொல்லாக்கம்
மனிதம் - (Humane) மனிதப் பண்புகளாகிய நற்பண்புகளைக் குறிப்பது
ஆளுமை - (Personality) புறத்தோற்றத்தை மட்டும் குறிப்பது அல்ல நற்பண்புகள் ஆளுமைத் தன்மை, தலைமைப் பண்புகளையும் குறிப்பது.
பண்பாட்டுக் கழகம் - (Cultural academy) பண்பாடு, நாகரிகத்தைப் பறைசாற்றும் அமைப்பு
வசனகவிதை - (free verse) இலக்கணத்துக்குள் கட்டுப்படாது. பேசுவது போல் கருத்தைக் கூறுவது.
உவமையணி - (Simitee) ஒரேதன்மையை உரைப்பது.
உருவக அணி - (Metabhor) உவமை. உவமேயம் ஒன்றே என்று தோன்றக் கூறுவது.
அறிவை விரிவு செய்
சிற்பியின் மகள் – பூவண்ணன்
அப்பா சிறுவனாக இருந்தபோது - அலெக்சாந்தர் ரஸ்கின் (தமிழில் நா. முகமது செரீபு)
இணையத்தில் காண்க.
http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-/2009-06-13-06-32-59
http://www.tamilvu.org/library/l1220/html/l1220ind.htm
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-23.htm
http://www.chennailibrary.com/samuthiram/samuthiram.html
https://vannathasan.wordpress.com/2010/07/30/கவிதைகளுக்கு-கல்யாண்ஜி
இணையச் செயல்பாடுகள்
தேடிப் பிடி புதுச் சொற்களை!
படிகள்
● கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி
tamilwordgame
என்னும் இணையச் செயலியின் பக்கத்திற்குச் செல்லவும். அங்குக்
கொடுக்கப்பட்டிருக்கும் play பொத்தானைச் சொடுக்கவும்.
● திரையில் Easy, Medium, Hard ஆகிய மூன்று தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஏதேனும்
ஒன்றைத் தெரிவு செய்து வார்த்தைகளை இணைத்து விளையாடவும்.
● உதாரணத்திற்கு Easy என்பதைச் சொடுக்கியதும் திரையின் வலது பக்கத்தில் எழுத்துக்கட்டகம்
தோன்றும். அதில் உள்ள எழுத்துகளை இணைத்துப் புதுச் சொற்களை உருவாக்கவும்.
● உருவாக்கும் சொற்கள் சரியாக இருப்பின் இடது பக்கத்தில் உள்ள
கரும்பலகையில் இடம்பெறும். இது போன்று மீண்டும் மீண்டும் நீங்கள் சொற்கள் உருவாக்கும்
செயல்பாட்டைத் தொடரலாம்.
பொதுக்
கட்டுரைகள்
1.
காலத்தை
வெல்லும்
கணினி
-
முன்னுரை:
கடந்த காலத் தகவல்களைத் தன்னுள் தக்க வைத்தும் நிகழ்காலத் தகவல்களை அவ்வப்போது கொடுத்தும் வருங்காலத்திற்கு வேண்டியவற்றை உருவாக்கியும் கணினி செயல்படுவதால் கண்ணினும் மேலாகப் போற்றப்படுகிறது.
கணினியின் தோற்றம்:
கணினியின் முன்னோடி எனப்படுவது அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனமாகும். மின்னணுக் கணினியை டாக்டர் ஆலன் எம். டூரிங் 1824 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹோவண்ட் தற்போதைய கணினியை வடிவமைத்தார். சூப்பர் கணினியை 1976 - ஆம் ஆண்டு அமெரிக்கரான வான்டேஸஸ் உருவமைத்தார்.
இணையதள வசதி:
இணையதளத்தின் மூலம் உலகின் மறுகோடியில் உள்ளவரிடமும் சில நொடிகளில் தொடர்பு கொள்ள முடிகிறது. மின் அஞ்சல் அனுப்பவும் நேரில் உரையாடுவதைப் போன்று உரையாடவும் பயன்படுகிறது.
