வரலாறு - மீள்பார்வை - தொடக்ககாலத் தமிழ்ச் சமூகமும் பண்பாடும் | 9th Social Science : History : Early Tamil Society and Culture
மீள்பார்வை
● வேளாண்மை உற்பத்தி,
திணைகளுக்கிடையே மக்கள் கொண்ட சமூக உறவு,
கடல்கடந்த வணிகம் போன்றனவற்றால் நகரவாழ்க்கை மலர்ந்தது. பண்பாடு செழித்தது. இலக்கியங்கள் தோன்றின.
● தமிழ்ச் சங்கம் வழியாக இலக்கியங்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டன.
● தொல்காப்பியம் விவரித்துள்ள திணைமுறை தமிழகத்திற்கே உரிய வாழ்வுமுறையாகும்.
● பழங்குடி மக்கள் வாழ்வுமுறையிலிருந்து மன்னர் ஆட்சிக்கு சமூகம் மாறத் தொடங்கியது சங்க காலத்தில்தான்.
● இந்தியப் பெருங்கடற் பகுதிகளில் கடல்வழி வணிகம் வளர்ந்தது.
● செங்கற் கட்டுமானங்களைக் கொண்ட பெரிய நகரங்கள் தமிழ்நாட்டில் தோன்றின
● சமூக அமைப்பு பலவாறாக வேறுபட்டிருந்தது.
காலக்கோடு
ஏறத்தாழ கி.மு.
(கி.மு. (பொ.ஆ.மு.) 1300 - கி.மு.
(பொ.ஆ.மு.) 300 வரை
- இரும்புக்காலம்/பெருங்கற்காலம்
ஏறத்தாழ கி.மு.
(பொ.ஆ.மு.) 300 - பொ.ஆ. 300 வரை. இதற்கு முன்னரும் தொடங்கியிருக்கலாம் -
பண்டைய வரலாற்றுக் காலம்/சங்க காலம்
ஏறத்தாழ கி.மு.
(பொ.ஆ.மு.) 300 – பொ.ஆ. 300 வரை. - சங்க இலக்கியங்கள்
ஏறத்தாழ கி.மு.
(பொ.ஆ.மு.) 400 - கி.மு.
(பொ.ஆ.மு.) 300 வரை - தமிழ்-பிராமி எழுத்து முறையின் அறிமுகம்
பொ.ஆ. முதல் நூற்றாண்டு -
எரித்திரியன் கடலின் பெரிப்ளஸ்
பொ.ஆ. முதல் நூற்றாண்டு - பிளினியின் இயற்கை வரலாறு
பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு -
தாலமியின் புவியியல்
பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டு –
வியன்னா பாப்பிரஸ்
ஏறத்தாழ பொ.ஆ.300 - பொ.ஆ. 500 வரை - சங்கம் மருவிய காலம்