மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO

   Posted On :  26.08.2023 08:49 am

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்

வினா விடை

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ------------ மனித உரிமைகளைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அ) ஐ.நா. சபை

ஆ) உச்ச நீதிமன்றம்

இ) சர்வதேச நீதிமன்றம்

ஈ) இவைகளில் எதுவுமில்லை

[விடை: அ) ஐ.நா. சபை]

 

2. 1995ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் இருந்து பெண்கள் ----------- இல் கூடினர்.

அ) பெய்ஜிங்

ஆ) நியூயார்க்

இ) டெல்லி

ஈ) எதுவுமில்லை

[விடை: அ) பெய்ஜிங்]

 

3. தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு

அ) 1990

ஆ) 1993

இ) 1978

ஈ) 1979

[விடை: ஆ) 1993]

 

4. ஐ.நா. சபை 1979ஆம் ஆண்டை --------------- சர்வதேச ஆண்டாக அறிவித்தது.

அ) பெண்குழந்தைகள்

ஆ) குழந்தைகள்

இ) பெண்கள்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

 [விடை: ஆ) குழந்தைகள்]

 

5. உலக மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படும் நாள் எது?

அ) டிசம்பர் 9

ஆ) டிசம்பர் 10

இ) டிசம்பர் 11

ஈ) டிசம்பர் 12

[விடை: ஆ) டிசம்பர் 10]

 

6. மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாசனம் என அழைக்கப்படுவது எது?

அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)

ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC)

இ) மாநில மனித உரிமைகள் ஆணையம் (SHRC)

ஈ) சர்வதேசப் பெண்கள் ஆண்டு

[விடை: அ) மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பு (UDHRC)]

 

7. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுபவர் யார்?

அ) ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி

ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

இ) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஏதேனும் ஒருவர்

ஈ) ஏதேனும் ஒரு நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி

[விடை: ஆ) ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி]

 

8. உலக மனித உரிமைகள் அறிவிப்பில் உள்ள சட்டப்பிரிவுகளின் எண்ணிக்கை யாவை?

அ) 20

ஆ) 30

இ) 40

ஈ) 50

[விடை: ஆ) 30]

 

9. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் பதவிக் காலம் என்ன?

அ) 5 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை

ஆ) 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

இ) 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை

[விடை: ஈ) 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை]

 

10. தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?

அ) புது டெல்லி

ஆ) மும்பை

இ) அகமதாபாத்

ஈ) கொல்கத்தா

[விடை: அ) புது டெல்லி]

 

|| கோடிட்ட இடங்களை நிரப்புக


1. ஒவ்வொருதனிமனிதனும் கண்ணியமான வாழ்க்கை வாழ உரிமை உண்டு.

2. மனித உரிமைகள் என்பது இயல்பான அடிப்படை உரிமைகள்.

3. மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு 1997

4. இந்திய அரசியலமைப்பின் 24 வது சட்டப்பிரிவு குழந்தைத் தொழிலாளர் முறை ஐ தடை செய்கிறது.

5. ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட ஆண்டு 1945

 

II பொருத்துக


1 எலினார் ரூஸ்வெல்ட் உலகின் முதல்  மனித உரிமைகள் சாசனம்

2 சைரஸ் சிலிண்டர் - 1997

3 பெண்களை கேலி செய்வதற்கு எதிரான சட்டம் - அடிமைத் தனத்திலிருந்து விடுதலை

4 குழந்தை உதவி மைய எண் - மனித  உரிமைகளுக்கான ஆணையம்

5 வாழ்வியல் உரிமைகள் - வாக்களிக்கும் உரிமை

6 அரசியல் உரிமை - 1098

 

IV சரியா / தவறா எனக் குறிப்பிடுக

 

1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகள் ஒரே மாதிரியானவை. விடை: தவறு

2. மனித மற்றும் குடிமகனின் உரிமைகள் அறிவிப்பு இந்தியாவில் அறிவிக்கப்பட்டது. விடை: தவறு

3. 1993ஆம் ஆண்டு மனித உரிமைச் சட்டம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக வழிவகுத்தது. விடை: சரி

4. பாதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது. விடை: தவறு

5. மனித உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தேசிய, மாநில அளவிலான மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. விடை: சரி

 

 

V சரியான கூற்றைத் தேர்ந்தெடு

1. தவறான கூற்றை கண்டறியவும்

அ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டரீதியான அமைப்பாகும்.

ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

இ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பாகும்.

ஈ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு பலதரப்பு நிறுவனங்களைக் கொண்டதாகும்.

விடை: ஆ) தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஓர் அரசியலமைப்பு சார்ந்த அமைப்பாகும்

 

2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து பின்வரும் எந்த கூற்று சரியானது அல்ல.

