புவியியல் - காற்று (Wind) | 9th Social Science : Geography : Atmosphere
காற்று (Wind)
புவியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக நகரும் வாயுக்களே காற்று எனப்படும். வளிமண்டலத்தில் காற்று செங்குத்தாக அசையும் நிகழ்வே காற்றோட்டம் (Air
Current) என்று அழைக்கப்படுகிறது. காற்று எப்பொழுதும் உயர் அழுத்தப் பகுதியிலிருந்து தாழ்வழுத்தப் பகுதியை நோக்கி வீசும். காற்று வீசும் திசையைப் பொறுத்தே அதன் பெயரும் அமைகிறது. உதாரணமாக கிழக்கு திசையிலிருந்து வீசும் காற்று 'கீழைக்காற்று எனப்படுகிறது
காற்றின் வேகத்தை அளக்க காற்று வேகமானியும் (Anemometer)
காற்றின் திசையை அறிய காற்றுதிசைகாட்டியும் (Wind Vane) கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு கிலோமீட்டர் மணி அல்லது கடல்மைல் (Knots) ஆகும்.
காற்று நான்கு வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
● கோள் காற்றுகள் (Planetary
Winds) .
● காலமுறைக் காற்றுகள் (Periodic
Winds)
● மாறுதலுக்குட்பட்ட காற்றுகள் (Variable Winds)
● தலக்காற்றுகள் (Local
Winds)
கோள்காற்றுகள் (Planetary Winds)
வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள் கோள்காற்று எனப்படும். இவை நிலவும்காற்று (Prevailing Winds) எனவும் அழைக்கப்படுகிறது. வியாபாரக்காற்றுகள் (Trade Winds) மேலைக்காற்றுகள் (westerlies)
மற்றும் 'துருவகீழைக்காற்றுகள் (Polar Easterlies) 'கோள் காற்றுகள் ஆகும்.
வியாபாரக்காற்றுகள் (Trade Winds)
வட மற்றும் தென் அரைக்கோளங்களின் துணை வெப்ப மண்டல உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து நிலநடுக்கோட்டு தாழ்வழுத்த மண்டலங்களை நோக்கி வீசும் காற்று வியாபரக்காற்று எனப்படும். இக்காற்றுகள் தொடர்ச்சியாகவும்,
அதிக வலிமையுடனும் வருடம் முழுவதும் ஒரே திசையில் நிலையாக வீசுகின்றன. வியாபாரிகளின் கடல்வழி பயணத்திற்கு இக்காற்றுகள் உதவியாக இருந்ததால் இக்காற்று வியாபரக்காற்று என அழைக்கப்படுகின்றது.
செயல்பாடு
வியாபாரக் காற்றுகளுக்கும் சகாரா அடகாமா போன்ற பாலைவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினைக் கண்டறிக
மேலைக் காற்றுகள் (Westerlies)
மேலைக் காற்றுகள் நிலையான காற்றுகள் ஆகும். இவை வட, தென் அரைக்கோளங்களின் வெப்பமண்டல உயர் அழுத்தமண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசுகின்றன. இவை வட அரைக்கோளத்தில் தென் மேற்கிலிருந்து,
வடகிழக்காவும், தென் அரைக்கோளத்தில் வடமேற்கிலிருந்து தென் கிழக்காகவும் வீசுகின்றன. மேலைக் காற்றுகள் மிகவும் வேகமாக வீசக்கூடியவை எனவே தென் கோளத்தில் இக்காற்றுகள் 40" அட்சங்களில் கர்ஜிக்கும் நாற்பதுகள் எனவும் 50"
கட்சங்களில்
"சீறும் ஐம்பதுகள் எனவும் 60 அட்சங்களில் கதறும் அறுபதுகள் எனவும் அழைக்கப்படுகிறது.
துருவகீழைக்காற்றுகள் (Polar Esterlies)
துருவ உயர் அழுத்த மண்டலத்திலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலத்தை நோக்கி வீசும் குளிர்ந்த,
வறண்ட காற்றுகள் துருவ கீழைக்காற்றுகள் எனப்படுகின்றன. இவை வடஅரைக்கோளத்தில் வடகிழக்கிலிருந்தும்,
தென்அரைக்கோளத்தில் தென் கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இக்காற்றுகள் வலுவிழந்தக் காற்றுகளாகும்.
தகவல் பேழை
புவியின் சுழற்சி காரணமாக காற்று தான் வீசும் பாதையிலிருந்து விலகி வீசும்.
இவ்வாறு காற்று தன் பாதையிலிருந்து விலகி வீசுவதை கொரியாலிஸ் விளைவு என்கிறோம்.
