தாவரங்களில் பாலினப்பெருக்கம் - பல்கருநிலை | 12th Botany : Chapter 1 : Asexual and Sexual Reproduction in Plants
பல்கருநிலை (Polyembryony)
ஒரு விதையில் ஒன்றுக்கு மேற்பட்ட கரு காணப்பட்டால்
அது பல்கருநிலை என்று அழைக்கப்படும் (படம் 1.24). 1719-ஆம் ஆண்டு ஆண்டன் ஃபான் லியூவன்ஹாக்
சில ஆரஞ்சுத் தாவரங்களில் பல்கருநிலை பற்றிய முதல் தகவலைப் பதிவு செய்தார். பல்கருநிலை
அதன் தோற்றத்தின் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அ) பிளவு
பல்கரு நிலை (எடுத்துக்காட்டு: ஆர்கிட்கள்)
ஆ) கருப்பை
முட்டை தவிர மற்ற செல்களிலிருந்து தோன்றும் கரு (சினர்ஜிட்கள்
- அரிஸ்டோலோக்கியா, எதிரடிச் செல்கள் - அல்மஸ், கருவூண்திசு - பலனோபோரா)
இ) ஒரே
சூலிற்குள் ஒன்றிற்கு மேற்பட்ட கருப்பைகள் வளர்ச்சியடைதல். (ஒரேயொரு
பெருவித்து தாய் செல்லிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்கள் அல்லது இரண்டு அல்லது அதற்கு
மேற்பட்ட பெருவித்து தாய் செல்லிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்கள் - கேசுரைனா)
ஈ) சூலிலுள்ள
சில வித்தகத் தாவரச் செல்களின் செயல்பாடுகள் தூண்டப்படுதல் (சூல்திசு
/சூலுறைகள் - சிட்ரஸ், சைஸிஜியம்)
சிட்ரஸ் தாவரத்தில் சூல்திசுவிலிருந்து பெறப்படும்
நாற்றுக்கள் பழப்பண்ணைக்கு நல்ல நகல்களாக உள்ளன. பல்கருநிலையின் வழியாக தோன்றும் கருக்கள்
வைரஸ் தொற்று இல்லாமல் காணப்படுகின்றன.