Home | 10 ஆம் வகுப்பு | 10வது சமூக அறிவியல் | விரிவாக விடையளிக்கவும்.

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu

   Posted On :  24.07.2022 07:30 pm

10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

விரிவாக விடையளிக்கவும்.

சமூக அறிவியல் : வரலாறு : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், தீர்வுகள்: VI. விரிவாக விடையளிக்கவும். VII. செயல்பாடுகள்

VI. விரிவாக விடையளிக்கவும்.

 

1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.

வங்க பிரிவினையின் விளைவாக சுதேசி இயக்கம் தோன்றியது.

அந்நிய பண்டங்களை புறக்கணித்தல் போன்ற தீவிரமான இயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சுப்பிரமணிய பாரதியாரின் தேசப்பற்று மிக்க பாடல்கள், பெருமளவு இளைஞர்களை சேர்த்தது.

.. சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல்களை தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும் இயக்கினார்.

திருநெல்வேலி கலகம் இளைஞர்களிடையே போராட்ட குணத்தை அதிகரித்தது.

பாண்டிச்சேரியில் புகலிடமாக இருந்து விடுதலை உணர்வை மேற்கொண்டனர்.

ஆங்கிலேய அதிகாரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று மக்களிடையே தேசப்பற்றை தூண்டினார்.

பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் செய்து பல சொற்பொழிவுகளை நடத்தி இளைஞர்களை கவர்ந்தார்.

• தென்னிந்தியா நலவுரிமைச் சங்கமும் காங்கரசின் விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டது.

ஒத்துழையாமை இயக்கதின் போது சி. இராஜாஜியும், .வெ.ரா. பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்.

வரி கொடா இயக்கமும், அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பும் தமிழகம் முழுவதும் நடந்தேறின.

 

2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

பிராமணர் அல்லாதோர் இயக்கம்

•  தங்கள் நலன்களைப் பாதுகாக்க பிராமணரல்லாதோர்கள் 1912 இல் சென்னை திராவிடர் கழகம் என்னும் அமைப்பைத் தொடங்கினர்.

•  இக்கழகத்தின் செயலாளராக C. நடேசனார் பணியாற்றினார். அவர் 1916 இல் பிராமணர் அல்லாத மாணவர்க்கு திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார்.

•  இதில் T.M. நாயர், P. தியாகராயர் ஆகிய நபர்கள் முக்கிய பங்காற்றினர்.

•  இதுவே பிராமணரல்லாதோர் நலன்களைப் பாதுகாக்க தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக மாறியது.

•  ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில் திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்ற மூன்று செய்தித்தாள்களில் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

இதுவே பின்னர் நீதிக் கட்சியாக மாறி பிராமணர் அல்லாத பிற மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடியது.

•  இதன் விளைவாக 1919ஆம் ஆண்டுச் சட்டம் பிராமணல்லாதோர்க்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது.

•  1920 நீதிக்கட்சி சென்னை மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்று பிற மக்களுக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.

 

3. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.

•  1927 இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சுதந்திரமே தனது இலக்கு என தீர்மானித்தது.

•  காந்தியடிகளின் தண்டி யாத்திரை தமிழகத்திலும் எதிரொலித்தது.

•  ராஜாஜி அவர்கள் திருச்சியில் இருந்து கடற்கரை நகரமான வேதாரண்யம்  சென்று உப்பு காய்ச்சி கால்நடையாக போராட்டத்தை தொடங்கினார்.

•  ராஜாஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் தேசபக்தி வீரப் பாடல்கள் அணிவகுப்பில் எதிரொலித்தது.

•  பயணித்த பாதை எங்கும் வரவேற்பு கிடைத்தது.

•  ராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எதிர்ப்பை தெரிவித்தனர்.

•  ராஜாஜி மற்றும் T.S.S. ராஜன், திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

 இந்த சட்ட மறுப்பு இயக்கங்கள் சென்னை திருவல்லிக்கேணி, இராமேஸ்வரம், உவரி, வேப்பலோடை, தூத்துக்குடி, தருவைகுளம் போன்ற இடங்களில் நடந்தேறியது.

•  தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்.

•  திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திருப்பூர் குமரன் காவலர்கள் தடியடியில் இறந்தார்.

•  மொத்தத்தில் சட்டமறுப்பு இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக தமிழ்நாட்டில் எழுச்சி பெற்றது.

 

VII. செயல்பாடுகள்

 

1. தமிழ்நாட்டிலுள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய இடங்கள் குறித்து மாணவர்களை ஓரிரு வாக்கியங்கள் எழுதச் சொல்லவும்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.

 

2. விவாத மேடை: மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள், புரட்சிகர தேசியவாதிகள், அன்னிபெசன்ட்டின் ஆதரவாளர்கள், நீதிக்கட்சி, ஆங்கில அரசாங்கம் ஆகியோரின் கருத்துகள் குறித்து விவாதிக்கச் செய்யலாம்.

ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.


Tags : Freedom Struggle in Tamil Nadu | History | Social Science தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல்.
10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu : Answer in detail Freedom Struggle in Tamil Nadu | History | Social Science in Tamil : 10th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் : விரிவாக விடையளிக்கவும். - தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் : 10 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது சமூக அறிவியல் : வரலாறு : அலகு 9 : தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்