பணம் மற்றும் கடன் | பொருளியல் | சமூக அறிவியல் - சுருக்கமாக விடையளி | 9th Social Science : Economics: Money and Credit
IV. குறுகிய வினாக்களுக்கு விடையளி.
1.
பணம்
ஏன்
கண்டுபிடிக்கப்பட்டது?
விடை:
பணம் கண்டுபிடித்தல்
• காலப்போக்கில் பண்டமாற்றம் செய்வதிலும், பண்டமாற்றும் பொருள்களின் அளவு மற்றும் மதிப்பைக் கணக்கிடுவதிலும் பிரச்சனைகள் இருந்தன.
• பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பண்டங்களை மாற்றிக் கொள்ளப் பொதுவான மதிப்புள்ள ஒரு பொருளை நிர்ணயம் செய்தனர். இது பெரும்பாலும் உலோகமாக இருந்தது. இந்த உலோகங்களே முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட பணம் ஆகும்.
2.
பண்டைய
காலப்
பணம்
என்பது
யாது?
விடை:
• பண்டமாற்று முறைக்குப் பதிலாக தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. இவை பண்டய காலப் பணம் ஆகும். இவை புராதனப் பணம் என்றும் அழைக்கப்படுகின்றன.
3.
பண்டைய
காலத்தில்
பண்டமாற்று
முறையில்
பயன்படுத்தப்பட்ட
பொருள்கள்
யாவை?
விடை:
பண்ட மாற்றுப் பொருள்கள்
• தானியங்கள்
• கால்நடைகள்
• உப்பு
• உணவுப் பொருட்கள்
• மண்பாண்டங்கள்
• தோல்
• மணிகள்
• ஓடுகள்
• புகையிலை
• சோளம்
• அடிமைகள்
4.
நறுமணப்பாதை
என்றால்
என்ன?
ஏன்
அவ்வாறு
அழைக்கப்படுகிறது?
விடை:
நறுமணப்பாதை :
• தமிழகத்தின் கிழக்குக் கடலில் இருந்து மிளகு, நறுமணப் பொருட்கள், முத்து, ரத்தினங்கள், மாணிக்கம் மற்றும் பருத்தி ஆடைகள் பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
• ஏற்றுமதிப் பொருட்களில் மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிகம் இடம் பெற்றதால் இந்த வணிகப்பாதை “நறுமணப் பாதை” என்று அழைக்கப்பட்டது.
5.
இயற்கைப்
பணம்
என்றால்
என்ன?
விடை:
இயற்கைப் பணம்.
• உலகம் முழுவதும் மதிக்கப்படும் உலோகங்களாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை ஏற்கப்பட்டன. இதனால் இவை நாடுகளுக்கு இடையிலான பண்டமாற்றத்தில் பொது மதிப்பீடாகப் பயன்படுத்தப்பட்டன. இவையே “இயற்கைப் பணம்” ஆகும்.
6.
குறைந்த
மதிப்பிலான
நாணயங்கள்
ஏன்
அதிகளவு
அச்சடிக்கப்பட்டன?
விடை:
குறைந்த மதிப்பிலான நாணயங்கள் அதிகளவு தயாரிக்கப்பட்டன. ஏனெனில்,
• வணிகத்தின் விரிவாக்கத்திற்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளி, இருப்பு இருப்பதில்லை. இவை வரம்புக்குள் தான் இருந்தன.
• சிறிய மதிப்பிலான பொருட்கள் வாங்கவும், விற்கவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் குறைந்த மதிப்பு உலோகங்களின் நாணயங்கள் பயன்பட்டன.
7.
அந்நிய
செலாவணி
என்றால்
என்ன?
விடை:
அந்நியச் செலாவணி.
• ஒரு நாட்டில் பயன்படுத்தப்படும் பணம் செலாவணி என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் செலாவணி 'ரூபாய்' ஆகும்.
• ஒரு நாட்டில் வெளி நாட்டின் செலாவணி “அந்நியச் செலாவணி” ஆகும். உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி அமெரிக்க டாலர் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இம்மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடும்.