இந்தியாவின் வடிகாலமைப்பு
வடிகாலமைப்பு
என்பது முதன்மையாறுகளும், துணையாறுகளும் ஒருங்கிணைந்து மேற்பரப்பு நீரை
கடலிலோ, ஏரிகளிலோ அல்லது நீர் நிலைகளிலோ சேர்க்கும்
செயலாகும். முதன்மை ஆறுகளும், துணையாறுகளும் இணைந்து பாயும் பரப்பளவு வடிகால்
கொப்பரை என்று அழைக்கப்படுகின்றது. வடிகால் அமைப்பானது ஒரு பிரதேசத்தில்
உள்ள நிலவியல் அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. இந்தியாவின் அமைவிட அடிப்படையில்
வடிகாலமைப்பை இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை
(i) இமயமலையில்
தோன்றும் ஆறுகள்
(ii) தீபகற்ப
இந்திய ஆறுகள்
இவ்வாறுகள்
வட இந்தியாவில் பாய்கின்றன. வடக்கே உள்ள இமயமலையில் இந்த ஆறுகள் உற்பத்தியாவதால்
இமயமலை ஆறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள் ஆகும்.
சிந்து
நதி 2850 கி.மீ நீளத்துடன் (இந்தியப்
பகுதியில் 709கி.மீ நீளம் மட்டுமே
பாய்கிறது) உலகில் உள்ள நீளமான நதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. திபெத் பகுதியில்
உள்ள கைலாஷ் மலைத் தொடரின் வடக்கு சரிவில் மானசரோவர் ஏரிக்கு அருகில் 5150
மீ.
உயரத்தில் உற்பத்தியாகிறது. இந் நதிபாயும் மொத்த வடிகாலமைப்பு பரப்பான 11,65,500
ச.கி.மீட்டரில்
3,21,289 ச.கி.மீட்டர் பரப்பு
இந்தியாவிலுள்ளது. இது லடாக் மற்றும் ஜாஸ்கர் மலைத்தொடர் வழியாக பாய்ந்து குறுகிய
மலை இடுக்குகளை உருவாக்குகிறது. ஜம்மு - காஷ்மீர் வழியாக பாய்ந்து பின் தென்புறமாக
பாகிஸ்தானின் சில்லார் பகுதியில் நுழைந்து,
பின்
அரபிக்கடலில் கலக்கிறது. இதன் துணையாறுகள் ஜீலம்,
சீனாப்,
ராவி,
பியாஸ்
மற்றும் சட்லெஜ் ஆகியனவாகும். சிந்து நதியின் மிகப்பெரிய துணையாறு சீனாப் ஆகும்.
கங்கையாற்றின்
தொகுப்பு 8,61,404 ச.கி.மீ
பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும். கங்கை
சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டியும் அதிக மக்களடர்த்தி கொண்டதாகவும்
உள்ளன. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர் காசி
மாவட்டத்தில் 7010 மீ உயரத்தில் கங்கோத்ரி
பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
கங்கை ஆறு – ஹரித்துவார்
இந்நதியின்
நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும். வட
பகுதியிலிருந்து கோமதி, காக்ரா,
கண்டக்,
கோசி
மற்றும் தென் பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
வங்கதேசத்தில், கங்கை பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப் பெரிய டெல்டாவை
உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
திபெத்தில்
உள்ள மானசரோவர் ஏரிக்கு கிழக்கே கைலாஷ் மலைத் தொடரில் உள்ள செம்மாயுங்டங் என்ற
பனியாற்றில் சுமார் 5150 மீ உயரத்திலிருந்து
உற்பத்தியாகிறது. இதன் மொத்த வடிகாலமைப்பான 5,80,000
ச.கி.மீட்டரில்
இந்தியாவில் பாயும் பரப்பு 1,94,413 ச.கி.மீ
ஆகும். திபெத் பகுதியில் சாங்போ (தூய்மை) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இவ்வாற்றின் நீளம் சுமார் 2900 கி.மீ. இதில் 900
கி.மீ.
மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.
பிரம்மபுத்திரா
ஆறு அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக
இந்தியாவிற்குள் நுழைகிறது. திஸ்டா, மனாஸ்,
பராக்,
சுபன்ஸ்ரீ
ஆகியவை இவ்வாற்றின் சில முக்கிய துணையாறுகளாகும். வங்களாதேசத்தில் ஜமுனா எனவும்
கங்கை ஆற்றுடன் இணைந்த போது மேக்னா எனவும் அழைக்கப்படுகிறது.
1) நீளமானவை மற்றும் அகலமானவை
2) வற்றாத நதிகள்
3) நீர்மின் உற்பத்தி செய்ய இயலாத நிலை
4) ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப்பகுதிகள்
போக்குவரத்திற்கு ஏற்றது.
தென்
இந்தியாவில் பாயும் ஆறுகள் தீபகற்ப ஆறுகள் எனப்படுகின்றன. பெரும்பாலான ஆறுகள்
மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன. இவை பருவகால ஆறுகள் அல்லது வற்றும்
ஆறுகள் எனப்படும். நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது.
