தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் - தொழில் முனைவோர் | 10th Social Science : Economics : Chapter 5 : Industrial Clusters in Tamil Nadu
தொழில் முனைவோர்
ஒரு "தொழில்
முனைவோர்" என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக
செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார். இவர்களிடம் சிறந்த நிர்வாகத்
திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான
தலைமைக்கான பண்புகளும் இருக்கும்.
தொழில் முனைவோர் தங்கள்
தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும். இவை ஒன்றை
உருவாக்குவதற்கும் மேலும் பெரிதுபடுத்துவதற்குமான திறன் ஆகும்.
தொழில்
முனைவோரின் பங்கு
நாட்டின் பொருளாதார
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கிய மானதாகும்.
1. தொழில் முனைவோர்கிராமப்புற மற்றும் பின்தங்கிய
தொழிற்சாலைகளை முன்னேற்றுவதுடன், நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார
ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள்.
2. இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும்
தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள்.
3. குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின்
ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.
4. தொழில் முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத்
தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பை
வழங்குகிறார்கள். இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர்.
5. தொழில் முனைவோர், குறைந்த
விலையில் சிறந்த தரமான பொருள்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன்
விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.