Home | 11 ஆம் வகுப்பு | 11வது தமிழ் | இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்

இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள் | 11th Tamil : Chapter 1 : Ennuyir enbean

   Posted On :  05.08.2023 06:49 am

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்

இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள்

11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் 1

இனிக்கும் இலக்கணம்

மொழி முதல், இறுதி எழுத்துகள்


சொற்கள் எழுத்தொலிகளால் ஆனவை. அவை நாம் ஒலிப்பதற்கு இனிமையாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும். இதற்குச் சொற்களின் முதலிலும் இறுதியிலும் ஒலிக்கும் எழுத்தொலிகன் காரணமாக அமைகின்றன. சொற்களின் புணர்ச்சியில், முதற்சொல்லின் இறுதி எழுத்தும் வரும் சொல்லின் முதல் எழுத்துமே சந்திக்கின்றன. அவ்வாறு சந்திக்கும் இடத்தில் வரும் எழுத்துகள் எவையெவையென அறிந்துகொள்ள வேண்டும்.

காவிரி, டமாரம், றெக்கை, பாவை, ராக்கி, கோதை, டப்பா போன்ற சொற்களில் தமிழ்ச்சொற்கள் எவை என்பதை அறிய முடிகிறதா?

இவற்றுள் காவிரி, பாவை, கோதை ஆகியவை தமிழ்மொழிச் சொற்களாக உள்ளன. டமாரம், றெக்கை, ராக்கி, டப்பா ஆகியவை பிறமொழிச்சொற்களாக உள்ளன. எனவே, சொற்களில் தமிழ்மொழிக்கு உரியவை, பிறமொழிக்கு உரியவை எவையெவை என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும். இதற்குச் சொற்களில் எழுத்துகளின் வருகை குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.


மொழி முதல் எழுத்துகள் - 22

1. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.

2. மெய்யெழுத்துகள் தனிமெய் வடிவில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. உயிரெழுத்துகளோடு சேர்ந்து உயிர்மெய் வடிவிலேயே மொழிக்கு முதலில் வருகின்றன.

3. மெய்களில் , , , , , , , , , என்னும் பத்து வரிசைகள் உயிர்மெய் வடிவங்களாகச் சொல்லின் முதலில் வரும்.

(ஙனம் என்னும் சொல்லில் மட்டுமே வரும்)

4. , , , , , , , என்னும் எட்டு வரிசைகள் சொல்லின் முதலில் வருவதில்லை.

5. ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.

குறள் என்ற சொல்லை க் + + ற் + + ள் எனப் பிரிக்கலாம். சொல்லின் முதலில் உள்ளகுஎன்னும் உயிர்மெய் எழுத்தை, க் + எனப் பிரிக்கும்பொழுது க் என்ற மெய்யெழுத்தே சொல்லின் முதலில் வருவதை அறியலாம்.

'ங்' என்னும் மெல்லின மெய் 'விதம்' எனப் பொருள் தரும் 'ஙனம்' என்னும் சொல்லில் மட்டும் முதலில் வரும். இந்தச் சொல்லும் தனியாக வராது, , , என்ற சுட்டெழுத்துகளுடனும் , யா என்னும் வினா எழுத்துகளுடனும் இணைந்து அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்ஙனம், எங்ஙனம் என்று வரும். தற்காலத் தமிழில் இவற்றின் பயன்பாடு அரிதாகவே உள்ளது.

உங்ஙனம் என்பது தற்பொழுது தமிழகத்தில் வழக்கில் இல்லை. ஆனால், தமிழ் இலக்கியங்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றும் இலங்கைத் தமிழர் உங்கு, உங்ஙனம் போன்ற சொற்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்விலக்கண வரையறைகள் அனைத்தும் எழுத்து மொழிக்கானவையே அன்றி, பேச்சு மொழிக்கானவை அல்ல. மேற்காட்டிய 22 எழுத்துகள் நீங்கலாக உள்ள பிற எழுத்துகள், சொல்லின் முதலில் வந்தால் அவை தமிழ்ச் சொற்களாக இருக்கமாட்டா: பிறமொழிச் சொற்களாகவோ. ஒலிபெயர்ப்புச் சொற்களாகவோ இருக்கின்றன.

மொழிமுதல் எழுத்துகள்

உயிரெழுத்துகள் -12

மெய்யெழுத்துக்கள் - 10

மொத்தம் – 22


மொழி இறுதி எழுத்துகள் - 24

1. உயிரெழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் இறுதியில் வரும்.

2. மெய்களில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினோரெழுத்துகளும் சொல்லின் இறுதியில் வரும்.

3. க் ச் ட் த் ப் ற் என்ற வல்லின மெய் ஆறும், ங் எனும் மெல்லின மெய் ஒன்றும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.

4. பழைய இலக்கண நூலார் மொழி இறுதிக் குற்றியலுகர எழுத்தையும் சேர்த்துக்கொள்வர்.

