மழை நீர்
சேகரிப்பு
எதிர்காலப் பயன்பாட்டிற்காக
மழை பொழியும் போது மழை நீர் சேகரிக்கப்பட்டு, சேமிக்கப்படுவதே மழை நீர் சேமிப்பு எனப்படும்.
நிலத்தடி நீர் சேமிப்புத் தொட்டிகள், குளங்கள், ஏரிகள், மற்றும் தடுப்பணைகள் மூலம் மழை நீர்
சேகரிக்கப்படுகிறது.
மழை நீரை சேமிப்பதற்கான மிக
முக்கிய நோக்கம்,
மழை நீர் நிலத்திற்குள் கசிந்து, நிலத்தடி
நீர் மட்டத்தை உயர்த்துவதாகும்.
(i) மேற்
கூரைகளில் விழும் மழை நீரைச் சேமித்தல்: மழை நீரை மிகச் சிறப்பான
முறையில் மேற் கூரைகளிலிருந்து சேமிக்கலாம். வீட்டின் மேற்கூரை, அடுக்கு
மாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், கோயில்கள்
ஆகியவற்றில் பெய்யும் மழைநீரை, தொட்டிகளில் சேகரித்து,
வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.
(ii) கசிவு நீர்க் குழிகள்: இம்முறையில், மேற்கூரை மற்றும் திறந்த வெளிகளிலிருந்து
பெறப்படும் மழைநீர் வடிகட்டும் தொட்டிகளுக்கு குழாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்படும் நீர், கசிவு நீர் குழிகள் மூலம்
மண்ணுக்குள் ஊடுருவி, நிலத்தடி நீராக சேகரிக்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் மக்கள், பல்வேறு
வகைகளில் மழைநீரை சேமிக்கிறார்கள். அவற்றுள் சில,
1. ஏரிகள்
அமைத்தல்: இது தமிழ் நாட்டிலுள்ள மிகப்பழமையான மழை நீர் சேகரிப்பு
முறையாகும். ஒரு ஏரியில் மழைநீர் சேகரித்தப்பின், அதில் உள்ள உபரி நீர் அருகிலுள்ள
மற்றொரு கிராமத்திலுள்ள ஏரியை சென்றடைந்து சேமிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
2. ஊரணிகள்: ஒவ்வொரு கிராமப் புறத்திலும்
சிறிய அளவிலான மழை நீரைச் சேமிக்கும் விதமாக "ஊரணிகள்" அமைந்துள்ளன. அவை
கிராமங்களில் உள்ள மக்கள் பயன் படுத்தும் வகையில், குளிக்க, குடிக்க,
துணி துவைக்க உதவுகின்றன. இவை அருகிலுள்ள கிராமங்களுக்கும்
பயன்படுகின்றன.
மேலும் அறிந்து கொள்வோம்
2ம் நூற்றாண்டில் (பொ.ஆ.) சோழ வம்சத்தைச் சேர்ந்த கரிகால் சோழ மன்னரால்
கட்டப்பட்ட கல்லணையானது மிகவும் பழமையானது. இது உலகின் நான்காவது பழமையான
அணையாகும். இந்த அணை இன்றும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது. இவ்வணை
திருச்சிராப்பள்ளி நகருக்கு 20 கி.மீ. அருகில், காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
(i) மழைநீர்
சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
(ii) பெருகிவரும்
நீர்த் தேவைகளை சமாளிக்கப் பயன்படுகிறது.
(iii) பெரு
வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
(iv) நிலத்தடியில்
சேகரிக்கப்படும் நீர் மனித மற்றும் விலங்கு கழிவுகளால் மாசடைவதில்லை. எனவே இதனை
குடிநீராகப் பயன்படுத்த முடியும்.