பொருளியல் - இந்தியாவின் விவசாயக்கொள்கை | 10th Social Science : Economics : Chapter 3 : Food Security and Nutrition
இந்தியாவின் விவசாயக்கொள்கை
விவசாயப் பொருள்களின்
ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயக் கொள்கை 2018இல்
மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை பெரும்பாலான கரிம மற்றும்
ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்தது
ஒரு நாட்டின் விவசாயக்
கொள்கையானது பெரும்பாலும் விவசாய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை
உயர்த்துவதற்கும், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் விவசாயிகளின் வருமான
நிலை மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.
இந்தக் கொள்கை விவசாயத்துறையின் அனைத்து வட்டங்களிலும், விரிவான
வளர்ச்சிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் விவசாயக்
கொள்கையின் முக்கியமான குறிக்கோள்கள் பின்வருமாறு.
இந்தியாவின் விவசாயக்
கொள்கையின் முக்கிய நோக்கமானது வீரியவித்து விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசன
திட்டங்கள் போன்ற உள்ளீடுகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகும்.
வேளாண் கொள்கையானது
பொதுவாக வேளாண்மையின் உற்பத்தித்திறனை உயர்த்துவதன் மூலமும், குறிப்பாக
சிறிய மற்றும் ஓரளவு வைத்திருக்கும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமும் ஒரு
ஹெக்டேருக்கு மதிப்பு கூட்டப்பட்டதை அதிகரிப்பதாகும்.
ஏழை விவசாயிகளுக்கு
நிறுவன கடன் ஆதரவை விரிவுபடுத்துதல்,
நில சீர்திருத்தங்கள் செய்தல், இடைத்தரகர்களை
ஒழித்தல் போன்றவற்றின் மூலம் ஏழை மற்றும் குறு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதே
விவசாயக் கொள்கையாகும்.
விவசாய நடவடிக்கைகளில்
நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் மற்றும் உயர் ரக விதைகள் (HYV) விதைகள், உரங்கள்
போன்ற மேம்பட்ட விவசாய உள்ளீடுகளைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இந்தியாவின் விவசாயக்
கொள்கை இந்திய விவசாயத்தின் அடித்தளத்தின் சுற்றுச்சூழல் சீரழிவை சரி செய்யும்
மற்றொரு நோக்கத்தையும் கொண்டுள்ளது.
விவசாயிகளின் கூட்டுறவு
சங்கங்கள் மற்றும் சுய உதவி நிறுவனங்கள் மீதான அதிகாரத்துவ தடைகளை நீக்குவதற்கு
இந்த கொள்கை மற்றொரு குறிக்கோளை அமைத்துள்ளது, இதனால்
அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.