இவ்வாறுகள் செங்குத்து சரிவுடன் கூடிய பள்ளத்தாக்கு வழியே பாய்கிறது. தீபகற்ப
ஆறுகளை அவைபாயும் திசையின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை
1) கிழக்கு நோக்கி பாயும்
ஆறுகள்
2) மேற்கு நோக்கி பாயும் ஆறுகள்
இந்நதி
சத்தீஸ்கார் மாநிலத்திலுள்ள ராய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சிகாவிற்கு அருகில்
உற்பத்தியாகி ஒடிசா மாநிலத்தின் வழியாக சுமார் 851
கி.மீ
நீளத்திற்குப் பாய்கிறது. சீநாத், டெலன்,
சந்தூர்,
சித்ரட்லா,
கெங்குட்டி
மற்றும் நன் ஆகியவை இதன் முக்கிய துணையாறுகளாகும். மகாந்தி பல கிளையாறுகளாகப்
பிரிந்து டெல்டாவை உருவாக்குகிறது. இந்நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
தீபகற்ப
இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறான (1465 கி.மீ)
கோதாவரி, மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில்
அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. இந்நதி விருத்தகங்கா எனவும்
அழைக்கப்படுகிறது. இது 3.13 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவு
வடிநிலத்தைக் கொண்டது. இது ஆந்திரப்பிரதேசம் வழியாக பாய்ந்து வங்காள விரிகுடாவில்
கலக்கிறது. பூர்ணா, பென்கங்கா,
பிரனிதா,
இந்திராவதி,
தால்
மற்றும் சாலாமி போன்றவை இவற்றின் துணையாறுகள் ஆகும். இந்நதி ராஜமுந்திரிக்கு
அருகில் கவுதமி மற்றும் வசிஸ்தா என இரண்டு கிளைகளாகப் பிரிந்து பெரிய டெல்டாவை
உருவாக்குகிறது. கோதாவரி டெல்டா பகுதியில் நன்னீர் ஏரியான கொல்லேறு ஏரி
அமைந்துள்ளது.
மகாராஷ்ட்டிரா
மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் மகாபலேஷ்வர் என்ற பகுதியில் ஊற்றாக
உருவாகி சுமார் 1400 கி.மீ நீளம் வரையும் 2.58
இலட்சம்
ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டிருக்கிறது. இது தீபகற்ப ஆறுகளில் இரண்டாவது
பெரிய நதியாகும். கொய்னா, பீமா, முசி,
துங்கபத்ரா
மற்றும் பெடவாறு போன்றவை இவ்வாற்றின் முக்கிய துணையாறுகளாகும். இந்நதி
ஆந்திரப்பிரதேசத்தின் வழியாக பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள
விரிகுடாவில் கலக்கிறது.
காவிரி
ஆறு கர்நாடக மாநிலத்தில் குடகு மலையிலுள்ள தலைக்காவிரியில் உற்பத்தியாகி சுமார் 800
கி.மீ
நீளத்துக்கு பாய்கிறது. இது தென் இந்தியாவின் கங்கை என்றும் அழைக்கப்படுகிறது.
கர்நாடகாவில் இரண்டாக பிரிந்து சிவசமுத்திரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய
புனித ஆற்றுத் தீவுகளை உருவாக்குகிறது. பின்பு தமிழ்நாட்டில் நுழைந்து
தொடர்ச்சியான மற்றும் குறுகலான மலையிடுக்குகள் வழியாக ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியாக
பாய்கிறது. பின்பு திருச்சிராப்பள்ளிக்கு முன் ஸ்ரீரங்கம் அருகே கொள்ளிடம்,
மற்றும்
காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிந்து இறுதியில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக்
கடலில் கலக்கிறது.
மத்தியப்
பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் 1057
மீ
உயரத்தில் உற்பத்தியாகி 1312 கி.மீ நீளத்தையும் 98796
ச.கி.மீ
பரப்பளவு வடிநிலத்தையும் கொண்டது. இது 27 கி.மீ
நீளத்திற்கு ஒரு நீண்ட கழிமுகத்தை உருவாக்கி காம்பே வளைகுடா வழியாக அரபிக் கடலில்
கலக்கிறது. இது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளிலேயே நீளமானதாகும். பர்னா,
ஹலுன்,
ஹெரன்,
பஞ்சர்,
தூதி,
சக்கார்,
டவா,
மற்றும்
கோலர் ஆகியவை இதன் முதன்மையான துணையாறுகள் ஆகும்.
தபதி
ஆறு தீபகற்ப இந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்நதி 724
கி.மீ
நீளத்தையும் 65145 ச.கி.மீ பரப்பளவு வடிநிலத்தை
கொண்டது. இந்நதி மத்திய பிரதேசத்தில் உள்ள பெட்டூல் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 752
மீ
உயரத்தில் முல்டாய் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாகிறது. பின்பு காம்பே வளைகுடா
வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்திய ஆறுகளில் நர்மதை,
தபதி
மற்றும் மாஹி ஆகிய மூன்று ஆறுகள் மட்டுமே கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி
பாய்கின்றன. வாகி, கோமை, அருணாவதி,
அனெர்,
நீசு,
புரெ,
பஞ்சரா
மற்றும் போரி ஆகியன தபதி ஆற்றின் துணை ஆறுகள் ஆகும்.
எந்த
ஆற்றில் ஜெர்சப்பா (ஜோக்) நீர்வீழ்ச்சி உள்ளது?
1) மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்றன.
2) குறுகலான மற்றும் நீளம் குறைந்தவை.
3) வற்றும் ஆறுகள்.
4) நீர் (புனல்) மின்சாரம் உற்பத்திக்கு ஏற்றது.
5) நீர்வழி போக்குவரத்திற்குப் பயன்படாதவை