பணம் மற்றும் கடன் | பொருளியல் - ரிசர்வ் வங்கியின் பங்கு | 9th Social Science : Economics: Money and Credit
ரிசர்வ் வங்கியின் பங்கு
பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தில் பெரும் பங்கு தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பணத்தின் வரலாறு
இந்தியாவில் அனைத்து முக்கிய வங்கிகளும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளதை (1969) அறிவோம். இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1,
1935 முதல் செயல்பட தொடங்கியது .1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது. இது 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டது அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 8% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படி இந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 'பணத்தின் சிக்கலும் அதன் தீர்வும் (The Problem of the rupee and its Solution) என்ற ஆராய்சிக் கட்டுரையின் அடிப்படையில் தான் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934ல் உருவாக்கப்பட்டுள்ளது.