பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - விரிவான விடையளி | 9th Social Science : Economics: Money and Credit
V. விரிவான விடையளி.
1.
நவீன
உலகில்
பணப்பரிமாற்றம்
எவ்வாறு
நடைபெறுகிறது
என்பதை
விவரி.
விடை:
நவீன உலகின் (மின்னணு உலகின்)பணப் பரிமாற்றம்:
• சேமிப்பில் உள்ள பணத்தை நேரடியாக வங்கிக்குச் சென்று படிவத்தை நிரப்பி அல்லது காசோலை வழங்கி பெறுவதற்குப்பதிலாக பணம் எடுக்கும் இயந்திரத்தின் மூலம் தேவையான பணத்தை எடுக்க தானியங்கி பணம் வழங்கும் அட்டை பயன்படுகிறது. இதே போல் வங்கிக்குச் செல்லாமல் நமது கணக்கில் பணம் செலுத்தும் வசதியும் உள்ளது
• முன்னதாகப் பணம் பெற்று பின்னர் செலுத்தும் வகையில் கடன் அட்டை பயன்படுகிறது.
• பணப்பரிமாற்றம் செய்ய காசோலை அல்லது கேட்பு வரைவோலை பயன்படுத்துவதற்கு மாற்றாக இணையவழி பரிமாற்றங்கள் நடைமுறையில் உள்ளன. உலகின் எந்த மூலையிலிருந்தும் நினைத்த நொடியில் பணப்பரிமாற்றம் செய்யலாம்.
• அலைபேசி மூலம் மின்னணு பரிமாற்றம் செய்யும் தொழில் நுட்பம் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.
2.
இந்திய
ரிசர்வ்
வங்கியின்
பணிகளை
விவரி.
விடை:
இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகள்:
• இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்படத் தொடங்கியது.1937ல் இருந்து மும்பையில் நிரந்தரமாக இயங்கி வருகிறது. 1949ல் நாட்டுடமையாக்கப்பட்டது.
• இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன (1969). இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்கு படுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மேற்கொள்கிறது.
• பணப் பரிமாற்றத்தை பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் அரசுக்கு உண்டு. வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது. –
• ஒரு நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையில் முக்கியப் பங்களிப்பான விலைக்கட்டுப்பாட்டை இந்தியாவில் ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது.
• எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது. இலங்கை, பூடான், ஈராக், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அச்சடித்து அனுப்பப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ரூபாய் மற்றும் வங்கிகள் தொடர்பான ஆவணங்கள் அச்சடிக்க அச்சகங்கள் உள்ளன.
• அச்சடிக்கப்பட்ட பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
3.
பணத்தின்
செயல்பாடுகளைப்
பட்டியலிடுக.
விடை:
பணத்தின் செயல்பாடுகள்:
• பண்டமாற்று முறையினால் உருவாகும் சிக்கல்களுக்கு மாற்றாக பணத்தின் வரவு பெரிதும் ஏற்கப்படவேண்டும்.
பணம் - பரிமாற்ற ஊடகம்:
• ஒருநாட்டில் அனைத்து நுகர்பொருள்கள் மற்றும் சேவைகளுக்குப் பணம் தடையின்றி ஏற்கப்படவேண்டும்.
பணம் - கணக்கு அலகு:
• ஒரு நாட்டில் அனைத்து நுகர்பொருள்கள், தயாரிப்புகள், சேவைகள் என அனைத்துக்குமான மதிப்பினைக் கணக்கிடுவதில் பணம் பொதுவான, தரப்படுத்தப்பட அலகாக இருக்க வேண்டும்.
• நிதி பரிவர்த்தனைகளை அளவிடவும் கணக்குகளாக பராமரிக்கவும் பணம் பயன்படுகிறது.
பணம் - மதிப்பீட்டினைச் சேமித்தல் மற்றும் மாறுபடும் பண வழங்கீடுக்கான தரப்படுதல்:
• பணத்தினைச் சேமிப்பதின் மூலம் எதிர்காலத்துக்கான பொருளை வாங்கும் ஆற்றலைச் சேமிப்பதாகும்.