தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் | வரலாறு | சமூக அறிவியல் - விரிவாக விடையளிக்கவும். | 10th Social Science : History : Chapter 9 : Freedom Struggle in Tamil Nadu
VI. விரிவாக விடையளிக்கவும்.
1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது
என்பதை விவாதிக்கவும்.
• வங்க பிரிவினையின் விளைவாக சுதேசி இயக்கம் தோன்றியது.
• அந்நிய பண்டங்களை புறக்கணித்தல் போன்ற தீவிரமான இயக்க நடவடிக்கைகளை
மேற்கொண்டது.
• சுப்பிரமணிய பாரதியாரின் தேசப்பற்று மிக்க பாடல்கள், பெருமளவு இளைஞர்களை சேர்த்தது.
• வ.உ. சிதம்பரனார் சுதேசி நீராவிக் கப்பல்களை தூத்துக்குடிக்கும் கொழும்புவிற்கும்
இயக்கினார்.
• திருநெல்வேலி கலகம் இளைஞர்களிடையே போராட்ட குணத்தை அதிகரித்தது.
• பாண்டிச்சேரியில் புகலிடமாக இருந்து விடுதலை உணர்வை மேற்கொண்டனர்.
• ஆங்கிலேய அதிகாரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன்
சுட்டுக் கொன்று மக்களிடையே தேசப்பற்றை தூண்டினார்.
• பிபின் சந்திரபால் சென்னையில் சுற்றுப்பயணம் செய்து பல சொற்பொழிவுகளை
நடத்தி இளைஞர்களை கவர்ந்தார்.
•
தென்னிந்தியா நலவுரிமைச் சங்கமும் காங்கரசின் விடுதலை போராட்டத்தில் கலந்து
கொண்டது.
• ஒத்துழையாமை இயக்கதின் போது சி. இராஜாஜியும்,
ஈ.வெ.ரா. பெரியாரும் துடிப்புடன் செயல்பட்டனர்.
• வரி கொடா இயக்கமும், அந்நியப்
பொருட்கள் புறக்கணிப்பும் தமிழகம் முழுவதும் நடந்தேறின.
2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை
ஆய்வு செய்க.
பிராமணர் அல்லாதோர் இயக்கம்
• தங்கள் நலன்களைப் பாதுகாக்க பிராமணரல்லாதோர்கள் 1912 இல் சென்னை திராவிடர் கழகம் என்னும் அமைப்பைத்
தொடங்கினர்.
• இக்கழகத்தின் செயலாளராக C. நடேசனார் பணியாற்றினார். அவர் 1916 இல் பிராமணர் அல்லாத மாணவர்க்கு திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவினார்.
• இதில் T.M. நாயர்,
P. தியாகராயர் ஆகிய நபர்கள் முக்கிய பங்காற்றினர்.
• இதுவே பிராமணரல்லாதோர் நலன்களைப் பாதுகாக்க தென்னிந்திய நல உரிமைச்
சங்கமாக மாறியது.
• ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தமிழில்
திராவிடன், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா என்ற மூன்று செய்தித்தாள்களில்
விழிப்புணர்வு மேற்கொண்டனர்.
• இதுவே பின்னர்
நீதிக் கட்சியாக மாறி பிராமணர் அல்லாத பிற மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனப் போராடியது.
• இதன் விளைவாக 1919ஆம் ஆண்டுச்
சட்டம் பிராமணல்லாதோர்க்கு தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது.
• 1920 நீதிக்கட்சி சென்னை மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்று
பிற மக்களுக்கும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கியது.
3. சட்ட மறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை
விவரி.
• 1927 இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சுதந்திரமே தனது
இலக்கு என தீர்மானித்தது.
• காந்தியடிகளின் தண்டி யாத்திரை தமிழகத்திலும் எதிரொலித்தது.
• ராஜாஜி அவர்கள் திருச்சியில் இருந்து கடற்கரை நகரமான வேதாரண்யம் சென்று உப்பு
காய்ச்சி கால்நடையாக போராட்டத்தை தொடங்கினார்.
• ராஜாஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
• நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் அவர்களின் தேசபக்தி வீரப் பாடல்கள் அணிவகுப்பில் எதிரொலித்தது.
• பயணித்த பாதை எங்கும் வரவேற்பு கிடைத்தது.
• ராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எதிர்ப்பை தெரிவித்தனர்.
• ராஜாஜி மற்றும் T.S.S. ராஜன்,
திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.
• இந்த சட்ட மறுப்பு இயக்கங்கள் சென்னை
திருவல்லிக்கேணி, இராமேஸ்வரம்,
உவரி, வேப்பலோடை, தூத்துக்குடி,
தருவைகுளம் போன்ற இடங்களில் நடந்தேறியது.
• தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்.
• திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திருப்பூர் குமரன் காவலர்கள் தடியடியில்
இறந்தார்.
• மொத்தத்தில் சட்டமறுப்பு இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக தமிழ்நாட்டில்
எழுச்சி பெற்றது.
VII. செயல்பாடுகள்
1. தமிழ்நாட்டிலுள்ள சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய
இடங்கள் குறித்து மாணவர்களை ஓரிரு வாக்கியங்கள் எழுதச் சொல்லவும்.
ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.
2. விவாத மேடை: மாணவர்களைக் குழுக்களாகப்
பிரித்து மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள், புரட்சிகர தேசியவாதிகள், அன்னிபெசன்ட்டின் ஆதரவாளர்கள்,
நீதிக்கட்சி, ஆங்கில அரசாங்கம் ஆகியோரின் கருத்துகள்
குறித்து விவாதிக்கச் செய்யலாம்.
ஆசிரியர் - மாணவர் செயல்பாடு.