பயன்படும் துறைகள்:
வானூர்தி, ஏவுகணை, இராக்கெட், கப்பல்கள், வேளாண் கருவிகள், வானிலை அறிவுப்பு, வணிகம் போன்று பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
முடிவுரை:
கணினி வாழ்க்கையின் உயிர்நாடியாகி விட்டதால் கணினியை ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்வோம். கணினி சார்ந்த வேலைவாய்ப்புகள் இன்று பல்கிப் பெருகி உள்ளதால் கணினி வழிக்கல்வியை நன்கு கற்போம்.
2.
சுற்றுச்சூழல்
நிலை
முன்னுரை:
தூய நீர், காற்று, நிலம், ஒலி மாசடைவதால் நாள்தோறும் புதுப்புது நோய்களுக்கும், பேரிடர்களுக்கும் ஆளாகின்றோம். இதனைத் தவிர்க்க சுற்றுச் சூழலைப் பாதுகாத்திட வேண்டும்.
காற்று, நீர், நிலம் மாசுபடுதல்:
தொழிற்சாலைகள் கக்கும் கரும்புகை காற்றுடன் கலப்பதால் காற்று வெளி மாசடைகிறது. இந்திய நாட்டில் பாயும் ஆறுகளில் 70% கழிவுகள் சேர்ந்த கலப்பட நீராக உள்ளது. எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படுவதால் மழை குன்றி மண்வளம் குறைந்து நிலங்கள் பாலை வனங்களாக மாறுகின்றன. தொழிற்சாலைகள் வெளியிடும் இரசாயனக் கழிவுகளால் நீர் மாசுபடுவது கண்கூடாகத் தெரிகிறது.
மாசுக்கட்டுப்பாடு:
கழிவுகளைக் குறைத்தல், திரும்பப் பயன்படுத்துதல், பிறிதொன்றாக மாற்றல் முறையில் மாசுக்கட்டுப்பாடு செய்தல் வேண்டும்.
மாணவர் பங்கு :
மாணவர்களாகிய நாம் இயற்கையோடு இயைந்த இனிய வாழ்வுக்கு நம்மை ஆயத்தம் செய்து கொள்வோம். பள்ளியில், வீடுகளில், சாலை ஓரங்களில் மரங்கள் நடுவோம். சிறு சிறு தடுப்பணைகள் கட்டி மழை நீரைச் சேமிப்போம்,
முடிவுரை:
“பசுமை எங்கோ வளமை அங்கே” என்பதைப் போல சூழலைப் பாதுகாத்து சுகமாக வாழ்வோம்.
3.
பெண்
கல்வி
முன்னுரை:
தமிழ்ச் சமுகாயத்தில் நன்மதிப்புப் பெற்றிருந்த பெண்களைப் பிற்காலத்தில் வீட்டிற்குள் முடக்கி வைத்தனர். நாட்டு விடுதலைக்குப் போராடிய பெண்களில் பலர் சமூக விடுதலைக்குப் போராடினர்.
பெண்ணுரிமை:
பெண்கள் உரிமை பெற்றுப் புது உலகப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் பலர். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று சிந்தித்தார் பெரியார். பெண்கள் தம் கணவனுக்கு மட்டும் உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ்பெற்ற பெண்மணிகளாக மாற வேண்டும்.
பெண்கல்வி:
பெண்கள் முன்னேற்றத்திற்கு பெருந்தடை வீட்டில் அவர்களை முடக்கி வைத்ததே என்று பெரியார் போன்றோர் கருதினர். நமது சமுதாயத்தில் பெண்கள் சார்ந்த தலைகீழான ஒரு புரட்சி ஏற்பட்டாலொழிய பெரிய மாறுதல்களைக் கொண்டு வரவியலாது. ஆண்கள் பெண்களைப் படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். பெண்கள் கல்வி பெறுவது அவர்கள் உரிமை மட்டுமன்று; சமூக மாற்றத்திற்கு மிக இன்றியமையாததாகும்.
