நேர்க்கோட்டு
உந்த அழிவின்மை விதி
புற விசை ஏதும்
தாக்காத வரையில் ஒரு பொருள் அல்லது ஓர் அமைப்பின் மீது செயல்படும் மொத்த
நேர்க்கோட்டு உந்தம் மாறாமல் இருக்கும்.
நேர்க்கோட்டு உந்த அழிவின்மை
விதியினை கீழ் கண்ட ஒரு எடுத்துக்காட்டின் மூலம் நிரூபிக்கலாம்:
A மற்றும் B என்ற இருபொருட்களின் நிறைகள் முறையே m1 மற்றும்
m2 என்க. அவை நேர்க்கோட்டில் பயணிப்பதாக
கொள்வோம். u1 மற்றும் u2 என்பவை அவற்றின் ஆரம்ப திசை வேகங்களாக கொள்வோம். பொருள் A னது, B ஐ விட அதிக திசைவேகத்தில் செல்வதாக
கருதுவோம். (u1 > u2) ‘t’ என்ற கால
இடைவெளியில் பொருள் A னது, B மீது
மோதலை ஏற்படுத்துகிறது.
மோதலுக்குப் பிறகு அப்பொருள்கள் அதே
நேர்க்கோட்டில் v1,
மற்றும் v2, திசைவேகத்தில்
பயணிப்பதாக கொள்வோம்.
நியூட்டனின் இரண்டாம் விதிப்படி
Bயின் மீது A செயல்படுத்தும் விசை FA = m2 (v2-u2)/t
அதேபோல் A யின் மீது B
செயல்படுத்தும் விசை FB = m1 (v1-u1)/t
நியூட்டனின் மூன்றாம் விதிப்படி Aன் மீது செயல்படும்
விசையானது நன் மீது செயல்படும் எதிர்விசைக்கு சமம்
விசை = எதிர்விசை
FB = – FA
m1 (v1-u1)/t
= m2 (v2-u2)/t
m1v1 + m2v2
= m1u1 + m2u2 .................. (1.9)
மேற்காண் சமன்பாடு, இந்நிகழ்வில்
வெளிவிசையின் தாக்கம் எதும் இல்லாத போது, மோதலுக்கு பின்
உள்ள மொத்த உந்த மதிப்பு, மோதலுக்கு முன் உள்ள மொத்த உந்த
மதிப்பிற்கு சமம் என்பதை காட்டுகிறது. இது பொருளின் மீது செயல்படும் மொத்த உந்தம்
ஒரு மாறிலி என்ற நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதியினை நிரூபிக்கிறது.