புள்ளியியலின் இயல்புகள்
புள்ளியியலில் அறிவியல், கலையியல் ஆகிய இரண்டின் தன்மைகளும் கலந்திருக்கின்றன. முறைப்படுத்தப்பட்ட அறிவின் தொகுப்பினை அறிவியலாக காண்கின்றோம். அதே வகையில் புள்ளியியல் என்பது ஒரு முறைப்படுத்தப்பட்ட தொகுப்பாகும். இது விவரங்களை பகுத்தாய்ந்து, அதன் அடிப்படையில் கோட்பாடுகளை உருவாக்கவம், உருவாக்கப்பட்ட கோட்பாடுகளை சோதனை செய்து துல்லியமான முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது. எனவே, புள்ளியியல் ஒரு அறிவியலாக பார்க்கப்படுகிறது. புள்ளி விவரங்களை கடந்து தனது பட்டறிவின் அடிப்படையிலும் எடுக்கப்பட்ட முடிவுகள் பார்க்கப்படுகின்றன. மேலும், விவரங்களை திரட்டுவது, அட்டவணையிடுவது, முடிவுகளை எடுப்பது, தீர்மானங்களை செய்வது என பல புள்ளிவிவர நடவடிக்கைகளில் கலையியலின் உட்கூறுகள் கலந்துள்ளன. இந்த அடிப்படையில் பார்த்தால் இது ஒரு கலையிலாகவும் விளங்குகிறது.