காற்று வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடப்புறமாகவும் விலகி வீசுகின்றன.
இதுவே பெரல்ஸ் விதி' எனப்படுகிறது.
பெரல்ஸ் விதியை முன்மொழிந்தவர் வில்லியம் பெரல் ஆவார்.
வில்லியம் பெரல் G.G கொரியாலிசின், கொரியாலிஸ் விசையை பயன்படுத்தி பெரல்ஸ் விதியை நிரூபித்தார்.
காலமுறைக்காற்றுகள் (Periodic Winds)
இக்காற்று பருவத்திற்கேற்ப தன் திசையை மாற்றிக் கொள்கின்ற தன்மையுடையது.
இவ்வாறு திசையை மாற்றிக் கொள்வதற்கு நிலமும் கடலும் வெவ்வேறு விகிதங்களில் வெப்பமடைவதே காரணமாகும். காற்றுகள் தன் திசையைப் பருவத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதால் இதற்கு பருவக்காற்று மான்சூன்) என்று பெயர். இந்திய துணைக்கண்டத்தில் வீசும் காற்று.
சூறாவளிகள் (Cyclone)
சைக்ளோன் எனும் சொல் ஒரு கிரேக்கச் சொல்லாகும். இதற்கு சுருண்ட பாம்பு என்று பொருளாகும் அதிக அழுத்தமுள்ள பகுதிகளிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவத்தில் குவியும் காற்று சூறாவளி (Cyclone) என்று அழைக்கப்படுகிறது. புவியின் சுழற்சியினால் சூறாவளி வட அரைகோளத்தில் கடிகாரச்சுற்றுக்கு எதிர்த்திசையிலும்,
தென் அரைகோளத்தில் கடிகாரத்திசையிலும் வீசுகிறது.
சூறாவளிகளின் வகைகள்:
● வெப்பச்சூறாவளிகள்
● மிதவப்பச்சூறாவளிகள்
● கூடுதல்வெப்பச்சூறாவளிகள்
வெப்பசூறாவளிகள் (Tropical Cyclones)
வெப்பச் சூறாவளிகள் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இவை இந்தியப் வருங்கடல் பகுதியில் சூறாவளிகள் (Cyclone)
என்றும், மேற்கு பசிபிக்பெருங்கடலில் டை-பூன்கள் (Typhoons) என்றும், கிழக்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஹரிக்கேன்கள் (Hurricanes)
என்றும், பிலிப்பைன்ஸ் பகுதிகளில் பேக்யுஸ் (Baguios) என்றும், ஜப்பானில் டைபபூன் என்றும், ஆஸ்திரேலியாவில் வில்லிவில்லி(Wily Wily)என்றும் அழைக்கப்படுகிறது. வெப்பச் சூறாவளிகள் கடலோரப் பகுதிகளில் அதிகமான உயிர்ச்சேதங்களையும்,
பொருளாதாரச் சேதங்களையும் ஏற்படுத்திய பின்னர் நிலப்பகுதியைச் சென்றடையும்.
தகவல் பேழை
சூப்பர் சைக்ளேன் (Super Cyclone)
1999ம் வருடம் அக்டோபர் 29ம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் கடற்கரையோ பகுதிகளை பெரும் சூறாவளி தாக்கியது. இது இந்திய வரலாற்றிலேயே அதிக வலுவுடன் வீசி மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி ஆகும். காற்று 280 கி.மீ வேகத்தில் வீசியது. கடலலை 7 மீட்டர் உயரத்திற்கு எழும்பி கடற்கரையிலிருந்து 20 கிமீ தூரம் வரை உள்ளப் பகுதிகளில் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் இச்சூறாவளியால் ஒடிஷாவின்12 கடலோர மாவட்டங்களில் வாழ்ந்த 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர்.
உங்களுக்குத் தெரியுமா?
இந்தியப் பெருங்கடலில் உருவாகும் சூறாவளிகளுக்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன் பாகிஸ்தான், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்று பொது 2000 ஆண்டு ஆலோசனை கூட்டம் நடத்தின.
பின்னர் 2004ஆம் ஆண்டு ஒவ்வொரு நாடும் சூறாவளிக்கு பெயர்ப்பட்டியலை கொடுத்தன.
இதனடிப்படையில் ஒவ்வொருமுறை சூறாவளி உருவாகும் போதும் இப்பட்டியலில் உள்ள பெயர்களை வரிசைக்கிரமமாக பயன்படுத்தி வருகிறோம்.
