மழைநீர் சேகரிப்பு (Rainwater harvesting)
(தண்ணீர்
தட்டுப்பாட்டிற்கான தீர்வு - ஒரு சுற்றுச்சூழல் பிரச்சினை)
மழைநீர் வழிந்தோடுவதை அனுமதியாது மீண்டும் பயன்படுத்தும் விதத்தில் சேகரித்து, சேமித்து வைப்பது மழைநீர் சேகரிப்பு எனப்படும். நதிகள் மற்றும் மாடிக் கூரைகளிலிருந்து மழைநீர் சேகரிக்கப்பட்டு ஆழ்குழிகளுக்குத் திருப்பப்பட்டுச் சேமிக்கப்படுகிறது. நீர் வழிந்து ஊடுருவிப் பள்ளங்களில் சேமிக்கப்படுகிறது. மழைநீர் சேகரிப்பு நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மேலாண்மை வழிமுறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது வருங்காலங்களில் ஓர் முக்கிய , சிக்கனமான மற்றும் குறைந்த செலவுடைய முறையாக அமையும்.
• தேவையான அளவு நிலத்தடி நீர்த் தேவை மற்றும்
நீர் பாதுகாப்பிற்கு ஊக்குவிக்கின்றது.
• வறட்சியின் கடுமையை மட்டுப்படுத்துகிறது.
• பரப்பில் வழிந்தோடுவதைத் தடுப்பதால் மண்
அரிப்பு குறைக்கப்படுகிறது.
• வெள்ள அபாயத்தைக் குறைக்கிறது.
• நிலத்தடி நீர் தரம் மற்றும் நிலத்தடி நீர்மட்டம்
மேம்படுத்தப்படுகிறது , உவர்தன்மையை குறைக்கின்றது.
• நீர் சேமிப்பின் போது நிலப்பரப்பு வீணாவதில்லை
மற்றும் மக்கள் இடப்பெயர்வும் தவிர்க்கப்படுகிறது.
• நிலத்தடி நீர் சேமிப்பு ஒரு சிறப்பான சுற்றுச்சூழல்
முறையாகும் மற்றும் உள்ளூர் சமூகத்திற்கு உகந்த நிலையான நீர் சேமிப்பு யுக்தியின் ஒரு
பகுதியாகும்.
ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலை தொகுப்புகள்
பல்வேறு சுற்றுச்சூழல் பயன்பாடுகளை அளிப்பதோடல்லாமல் நம் பொருளாதாரத்தை பலப்படுத்தி
நம் தரமான சுகாதார வாழ்விற்கும் வழிவகுக்கின்றது. ஏரிகள் மழைநீரைச் சேமித்து நமக்குக்
குடிநீர் அளிக்கிறது மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தி நன்னீர் உயிர்ப்பன்மத்தையும்
ஏரி அமைந்துள்ள வாழ்விடங்களையும் பாதுகாக்க உதவுகிறது.
சேவைகளைப் பொருத்தமட்டில் ஏரிகள் நீர் பராமரிப்பு
மற்றும் காலநிலை தாக்கங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகளுக்கும், தொடர் தீர்வுகளை அளித்து
வருகின்றன. மேலும் நுண்ணூட்டப் பொருட்களைத் தேக்கி வைப்பதற்கும் உள்ளூர் மழை பொழிவிற்கு
வழிவகை செய்வதும், மாசுக்களை அகற்றவும் பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் கார்பன் சேகரிப்பிற்கும்
இவை உதவுகின்றன.
ஏரிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட பரப்புநீர்
சேகரிப்பு அமைப்புகளாகும். அவை விவசாயம், குடிநீர், மீன்பிடிப்பு மற்றும் பொழுதுபோக்கிற்கும்
உதவுகின்றன. நீர்நிலைகளைப் பராமரித்தலும், நிர்வகித்தலும் ஒவ்வொருவரின் மற்றும் சமுதாயத்தின்
கூட்டுப் பொறுப்பாகும். நீர் பிடிப்பு பகுதிகளை நாம் அறிந்து கொள்வதன் மூலம் நீர்நிலைகளைச்
சீரழிவிலிருந்து தடுக்க இயலும் மற்றும் மாசடைவிலிருந்து பாதுக்காக்கவும் இயலும்.
சோழவரம் ஏரி: திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி
வட்டத்தில் அமைந்துள்ளது. மழைநீரால் நிரப்பப்படும் இந்த ஏரிலிருந்து சென்னைக்கான குடிநீர்
பெறப்பட்டு வழங்கப்படுகிறது. 65.5 அடி கொள்ளளவு திறன் பெற்றது. பிரித்தானியர்கள் காலத்தில்
கட்டப்பட்ட இந்த ஏரி, நீர் விளையாட்டு முகவர்களை மகிழ்விக்கவும் பொறுப்பேற்கிறது. மேலும்
பல்வகைத் தாவர மற்றும் விலங்கினச் சிற்றினங்களை அதிக அளவு பெற்றுக் காணப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி: சென்னையிலிருந்து 25
கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 500 வருடப் ஏரியாகவும், சென்னையின் குடிநீர் வழங்கலுக்கும்
உதவுகிறது. இந்த ஏரியிலிருந்து முதன்மையாக வெளியேறும் நீர் அடையாறு என்றழைக்கப்படும்
ஆறு தோன்றுமிடமாகவும் விளங்குகிறது. இது 15 சதுரக் கிலோ மீட்டர் அளவு பரந்த விரிந்த
ஏரியாக உள்ளது.
மதுராந்தகம் ஏரி: மனிதனால் உருவாக்கப்பட்ட
இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாலை நேரப் பொழுதுபோக்கிடமாகவும்,
அமைதியாகக் காட்சியளிக்கும் உன்னத இடமாகவும், அகன்ற தூய நீரினைப் பெற்ற ஏரியாகத் திகழ்கிறது.
23.3 அடி முழுக்கொள்ளவுபெற்ற ஒரு நீர்த்தேக்கமாகும். இம்மதுராந்தக ஏரியிலிருந்து கிளியாறு
என்ற ஒரு சிற்றாறு தோன்றுகிறது. 2908 ஏக்கர் பரப்பளவில் உத்தமச்சோழனால் கட்டப்பட்டதாகும்.
(12960 அடி பரந்த அமைப்புடையது) இதன் கரைகள் பிரித்தானியர்களால் வலுவூட்டப்பட்டு,
690 மில்லியம் கன அடி சேமிப்புத் திறனுடையது. செய்யாறு, திருவண்ணாமலை மற்றும் வந்தவாசியிலிருந்து
பெறப்படும் மழைநீர் இந்த ஏரியை அடைகிறது.