சமுதாயத்தில் பெண்கள் நிலை:
பகுத்தறிவற்ற சீவன்களாய்ப் பெண்களை வைத்திருக்கும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். அரசியல், நீதித்துறை, காவல்துறை, இராணுவம் போன்ற பல துறைகளில் பெண்கள் மிளிர்ந்தாலும் பல நிலைகளில் ஆண்களைச் சார்ந்தே இருக்க வேண்டி உள்ளது. “பெண்கள் சமூகத்தின் கண்கள்” என்று கூறும் நிலை உருவாக வேண்டும்.
சொத்துரிமை:
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்து விட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லா வகையான அடிமைத்தனங்களும் ஒழிந்து போகும். பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றில் சொத்துரிமை இல்லாதது என்பதே முதன்மையான காரணம். பெண்களுக்குச் சொத்துரிமை தற்போது கிடைத்து உள்ளதால் ஒரளவு பெண்கள் நிலை உயர்ந்துள்ளது.
மணக்கொடை:
தமிழகத்தில் பெற்றோர் பலர் தம் மகனின் கல்விக்காகச் செலவழித்த பணம், தங்கள் கடமையைச் சேர்ந்தது எனக் கருதாது, அதை ஏதோ ஒரு தொழிலில் போட்ட முதலீடாகக் கருதிக் கொண்டு அந்த முதலீட்டை வட்டியுடன் சேர்த்தே, அவனுக்கு வரப்போகின்ற மனைவி மூலம் மணக்கொடையாய்ப் பெற்றுவிட வேண்டுமென்று துடிக்கின்றனர்.
சமுதாயத்தில் முறையான ஒழுக்கமும் அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான் இம்மாதிரியான தீமைகளை ஒழிக்க இயலும்.
பெண்கல்வியால் ஏற்படும் மாற்றங்கள்:
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளும் நிலை இன்று உருவாகி உள்ளது. பெண்களும் ஆண்களைப் போல் அரசுப் பணிகளில் இன்று அமர்ந்துள்ளனர். பெண்களுக்கு இன்று சொத்துரிமை கிடைத்துள்ளது. கற்பென்பது ஆண், பெண் இருபாலர்க்கும் பொதுவானது என்ற கருத்து பரவி உள்ளது.
முடிவுரை:
பெண் கல்வியினால் இன்று சமுதாயத்தில் ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் பெண்களின் நிலை மேம்படும் என உறுதி ஏற்போம்.
4.
சேமிப்பு
ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை
- திருக்குறள்
துன்பத்தைத் துரத்தி, இன்பத்தைத் துய்த்து அறத்தைப் போற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ பொருள் அவசியம். பொருளின் தேவை உணர்ந்து அதை நாம் சேமிக்கும் பழக்கத்தையும் பெறுதல் வேண்டும். அத்தகைய சேமிப்பின் சிறப்பை இக்கட்டுரை வாயிலாகக் காண்போம்.
சேமிப்பு:
அன்றாடத் தேவை, அவசரத் தேவை, எதிர்காலத் தேவை - இந்தத் தேவைகளை நிறைவு செய்ய சேமிப்பே வகை செய்கின்றது. பாடுபட்டுப் பொருள் தேடுகின்ற காலத்திலே சேமிப்பு மிகவும் தேவையாகிறது.
சிக்கனத்தைப் பற்றிய பழமொழிகள்:
. அஞ்சலக மாதாந்திர சேமிப்பு
. ஆயுள் காப்பீட்டுச் சேமிப்பு .
. வங்கிகளில் சேமிப்புத் திட்டம்.
முதலியவை சேமிப்பு வழிகளாக இருக்கின்றன. இப்பொழுது மக்கள் பங்குச் சந்தை சார்ந்த (மியூச்சுவல்) பண்ட் மற்றும் லாபகரமான பங்குகளை வாங்கியும் சேமிக்கின்றனர்.
சேமிப்புன் பயன்கள்:
வரவுக்கு ஏற்ப செலவு செய்து வரவில் ஒரு பகுதியைச் சேமித்தோமானால் எதிர்பாராத வகையில் ஏற்படும் செலவுகளைச் சமாளிக்கலாம். வருங்காலத்தில் மேற்படிப்பிற்கும் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் சேமிப்பு அவசியமாக அமைகிறது.
முடிவுரை:
மாணாக்கர்கள் தம் இளமைப் பருவத்திலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்தால் தாமும் வளம் பெற்று நாட்டையும் வளம் பெறச் செய்யலாம்.
"சிக்கனம் வீட்டைக் காக்கும்"
“சேமிப்பு நாட்டைக் காக்கும்”.
5.
நூலகம்
முன்னுரை:
“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்
நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழ்”
என்பதனைப் போல அறிவை வளர்க்கும் இடமான நூலகம் ஊர்தோறும் தெருதோறும் பள்ளிதோறும் இருக்க வேண்டும்.
“நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு” என்று ஔவையார் கூறுவதைப் போல் நாம் எவ்வளவு படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவு வளரும்.
பள்ளி நூலகம்:
மொழிக்கல்வியின் ஒரு கருவூலமே பள்ளி நூலகம்தான். கற்பனைக் கதைகள், புராணக் கதைகள், சிறுகதைகள், அறிவியல் உண்மைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என பள்ளி நூலகத்தில் உள்ள பலதரப்பட்ட புத்தகங்களை எடுத்து மாணவர்கள் பயனுள்ள வகையில் வாசிக்க வேண்டும். வாசிக்கும் பழக்கம் மூலமே பல தலைவர்கள் தங்களது அறிவை மேம்படுத்தியுள்ளனர். தேவைக்கேற்ப புதிய புதிய புத்தங்களை நூலகத்தில் வாங்கி படிக்கப் பழக்க வேண்டும்.
பொது நூலகம்:
தமிழக அரசுதான் இந்தியாவிலேயே முதன்முறையாக 1948 - ஆம் ஆண்டு சென்னைப் பொது நூலகச் சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளின் சீரான செயல்பாட்டிற்கு வித்திட்டது. “ஊர்தோறும் நூலகம்” என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழக பொது நூலகத்துறை செயல்படுகிறது.
பயன்கள்:
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களும் அதிக விலையுள்ள நூல்களைச் செலவின்றி படிக்க உதவுவது நூலகமே. இன்று போட்டித் தேர்வுகளுக்கும் பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி - வினா போட்டிகளுக்கு தயாரிப்பதற்கும் நூலகமே சிறந்த கருவியாகும். ஒரு புத்தகம் நூறு நண்பர்களுக்குச் சமம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகம் தான். ஒருவன் புத்தகங்களைப் படித்து புதிய விசயங்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதை விட பிறவாமல் இருப்பதே நல்லது என்கிறார் சர்ச்சில்.
வாசிப்போம் நேசிப்போம்:
அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு என்பது பாரதிதாசனின் வெறும் பாடல் வரிகளல்ல. மாணவர்களுக்கான வேதவாக்கு கைபேசி, இணையம், முகநூல், கட்செவி அஞ்சல் போன்றவற்றில் தங்களின் நேரத்தை பலர் அதிகளவில் வீணாக்குவதால் வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துள்ளது. செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் சாதாரண தளம் தான் சமூக வலைதளங்கள். அறிவை வளர்ப்பதற்கு நூலகங்களே தகுந்த இடமாகும்.
முடிவுரை:
"அமைதியோடு மதி வளர்க்கும் இடம். பண்பாடு போதிக்கும் பயனுள்ள இடம். விலை மதிப்பில்லாத நூல்கள் வசிப்பிடம் , புரட்ட புரட்ட புத்தியை வழங்குமிடம். அரசுப் பணி ஆட்சிப்பணி கிடைக்குமிடம். கடன் கேட்காத நல்ல நண்பன் வாழுமிடம்'' என்பதற்கேற்ப நூலகம் செல்வோம். வாசிப்பை வழக்கமாக்கிக் கொள்வோம்.