நீர் | அலகு 13 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நீரின் இயைபு | 8th Science : Chapter 13 : Water
நீரின் இயைபு
நாம் வாழும் பூமி நான்கில் மூன்று பங்கு நீரினால் ஆனது. திட,
திரவ மற்றும் வாயு ஆகிய மூன்று நிலைகளில் நீர் உள்ளது. பூமியின் மேற்பரப்பு நீரானது
பெருங்கடல்கள், துருவப் பனிக்கட்டிகள் மற்றும் பனிப்பாறைகளில் பெருமளவு காணப்படுகிறது.
மீதமுள்ள நீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் நிலத்தடியில் உள்ளது. நம் உடல்கூட 85% நீரினால்
ஆனது. ஆனால், அது நமக்கு வெளிப்படையாகத் தெரிவதில்லை. வேதியியல் தன்மையின்படி நீர்
ஒரு நிலையான சேர்மம். இதன் வேதிப்பயர் டைஹைட்ரஜன் மோனாக்சைடு (H2O) ஆகும்.
நீரின் வழியே மின்னாற்றலைக் செலுத்தும்போது அது ஹைட்ரஜன் (H2) மற்றும் ஆக்சிஜனாகப்
(O2) பிரிகிறது.மின்னாற்றலின் மூலம் நீர் மூலக்கூறுகளைப் பிரிக்கும் செயல்முறை
மின்னாற்பகுத்தல் எனப்படும்.