வரலாறு - கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டில் மதம் | 9th Social Science : History : Intellectual Awakening and Socio-Political Changes
கி.மு. (பொ.ஆ.மு). ஆறாம் நூற்றாண்டில் மதம்
புதிய இரும்புக் காலத்தில் உருவான புதிய நாகரிகங்களுக்கெனச் சில குறிப்பிட்ட பொதுக் கூறுகள் காணப்படுகின்றன. புதியகைத்தொழில்கள், தொலைதூர வர்த்தகத்தின் வளர்ச்சி, சிறுநகரங்களும் நகரங்களும் உருவாகுதல், உலகளாவிய மதங்களின் தோற்றம், நன்னடத்தை விதிகள் உருவாகுதல் ஆகியன இவற்றின் பொதுக் குணங்களாகும். எனவே, பொருளாதார, பண்பாட்டு, அறிவுசார் நோக்கில் தனிச்சிறப்பான வளர்ச்சி பெற்ற காலகட்டமாக கி.மு. (பொ.ஆ.மு). 6ஆம் நூற்றாண்டு திகழ்ந்தது. இக்காலத்தில்தான் ஏராளமான அறிஞர்கள், சிந்தனையாளர்கள், புதிய மதங்களைத் தோற்றுவித்து அக்காலகட்டத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாய் ஆக்கினார்கள். சீனாவின் கன்பூசியஸ், ஈரானின் ஜெராஸ்டர், இந்தியாவின் மகாவீரர், புத்தர் ஆகியோர் இக்காலகட்டத்தில் புகழ் பெற்றனர்.