Home | 6 ஆம் வகுப்பு | 6வது தமிழ் | கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன்

முடியரசன் | பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் - கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன் | 6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai

   Posted On :  30.06.2023 08:50 am

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்

கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன்

6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன் - முடியரசன் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

இயல் மூன்று

கவிதைப்பேழை

நானிலம் படைத்தவன்

 

நுழையும்முன்

காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான். பயிர்களை விளைவித்தான். ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான். பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான். தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின. தமிழரின் வணிக மேன்மையை அறிவோம் வாருங்கள்.


கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற

பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான்,

மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்

நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன்,

ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்

சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்

முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்

எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற்,

பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்

கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான்,

அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்

அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்

- முடியரசன்

 

சொல்லும் பொருளும்

மல்வெடுத்த - வலிமைபெற்ற

சமர்போர்

நல்கும் - தரும்

கழனி - வயல்

மறம் - வீரம்

எக்களிப்பு - பெருமகிழ்ச்சி

கலம் - கப்பல்

ஆழிகடல்

பாடலின் பொருள்

தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான். தனது உடல் வலிமையால் வனத்தைப் பெருக்கினான். ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான். முல்லை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன்.

பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான். அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான். பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான். ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான். ஏலம், மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான். கப்பலில் உலகை வலம் வந்தான். அவன் எதற்கும் அஞ்சாதவன். ஆனால், சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன்.

நூல் வெளி


முடியரசனின் இயற்பெயர் துரைராசு. பூங்கொடி, வீரகாவியம், காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார். திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர்.

இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Tags : by Mudiyarasan | Term 2 Chapter 3 | 6th Tamil முடியரசன் | பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ்.
6th Tamil : Term 2 Chapter 3 : Kudi tholil sai : Poem: Naneelam padaithavan by Mudiyarasan | Term 2 Chapter 3 | 6th Tamil in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய் : கவிதைப்பேழை: நானிலம் படைத்தவன் - முடியரசன் | பருவம் 2 இயல் 3 | 6 ஆம் வகுப்பு தமிழ் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 3 : கூடித் தொழில் செய்