ஞ் ந் வ் மூன்றும் பழைய இலக்கிய வழக்கில் சொல்லின் இறுதி எழுத்தாக வந்துள்ளன. ஆயினும், இன்றைய வழக்கில் இவை சொல்லுக்கு இறுதி எழுத்தாக வருவதில்லை.

மொழி இறுதி எழுத்துகள்

உயிரெழுத்து 12

மெய்யெழுத்து 11

குற்றியலுகரம்1

மொத்தம் 24


புணர்ச்சி

நாம் பேசும்போது சில சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி ஒருசொல் போலவே பேசுகிறோம். எழுதும்போதும் அவ்வாறே எழுதுகிறோம். தமிழரசி, நாட்டுப்பண் ஆகிய இச்சொற்கள் ஒருசொல் வடிவம் உடையன. ஆயினும், இவை இரண்டு சொற்களின் சேர்க்கையாக உள்ளன.

தமிழ் + அரசி - தமிழரசி

நாடு + பண் - நாட்டுப்பண்

இவற்றில் முதலில் நிற்கும் சொல்லை 'நிலைமொழி' என்றும் அதனொடு வந்து சேரும் சொல்லை 'வருமொழி' என்றும் அழைப்பர். இவ்வாறு நிலைமொழியும் வருமொழியும் இணைவதைப்புணர்ச்சி என்பர். நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் புணர்ச்சிக்கு உரியன ஆகும்.

உயிரீறு, மெய்யீறு

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் இறுதியில் நிற்கும் வடிவம் உயிர் என்பதால் அது 'உயிரீறு' எனப்படும். நிலைமொழியின் இறுதி எழுத்து மெய்யாக இருந்தால் அது "மெய்யீறு' எனப்படும்.

மணி (ண் + ) + மாலை = மணிமாலை - உயிரீறு; பொன் + வண்டு = பொன்வண்டு - மெய்யீறு

உயிர்முதல், மெய்ம்முதல்

வருமொழியின் முதலெழுத்து உயிரெழுத்தாக இருந்தால் அது 'உயிர்முதல்' எனப்படும். வருமொழியின் முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது 'மெய்ம்முதல்' எனப்படும்.

வாழை + இலை = வாழையிலை - உயிர்முதல்; தமிழ் + நிலம் (ந்+) = தமிழ்நிலம் - மெய்ம்முதல்

எழுத்துகளின் அடிப்படையில் புணர்ச்சி

சொற்புணர்ச்சியில் நிலைமொழி இறுதி எண் எழுத்தாகவும் வருமொழி முதலெழுத்தாகவும் எழுத்துகள் சந்திக்கும் முறையை நான்கு விதமாகப் பிரிக்கலாம்.


சொற்களின் அடிப்படையில் புணர்ச்சி

இலக்கண வகையால் சொற்கள் நான்கு வகைப்படும். இவற்றுள் இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரையும் வினையையும் சார்ந்தே வருகின்றன. இவ்விரு சொற்களும் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் வந்தாலும் அவற்றின் புணர்ச்சி, எழுத்துகளின் புணர்ச்சியே ஆகும்.


புணர்ச்சி என்பது எழுத்துகளின் சந்திப்பாகவும் சொற்களின் சந்திப்பாகவும் அமைகிறது. எனவே, எழுத்துகளும் சொற்களும், ஒவிக்கூறுகளாகவும் பொருள் கூறுகளாகவும் சந்திக்கும் நிகழ்வே புணர்ச்சி ஆகும்.

குற்றியலுகர ஈறு

சார்பெழுத்துகளுள் ஆய்தம் சொல்லின் முதலிலோ இறுதியிலோ வராது. குற்றியலுகரமும் (நுந்தை தவிர) குற்றியலிகரமும் இக்காலத்தில் சொல்லின் முதலில் வாரா. ஆயினும், குற்றியலுகரத்தின் ஆறு வகைகளும் சொல்லின் இறுதியில் வருகின்றன. குற்றியலுகர ஈற்றுடன் வரும் நிலைமொழி, குற்றியலுகர ஈறு அல்லது குற்றியலுகர நிலைமொழி எனப்படும்.


என் சொல்லுக்கு என்ன மரியாதை எனத் தர்க்கம் பேசுவது இருக்கட்டும் எங்கு இருந்தாலும் நம் மொழிக்கு முதல் இடம் ஏற்படுத்தச் சந்தியுங்கள் இறுதியில் தாய்மொழியை வளப்படுத்தும் தனிவழியைச் சிந்தியுங்கள்.

Tags : Chapter 1 | 11th Tamil இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ்.
11th Tamil : Chapter 1 : Ennuyir enbean : Grammar: Mozhi mudhal irudhi eluthukkal Chapter 1 | 11th Tamil in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன் : இலக்கணம்: மொழி முதல், இறுதி எழுத்துகள் - இயல் 1 | 11 ஆம் வகுப்பு தமிழ் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 ஆம் வகுப்பு தமிழ் : இயல் 1 : என்னுயிர் என்பேன்