மிதவெப்பச்சூறாவளிகள் (Temparate Cyclones)
35o
முதல் 65o வடக்கு மற்றும் தெற்கு அட்ச பகுதிகளில் வெப்பம் மற்றும் குளிர்காற்றுத் திரள்கள் சந்திக்கும் பகுதிகளில் மித வெப்பச் சூறாவளிகள் உருவாகின்றன. மித வெப்பச் சூறாவளிகள் வெப்பச் சூறாவளிகள் போல நிலத்தை அடைந்தவுடன் வலுவிழக்காது. இச்சூறாவளிகள் பொதுவாக வட அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி,
வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்தியத் தரைக்கடல் பகுதிகளில் உருவாகின்றன. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் இச்சூறாவளிகள் ரஷ்யா மற்றும் இந்தியப்பகுதி வரை பரவி வீசுகின்றன. இந்தியாவை அடையும் இக்காற்று ‘மேற்கத்திய இடையூறு காற்று’ (Western Disturbance) என்று அழைக்கப்படுகிறது.
வளிமுகம்
(Front) என்பது வெப்பக்காற்றுத் திரளையும், குளிர்க்காற்றுத் திரளை யும் பிரிக்கும் எல்லையாகும்.
இக்காற்றுத் திரள்கள் ஒன்றுக்கு ஒன்று அடர்த்தியிலும், வெப்பத்திலும் ஈரப்பதத்திலும் வேறுபட்டுக் காணப்ப டும்.
இவ்வாறு காற்று சந்திக்கும் பகுதிகளில் அக்காற்றின் தன்மையைப் பொறுத்து மழைப்பொழிவு, பனிப்பொழிவு, ஆலங்கட்டி மழை, இடி, மின்னல் கூடிய மழை உருவாகும்
கூடுதல் வெப்பச்சூறாவளிகள் (Extra Tropical Cyclones)
கூடுதல் வெப்பச் சூறாவளிகள் என்பது 300 முதல் 600 வரை உள்ள வடக்கு மற்றும் தெற்கு அட்சப்பகுதிகளில் வீசுகின்றன. இது ‘மைய அட்ச சூறாவளிகள்’ (Mid Latitudes
Cyclones) என்றும் அழைக்கப்படுகின்றன.இச்சூறாவளிகள் தன் ஆற்றலை உயர் அட்சங்களின் வெப்ப மாற்றங்களிலிருந்து பெறுகின்றன. இது லேசான சாரல்மழை (Mildshowers) முதல் பெருங்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழைப்பொழிவையும் (Heavy hails), இடியுடன் கூடிய மழைப்பொழிவையும் (Thunder
storms) usufüsun pland (Blizzards) மற்றும் சுழல் காற்றுகளையும் (Tomadoes) அளிக்கின்றன
சிந்தனை வினா
கடலூர் மற்றும் நாகப்பட்டினம் எப்பொழுதும் சூறாவளிகளால் பாதிக்கப்படுகின்றன ஏன்?
எதிர்ச் சூறாவளி மற்றும் சூறாவளி
எதிர்ச் சூறாவளிகள் (Anti-Cyclones)
தாழ்வழுத்த சூறாவளிகளின் நேர் எதிர் மறையான அமைப்பு கொண்டது எதிர்ச் சூறாவளி ஆகும். இங்கு உயர் அழுத்தப் மண்டலம் மையத்திலும், தாழ்வழுத்தங்கள் அதனைச் சூழ்ந்தும் காணப்படுகிறது. உயர் அழுத்தமுள்ள மண்டலத்திலிருந்து தாழ்வழுத்தப் பகுதிக்கு சுழல் வடிவத்தில் காற்று வந்தடைகிறது. எதிர்ச் சூறாவளிகள் பெரும்பாலும் வெப்ப அலைகளுடன்,
குளிர் அலைகளுடன் காணப்படுகின்றன.
தலக்காற்றுகள் (Local Winds)
ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறுகிய காலத்திற்கு மட்டும் வீசும் காற்று தலக்காற்று எனப்படும். தலக்காற்றின் தாக்கம் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். இவை குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் வீசுகின்ற காற்றாகும். இது உலகில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.
● ஃபான் காற்று(Foehn)
- (ஆல்ப்ஸ் – ஐரோப்பா)
● சிராக்கோ (Sirocco)
- (ஆப்பிரிக்காவின் வட கடற்கரைப் பகுதி)
● சின்னூக் (Chinnook)
- (ராக்கி மலைத்தொடர் – வட அமெரிக்கா)
● லூ (Loo) - (தார் பாலைவனம் –
இந்தியா)
● மிஸ்ட்ரல் (Mistral) - (மத்தியத் தரைக்கடல் பகுதி –
பிரான்ஸ்)
● போரா (Bora) - (மத்தியத் தரைக்கடல் பகுதி – இத்தாலி)