ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - வரலாறு - பாடச் சுருக்கம் | 12th History : Chapter 5 : Period of Radicalism in Anti-imperialist Struggles
பாடச் சுருக்கம்
• 1920 - 30களில் உண்டான முற்போக்கு எழுச்சி,
முற்றிலும் வேறுபட்ட தேசியவாதம்.
• இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது
மற்றும் கான்பூர் சதி மற்றும் மீரட் சதி வழக்குகளோடு கம்யூனிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுக்கு
வந்தது
• இளம் பெண்களும் புரட்சிகர இயக்கங்களில் பங்கு
பெற்றனர். அவ்விளம் பெண்களில் ஒருவர் கல்பனா தத் ஆவார்.
• பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் மற்றும் சூரியாசென்
போன்ற பெரிய புரட்சியாளர்கள் இந்திய சுதந்திரத்திற்காகத் தங்கள் இன்னுயிரையே தியாகம்
செய்தனர்.
• 1930களில் தோன்றிய பொருளாதாரப் பெருமந்தம் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிரேட் பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் இருந்து போர்களுக்கு இடைப்பட்ட காலம் வரை இந்தியாவின் தொழில் வளர்ச்சியானது பிரிட்டனின் எந்தவிதமான ஆதரவுமின்றி தொடங்கப்பட்டு முதல் உலகப்போர் மற்றும் பின்னர் தோன்றிய பெருமந்தம் ஆகியவற்றையும் தாண்டி உன்னத நிலைமையை அடைந்துள்ளது.