Home | 11 ஆம் வகுப்பு | 11வது அரசியல் அறிவியல் | பன்மைவாதம் என்றால் என்ன?
   Posted On :  25.09.2023 06:01 am

11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்

பன்மைவாதம் என்றால் என்ன?

பன்மைவாதம் என்பது ஒருமைவாத இறையாண்மைக் கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கமாகும். இவ்வகை இறையாண்மை அரசினுடைய மேலான மற்றும் அளவில்லாத அதிகாரத்திற்கு வகை செய்கின்றது.

பன்மைவாதம் என்றால் என்ன?

பன்மைவாதம் என்பது ஒருமைவாத இறையாண்மைக் கோட்பாட்டை எதிர்த்து உருவான வலிமை வாய்ந்த இயக்கமாகும். இவ்வகை இறையாண்மை அரசினுடைய மேலான மற்றும் அளவில்லாத அதிகாரத்திற்கு வகை செய்கின்றது.

அரசிற்கு முன்னரே, பல சமூக, அரசியல், பண்பாடு மற்றும் பொருளாதாரம் சார்ந்த அமைப்புகள், சமுதாயத்தில் அங்கம் வகித்து இருக்கின்றன. உதாரணத்திற்கு குடும்பம் மற்றும் தேவாலயங்கள் அரசு தோன்றுவதற்கு முன்பே செயல்பட்டு வந்தன.

பன்மைவாதக் கோட்பாட்டின் சிந்தனையாளர்கள்

• ஹெரால்ட் ஜெ. லாஸ்கி (Herold J. Laski) 

• ஜெ.என்.பிக்கீஸ் (J.N. Figgis) 

• எர்னஸ்ட் பார்க்கர் (Ernest Barker) 

• ஜி.டி.ஹெச்.கோல் (G.D.H.Cole)

• மேக் ஐவர் (Mac Iver) 

பன்மைவாதக் கோட்பாட்டின் தோற்றம்

மக்கள் நல அரசானது, மக்களின் தேவைகளை நிறைவேற்றாத போது, புரட்சிகளையும், எதிர்நடவடிக்கைகளையும் சந்தித்து இருக்கிறது. இப்படிப்பட்ட எதிர்வினை என்பது மேலான மற்றும் இறையாண்மை மிக்க அரசுக்கு எதிராகத் தோன்றியதால் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பன்மைவாதம் மலர்ந்தது.

பன்மைவாதம் முக்கியமானதா?

• பன்மைவாதம் என்பது, கூட்டமைப்புகளின் முக்கியத்துவத்தையும், அதன் சுயாட்சி கோரிக்கையையும் தாங்கி நிற்கிறது. 

• மக்களாட்சி மலர வேண்டுமெனில், இறையாண்மை மிக்க அரசானது சட்ட அதிகாரத்துவத்திற்கு கட்டுப்படாததாக இருத்தல் அவசியமாகும்.  

• இறையாண்மையில் ஏற்படும் பிரிவினைகள் என்பது அதன் அழிவுக்கு வழிவகுப்பது உறுதியாகிறது. இறையாண்மை இல்லாத தருணத்தில் சமுதாயத்தில் அமைப்பெதிர்வாத சூழலே இருக்கும்.

பன்மைவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகள் யாவை?

• இறையாண்மை மிக்க அரசு ஒற்றுமையை ஏற்படுத்தி, சமுதாயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்துக் கூட்டமைப்புகளையும் ஒன்றுபடுத்தி ஒழுங்குமுறைப்படுத்துகிறது. 

• பன்மைவாத நம்பிக்கைக்கு ஒவ்வாததாக அரசே சட்டங்களை இயற்றுகிறது. 

• கூட்டமைப்புகளின் எண்ணிக்கை மிகுதியாக அதிகரிக்கும் பட்சத்தில், மக்களை பாதுகாப்பதற்கு அரசின் தேவை இன்றியமையாததாகிறது.


இந்திய அரசமைப்பு மற்றும் இறையாண்மை

இந்திராகாந்தி Vs ராஜ்நாராயணன்(1975) வழக்கில், "இந்தியா என்பது, இறையாண்மை பொருந்திய, மக்களாட்சிக் குடியரசு என்றும், இதுவே அடிப்படைப் கூறாக அரசமைப்பின்படி காணப்படுகிறது" என்றும் கூறியுள்ளது. மேற்கூறியவற்றின் மூலம், இந்திய அரசமைப்பின்படி இறையாண்மை என்பது அரசமைப்பின் முக்கிய அம்சமாக விளங்குவதுடன் முகப்புரையின் மூலமாக மக்களே இறையாண்மை மிக்கவர்கள் என்பது தெரியவருகிறது. சுருங்கக்கூறின், இறையாண்மை என்பது அரசமைப்பைச் சார்ந்துள்ளது. மக்களே அத்தகைய அரசமைப்பின் இறுதி ஆதாரமாக விளங்குகின்றனர்.


11th Political Science : Chapter 3 : Basic Concepts of Political Science : What is Pluralism? in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள் : பன்மைவாதம் என்றால் என்ன? - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் : அத்தியாயம் 3 : அரசியல் அறிவியலின் அடிப்படைக் கருத்தாக்கங்கள்