அ) இது 1993 இல் நிறுவப்பட்டது.

ஆ) மனித உரிமை மீறல் வழக்குகளில் குற்றவாளியைத் தண்டிக்க ஆணையத்திற்கு எந்த உரிமையும் இல்லை.

இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்.

ஈ) இந்த ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு அனுப்புகிறது.

விடை: இ) இந்த ஆணையத்தின் தலைவரும் உறுப்பினர்களும் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படுகிறார்கள்

 

3. கூற்று: டிசம்பர் 10ஆம் நாள் மனித உரிமைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காரணம்: இது எலினார் ரூஸ்வெல்டின் பிறந்த நாளை நினைவு கூர்கிறது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று காரணம் இரண்டும் சரி

ஈ) கூற்று காரணம் இரண்டும் தவறு

விடை: அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

 

4. பின்வரும் கூற்றை ஆராய்க

1) மாநில மனித உரிமைகள் ஆணையம் பல உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ஆகும்.

2) மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாகும்

மேற்கூறிய கூற்றுகளில் எது / எவை சரியானது சரியானவை?

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1, 2

ஈ) எதுவுமில்லை

விடை: அ) 1 மட்டும்

 

VI கீழ்க்காணும் வினாக்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் விடையளி

 

1. மனித உரிமைகள் என்றால் என்ன?

மனித உரிமைகள் என்பது இனம், பாலினம், தேசிய இனம், இனக் குழுக்களின் தன்மை, மொழி மற்றம் சமய வேறுபாடின்றி அனைத்து மனிதர்களுக்குமான இயல்பான உரிமைகள் ஆகும்.

 

2. மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்துவத்தை எழுதுக.

மனித உரிமைகளுக்கான உலகளாவிய அறிவிப்பின் (UDHR) முக்கியத்தும்:

> உலக மனித உரிமைகள் அறிவிப்பு ஐ.நா பொதுச்சபையால் 1948ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

> இந்த அறிவிப்பு பாரிஸ் நகரில் (பிரான்ஸ்) 1948ம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. (பொதுச்சபை தீர்மானம் 217 A)

> இதன் கொள்கைகள் 185க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது உலக மனித உரிமைகள் அறிவிப்பு 500க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.


3. இந்திய அரசியலமைப்பின் 45 வது சட்டப்பிரிவு எதனை அறிவுறுத்துகிறது?

இந்திய அரசியலமைப்பின் 45வது சட்டப்பிரிவு:

பிரிவு 45 ஆறு (6) வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வியை வழங்க அரசு முயல்கிறது

 

4. கல்வி உரிமைச் சட்டம் பற்றி எழுதுக.

கல்வி உரிமைச் சட்டம்: சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

 

5. பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மூன்று சட்டங்களைக் குறிப்பிடுக.

பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்:

> இந்து விதவை மறுமணச் சட்டம் 1856  (விதவைகள் மறுமணத்தை சட்ட பூர்வமாக்கியது)  

> வரதட்சணைத் தடைச் சட்டம் 1961 (வரதட்சணை என்ற பெயரில் மோசமாக நடத்துவதற்கு கடுமையான தண்டனை வழங்குகிறது.

> வன்கொடுமை தடுப்பு சட்டம் 2005 (கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் பெண்கள் துன்புறுத்தப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது)

 

6. அரசியல் உரிமைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

> கருத்துச் சுதந்திரம்

> அமைதியாக கூட்டம் நடத்துதல்

> தன் நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொள்ளும் உரிமை

> வாக்களிக்கும் உரிமை

> பேச்சுரிமை

> தகவல்களைப் பெறும் உரிமை

 

7. மனித உரிமைகளின் ஐந்து முதன்மைப் பிரிவுகளை குறிப்பிடுக.

மனித உரிமைகளின் முதன்மைப் பிரிவுகள்:

1. வாழ்வியல் உரிமைகள்

2. அரசியல் உரிமைகள்

3. சமூக உரிமைகள்

4. பொருளாதார உரிமைகள்

5. கலாச்சார உரிமைகள்

 

VII விரிவான விடையளி


1. மனித உரிமைகள் மற்றும் வாழ்வியல் உரிமைகளை வேறுபடுத்துக.



2. மனித உரிமைகளின் ஏதேனும் ஐந்து அடிப்படைப் பண்புகளை விவரி.

மனித உரிமைகளின் அடிப்படைப்பண்புகள்:

> இயல்பானவை: மனித உரிமை எந்த ஒரு நபராலும் அதிகாரத்தாலும் வழங்கப்படுவதில்லை.

> அடிப்படையானவை: மனிதனின் வாழ்க்கையும் கண்ணியமும் இந்த அடிப்படை உரிமைகள் இல்லையென்றால் அர்த்தமற்றதாகிவிடும்.

> மாற்றமுடியாதவை: மனித உரிமைகள் தனிநபரிடம் இருந்து பறிக்கமுடியாதவை

> பிரிக்க முடியாதவை: பிற உரிமைகளை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டிருந்தாலும் இந்த அடிப்படை மனித உரிமைகளை மறுக்க முடியாது.

> உலகளாவியவை: ஒருவரின் தோற்றம் (அல்லது) நிலையைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இந்த உரிமைகள் பொருந்தும். தேசிய எல்லையைத் தாண்டி அனைத்து நாடுகளிலும் இந்த உரிமைகள் அமல்படுத்தப்படுகின்றன.

> சார்புடையவை: ஒரு உரிமையைப் பயன்படுத்தும் போது மற்றொன்றை உணராமல் இருக்க முடியாது. இவை ஒன்றுக்கொன்று சார்புடையவை

 

3. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு மேற்கொண்டுள்ள சில நடவடிக்கைகள் யாவை?

குழந்தைகள் பாதுகாப்புக்காக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள்:

இந்தியாவில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

> கல்வி உரிமைச் சட்டம்: சட்டப்பிரிவு 21A அரசாங்கம் 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு வழிவகை செய்கிறது.

> குழந்தைத் தொழிலாளர் சட்டம் (தடை மற்றும் சீரமைப்புச் சட்டம் 1986)

15 வயது பூர்த்தியடையாத எந்த ஒரு குழந்தையையும் வேலைக்கு அமர்த்த தடை செய்கிறது.

> சிறார் நீதிச் சட்டம் 2000 (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்)

பொதுவான கவனிப்பு இல்லாமல் இருக்கும் குழந்தைகளை நட்பு ரீதியில் அணுகி அவர்களை சீர்திருத்த முயற்சி மேற்கொள்கிறது.

> போக்சோ (POSCO) சட்டம் 2012

பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம். குழந்தைகளின் நலனே மிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டிய அம்சம் எனக் கருதுகிறது.

 

VIII உயர் சிந்தனை வினா

 

1. உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு யாருக்கு பொருந்தும் ? இது உங்களுக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது?

உலகளாவிய மனித உரிமைகள் அறிவிப்பு அனைவருக்கும் பொருந்தும். குற்றவாளிகள், நாட்டுத் தலைவர்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், ஆப்பிரிக்கர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள், அகதிகள், நாடற்றோர், வேலையற்றோர், வேலையிலுள்ளோர், வங்கியாளர்கள், தீவிரவாதிகள், ஆசிரியர்கள், நடனக்கலைஞர்கள் விண்வெளிவீரர்கள்.....

 

 

IX. செயல்திட்டம் மற்றும் செயல்பாடு


1. நீங்கள் அனுபவிக்கும் பத்து உரிமைகள் மற்றும் உங்களுக்கான பொறுப்புகளைப் பட்டியலிடுக.

நான் அனுபவிக்கும் உரிமைகள்:

> வாழ்வுக்கான உரிமை

> கல்விக்கான உரிமை

> தனிநபர் சுதந்திர உரிமை

> சமயச் சுதந்திர உரிமை

> கருத்துச் சுதந்திர உரிமை

> இயங்குவதற்கான உரிமை

> சமத்துவ உரிமை

> நீதிபெறும் உரிமை

> கழக அமைப்புகள் நிறுவுவதற்கான உரிமை

> காலச்சார சுதந்திர உரிமை

எனக்கான பொறுப்புகள்:

> அரசியலமைப்பை ஆதரிக்க, பாதுகாக்க வேண்டிய கடமை.

> ஜனநாயக முறைகளில் பங்கேற்றல்

> மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்ப்படிதல்

> மற்றவர்களின் உரிமைகள், நம்பிக்கைகள், கருத்துக்களை மதித்தல்.

> தல சமூகத்தில் பங்கேற்றல்

> மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புக்களுக்கான வருமானவரி மற்றும் பிறவரிகளை நேர்மையுடன் குறிப்பிட்ட காலவரையரையில் செலுத்துதல்.

> தேவை ஏற்பட்டால் நாட்டைப் பாதுகாத்தல்

> சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சனைகளை அறிந்து கொள்ளுதல்.

Tags : Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல்.
8th Social Science : Civics : Chapter 4 : Human Rights and UNO : Questions with Answers Human Rights and UNO | Chapter 4 | Civics | 8th Social Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் : வினா விடை - மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும் | அலகு 4 | குடிமையியல் | எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : அலகு 4 : மனித உரிமைகளும் ஐக்கிய நாடுகள் சபையும்