இந்திய அரசமைப்பில் சமத்துவம்
இந்திய அரசமைப்பின் சமத்துவ கருத்தாக்கம்
இந்திய அரசமைப்பின் உறுப்பு - 14-ன் படி ‘சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றும் பிறப்பிடம், சாதி, மதம், மொழி, இனம், பாலினம், நிறம் போன்றவை அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும் தெரிவிக்கிறது என்றும், இதைப் போல உறுப்பு - 15, உறுப்பு - 14-ஐ உறுதிப்படுத்தும் நோக்குடன் இவ்வகை பாகுபாடுகளை தடை செய்துள்ளது. 'சட்டத்தின் முன் சமம்' மற்றும் 'சமமான சட்டப் பாதுகாப்பு' ஆகியவை இந்திய அரசமைப்பின் உறுப்பு - 21-ன் மூலம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 'எந்தவொரு தனி நபரும், சட்ட நடை முறையன்றி அவரது வாழ்வு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தினை இழக்க வைக்க முடியாது என்றும் விளக்குகிறது. ஒரு தனிநபரை தண்டிக்க வேண்டும் என்றால்,அதைசட்டத்தின் நடைமுறை மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். இது போல ஒருதலைபட்சமாகவோ, பாகுபாடான முறையிலோ அல்லது சமமற்ற முறையில் பல தனிமனிதர்களை நடத்துதலோ தவறு ஆகிறது'.