ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் காலனியாதிக்கம் | வரலாறு - மீள்பார்வை | 9th Social Science : History: Colonialism in Asia and Africa
மீள்பார்வை
● மலேயா தீபகற்பத்தில் காலனிகளை உருவாக்குவதில் போர்த்துகீசியர்,
டச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரிடையே நிலவிய போட்டி விவரிக்கப்பட்டுள்ளது
● ஜகார்த்தாவில் தங்கள் தளத்தை ஏற்படுத்திக்கொண்ட டச்சுக்காரர் படிப்படியாக ஜாவா,
சுமத்ரா ஆகிய பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தியது விவாதிக்கப்பட்டுள்ளது. பினாங்கிலிருந்து ஆங்கிலேயர் தங்கள் தளத்தை ஐக்கிய மலாய் நாடுகள்,
நீரிணைப் பகுதி, பர்மா ஆகியவற்றை வசப்படுத்துவதற்குக் கொண்டுசென்றது விவரிக்கப்பட்டுள்ளது
● முதலில் ஸ்பானியர் வசமிருந்தபிலிப்பைன்ஸ் அமெரிக்காவால் கையகப்படுத்தப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது
● ஆங்கிலேயர் முதலில் நேட்டால்,
கேப் காலனி ஆகியவற்றையும் பின்னர் கோல்டு கோஸ்டின் கடற்கரை நாடுகளைக் கைப்பற்றியதும், டச்சுக்காரர் போயர் நாடுகளான டிரான்ஸ்வால், ஆரஞ்சு சுதந்திர நாட்டைக் கைப்பற்றியதும் விளக்கப்பட்டுள்ளன
● ஜோகன்னஸ்பர்க்கில் நிலைகொண்ட ஆங்கிலேயர் போயர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் போயர் போர்கள் ஏற்பட்டது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. பிச்சுவானாலாந்தில் (போட்ஸ்வானா) ஆங்கிலேயர் குடியேற்றமொன்றை நிறுவியதும் பின்னர் ஆப்பிரிக்கரின் எதிர்ப்பை நசுக்கி அப்பகுதியைக் கைப்பற்றி ரொடீசியா என பெயரிட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளன
● மேற்கு ஆப்பிரிக்காவில் பிரான்ஸ் முதலில் செனகலையும் பின்னர் கினி,
ஐவரி கோஸ்ட், தகோமே (தற்போது ஆப்பிரிக்க யூனியனிலுள்ள பெனின் நாட்டின் ஒரு பகுதி) ஆகியவற்றைக் கைப்பற்றியதும், காங்கோ பெல்ஜியருக்குத் தரப்பட்டு லியோபோல்டால் ஆளப்பட்டதும் விவரிக்கப்பட்டுள்ளன
● ஆங்கிலேயர் கென்யா,
உகாண்டா, ஜான்ஜி பார் ஆகியவற்றையும் ஜெர்மானியர் கிழக்கு ஆப்பிரிக்காவையும் போர்த்துகீசியர் - அங்கோலா,
மொசாம்பிக், போர்த்துக்கீசிய கினி ஆகியவற்றையும் காலனிகளாக்கியது எடுத்துரைக்கப்பட்டுள்ளன
● ஆங்கிலேய ஆட்சி உருவாக்கப்பட்டதன் விளைவாக மூன்று வெவ்வேறு அடுத்தடுத்தக் கட்டங்கள் மூலம் இந்தியப் பொருளாதாரம் எவ்வாறு காலனிமயமாக்கப்பட்டது என்பது விளக்கப்பட்டுள்ளது
● ஆங்கிலேயரது காலனியாதிக்கம் இந்திய வேளாண்மையைக் கடுமையாகத் தாக்கியதால் இந்திய விவசாயிகள் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டதும், மேலும் பஞ்சங்கள் ஏற்பட்டதால் அவர்கள் ஒப்பந்தக் கூலிகளாக ஆங்கிலப் பேரரசின் கடல்கடந்த காலனிகளுக்குக் குடிபெயரும் கட்டாயம் ஏற்பட்டதும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன