தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள் | புவியியல் | சமூக அறிவியல் - கீழ்க்கண்டவற்றிக்கு காரணம் கூறுக. | 10th Social Science : Geography : Chapter 7 : Physical Geography of Tamil Nadu
VII. கீழ்க்கண்டவற்றிக்கு
காரணம் கூறுக.
1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.
• இம்மலையானது பல இடங்களில் வங்காள கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. மற்றும் பீடபூமிகள் சமவெளியிலிருந்து பிரிக்கின்றன.
• ஆதலால் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போலன்றி ஒரு தொடர்ச்சியற்ற குன்றுகளாக
காட்சியளிக்கின்றது.
2. தென்மேற்குப் பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த
மழையைப் பெறுகிறது.
• தென் மேற்குப் பருவக்காற்று காலத்தில் அரபிக்கடலிலிருந்து வீசும்
தென் மேற்கு பருவக்காற்றின் மழை மறைவுப் பிரதேசத்தில் தமிழ்நாடு அமைந்துள்ளதால் மிகக் குறைவான மழைப்பொழிவை
பெறுகின்றது.
• இப்பருவ காலத்தில் மழைப்பதிவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி குறைகிறது.
3. கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.
• வடகிழக்கு பருவக்காற்று காலங்களில் வங்கக்கடலில் உருவாகும் வெப்பமண்டல
சூறாவளிகள் தமிழக கடற்கரையை தாக்குகின்றன.
• அவ்வாறு தாக்கும் போது கடலூர் மாவட்டம் அதிகமாக பாதிக்கப்படுகின்றது.
• அடிக்கடி புயல் தாக்குவதால் மரங்கள், கட்டிடங்கள், மின்கம்பங்கள் சேதம்
மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.
• வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாயம், கட்டிடங்கள், சாலைகள் சேதம் அடைகின்றன.
• அதனால் கடலூர் பல்வழி பேரழிவு மண்டலமாக காணப்படுகிறது.