இந்திய வரலாறு - பாடச் சுருக்கம் - ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள் | 11th History : Chapter 17 : Effects of British Rule
பாடச் சுருக்கம்
• ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி பொறுப்புகளை விடுத்து அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுகளை விளக்குதல்
• வாரிசு உரிமை இழப்புக்கொள்கை, துணைப்படைத் திட்டம் ஆகியன மூலம் இந்தியப் பகுதிகளை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கொண்டு வருதல்
• வங்காளத்தில் நிலையான நிலவரி திட்டம் மற்றும் சென்னை மாகாணத்தில் இரயத்துவாரி முறை செயல்பட்டதை விளக்குதல்
• மக்களின் வாழ்க்கையில் பொது மற்றும் நீதி நிர்வாகச் சீர்திருத்தங்களால் ஏற்பட்ட மாற்றங்களை விளக்குதல்
• கவர்னர் - ஜெனரல்களின் வளர்ச்சிப் பணிகள், சமூக, பண்பாட்டு மற்றும் கல்விச் சீர்திருத்தங்களை விளக்குதல்
• இருப்புப்பாதை தபால் தந்தி ஆகியவை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு மக்களை கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறு உதவின என்பதை விளக்குதல்
• இங்கிலாந்துக்கு இந்தியாவின் செல்வ வளங்கள் கொள்ளை போனதை தாதாபாய் நௌரோஜியின் செல்வச் சுரண்டல் கோட்பாடு விளக்கியது.
• கிழக்கிந்திய கம்பெனியின் சுரண்டல் கொள்கைகள் கடும் பஞ்சங்களுக்கு இட்டுச் சென்று விவசாயிகளையும், கைவினைஞர்களையும் நாட்டை விட்டு வெளியேறி ஆங்கிலேயப் பேரரசின் இதர காலனிகளில் ஒப்பந்தக் கூலிகளாக பணி சேர நிர்பந்தித்தன.